http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ரங்கோன் ராதா

2

     "ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையைக் கூறுவாயா? ஏன் நாகசுந்தரம்! அதுதானே உன் கட்சி?" என்று நான் கேட்டேன். "ஆமாம். இன்னும் ஒரு நிபந்தனை" என்று நாகசுந்தரம் சொன்னான். "கதையை யாரிடமும் சொல்லக்கூடாது" என்றான். "மேலும் மேலும் விந்தையாக இருக்கிறது" என்றேன் நான். "விசித்திரம்! விந்தை! விபரீதம் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லு. எனக்குக் கவலை எல்லாம் ராதா சுகப்பட வேண்டும்; என் தங்கையைக் கண்ணியம் தெரிந்த காதலனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்" என்றான். "என்னடா நாகு! திடீரென்று இப்படி ஒரு இலட்சியவாதி போல, ஆவேசம் கொண்டவன் போலாகி விட்டாய். இவ்வளவு இலட்சியம் பேசும் உன்னையே கேட்கிறேன், விளையாட்டுக்கல்ல, உண்மையாகவே! ஒரு பெண்ணைப் பற்றிய கதையைத் தெரிந்து கொள்வதற்காக, அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக முன்கூட்டியே வாக்களிப்பது எந்த இலட்சியத்துக்கு உகந்தது! கேட்டால் கூட சிரிப்பார்கள்!" என்றேன். நாகசுந்தரம் என் தோள்மீது கை வைத்துக் கொண்டு, துயரத்துடன் சொன்னான். "உன்னைத் தவிர வேறு யாரிடம் பரந்தாமா நான் உண்மையைச் சொல்வேன். நீ ஊரிலே உலாவும் பல இளைஞர்கள் போலப் பழைய நம்பிக்கைக்காரனல்ல. ஜாதி குலபேதத்தை அடியோடு மறுப்பவன். உனக்குக் குடும்பத்திலேயும் தொல்லை கிடையாது. உன் தகப்பனார் அறிவாளி, முற்போக்கான கொள்கை உடையவர். ஆகையால் ராதாவை மணம் செய்து கொள்வதற்கு ஒரு தடையும் ஏற்படாது. உனக்குச் சம்மதமாகிவிட்டால், பிறகு எல்லாம் இனிமையாகவே முடியும். ஒன்று மட்டும் முன்னதாகவே சொல்கிறேன். ராதா என் தங்கை! அதை உலகம் ஏற்காது! என் தங்கை ராதா என்று தெரிந்ததும், நான் ராதாவுக்காக எதையும் செய்யும் துணிவு பெற்றேன். உண்மையை மறைப்பானேன். பரந்தாமா! ராதாவுக்காக நான் திருடனானேன். என் தகப்பனாரின் வைரக்கடுக்கனை, மார்வாடிக் கடையில் அடகு வைத்துப் பணம் வாங்கித்தான் ராதாவைக் கல்லூரியில் சேர்த்தேன். ராதாவுக்காக இனியும் எதுவும் செய்வேன். ஆனால் உலகிலே, அவளை ஏற்றுக்கொள்ள, உன் போன்ற உத்தமன் முன் வந்தால் தான் முடியும் பரந்தாமா! ராதா, ஒரு விபச்சாரியின் மகள். ஐயோ! அந்த விபசாரி, வேறு யாருமில்லை; என் தாய், சொந்த அன்னை!" என்று கூறினான். அதுவரை கட்டுக்கு எப்படியோ அடங்கி இருந்த கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்பி என் நண்பனின் கன்னத்தில் வழியலாயிற்று. எனக்கு ஏற்பட்ட திகைப்பிலே என்ன செய்வதென்றே தோன்றவில்லை.

     "உன் தாய்...?" என்று நான், ஏதோ கேட்க ஆரம்பித்தேன், வாய் மூடிக் கொண்டிருக்க முடியாத நிலையில்.

     "இறந்து இருபது ஆண்டுகளாகின்றன. அப்படித்தான் அப்பா சொன்னார். சின்னம்மாவும் சொன்னது அதுதான். ஆனால் என் தாய் சாகவில்லை, தாயின் கௌரவம் செத்து விட்டது. உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால் உலகின் முன்பு, 'என் தாய்' என்று நான் அவர்களைக் கூற முடியாது. 'மகனே!' என்று அவர்கள் என்னை அழைக்க முடியாது! 'அண்ணா!' என்று ராதாவும், 'ராதா!' என்று நானும், பகிரங்கமாகப் பேசிக்கொண்டால், பழமையின் பிடியிலே உள்ள இந்தப் பாழும் உலகம் தூற்றும்; கேலி செய்யும் பரந்தாமா! நான் வேளாளர் குலம். ராதாவின் தாயாராகு முன்பு, ரங்கம்மாள், வேளாளகுலப் பெரியவர் வீரராகவ முதலியாரின் மகள்! இப்போது, ரங்கம்மாள், ஒரு விபசாரி! ராமசாமி நாயுடுவின் வைப்பு! ராதா, ஒரு கதம்பகுலப் பெண்! விபசாரியின் மகள்!" என்று கூறிவிட்டுக் கதறினான் என் நண்பன்.

     நாகசுந்தரம், சொன்னது கேட்டு என் தலை சுழன்றது - ஊர் முழுவதும், அவன் தாயார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாகவும், அவளுடையே தங்கையையே அவர் கலியாணம் செய்துகொண்டதாகவும் நம்பி இருந்தது. நானும் அப்படித்தான். நண்பன் நாகசுந்தரம், திடீரென்றுதான், தன் தாயார் இறந்து போகவில்லை, வழுக்கி விட்டார்கள் என்ற பயங்கரச் செய்தியைக் கேள்விப் பட்டான் என்பது தெரிந்தது. எப்படித் தெரிந்து கொண்டான். ஊரார் அறியாத அந்த உண்மையைக் கூறியது யார்? என்று தெரிந்து கொள்ளத் துடித்தேன். நண்பனோ, புழுப்போலத் துடித்துக் கொண்டிருந்தான்.


ரங்கோன் ராதா: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/annadurai/rangoonradha/rangoonradha2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs