http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
   
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி? (விலை ரூ.50) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - உலக சினிமா - ஓர் பார்வை (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - ஊசியும் நூலும் (விலை ரூ.40) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (விலை ரூ.40) - பிரபலங்கள் சொன்ன குட்டிக் கதைகள் - 1 (விலை ரூ.35) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - மகளிருக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - இனிப்பு நோயின் கசப்பு முகம் (விலை ரூ.50) - பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் (விலை ரூ.50) - பூவும் பிஞ்சும் (விலை ரூ.60) - சீனாவில் இன்ப உலா (விலை ரூ.60) - பொது அறிவுத் துளிகள் (விலை ரூ.30) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40) - திருநீலகண்டர் (2), இயற்பகையார் (3), இளையான்குடி மாறன் (4) (விலை ரூ.10) - ஏனாதிநாதர் (9), கண்ணப்பர் (10), குங்கிலியக்கலயர் (11) (விலை ரூ.10) - கதம்ப மலர்கள் (விலை ரூ.50) - மௌன வெளி (விலை ரூ.40) - சிந்தைகளின் சிதறல் (விலை ரூ.35) - சரணாகதி (விலை ரூ.125) - நந்தவனம் (விலை ரூ.70) - வழி விடுங்கள் (விலை ரூ.40) - தேவதை உலா (விலை ரூ.40) - வேணு கானம் (விலை ரூ.40) - கரையான் அரித்த கடிதங்கள் (விலை ரூ.60) - திருநாவுக்கரசர் (அப்பர்), சிறுத்தொண்டர் (விலை ரூ.10) - கடவுளின் வாசி இரகசியம் (விலை ரூ.20) - சங்கமம் (விலை ரூ.30)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.

உறுப்பினராக சேர விரும்புவோர், கட்டணத்தொகை ரூ.100 மட்டும் எமது ஏதாவதொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு, கட்டணம் அனுப்பிய விவரம், உங்கள் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எமக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

தொடர்புக்கு: பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com

உறுப்பினர் பட்டியல்  -   உறுப்பினர் சலுகைகள்



'கொக்கரகோ'

     (பேரறிஞர் அண்ணா அவர்கள், 'சௌமியன்' என்ற புனைபெயரில் எழுதிய முதல் கதை இது)

     ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே!

     "வைஸராயைப் பார்த்தாயோ, இல்லையோ?" என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண் விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான்.

     "இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?" என்று நான் வினவினேன்.

     "அவர் என்னைப் பார்க்காமல் கூட இருப்பாரா? போன வாரத்தில் கூட, 'வீரர் வில்லிங்டன்' என்று முதல் தரமான தலையங்கமொன்று எழுதினேனே, தெரியாதா?" என்றான்.

     எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால், பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்னபோது, கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை.

     "தலையங்கம் யார் எழுதினது?" என்று நான் வினவினேன்.

     "அரெரே! சமாசாரமே தெரியாதா?" என்று பீடிகை போட்டுக்கொண்டு, சுந்தரம் தன் சுய சரிதையைத் தொடங்கினான். அதற்குள் எனக்கு அறிமுகமான ஒரு பேர்வழி அவ்வழியே போக, நான் அவருக்கு ஒரு சலாம் போட்டுக் கொஞ்சம் பற்களை வெளியே காட்டினேன்.

     "யார் அந்த ஆசாமி?" என்று கேட்டான் சுந்தரம்.

     "கரன்சி ஆபீசில் 600 ரூபாய் சம்பளத்தில் இருக்கிறார். அவர் பெரிய பேர்வழி" என்றேன்.

     "உஷ்! இவர்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை" என்று கூறிக் கொண்டே, அந்த உத்தியோகஸ்தர் போன திக்கை நோக்கிச் சுந்தரம் காறி உமிழ்ந்தான்.

     "கொடுத்துவைத்த ஆசாமிகள்! அந்தக் காலத்திலே சுலபமாக அகப்பட்ட வேலையின் பயனாக இன்று கொழுத்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்தக் காலத்திலே வேலை ஏது? வெட்டி ஏது? இருக்கும் பணத்தையும் படிப்பிற்கு அர்ப்பணம் செய்துவிட்டு, வறட்டு நிலம், முரட்டு மனைவியுடன் காலக்ஷேபம் செய்வது எவ்விதம் என்ற கவலை எனக்கு உண்டாயிற்று. வெகு நேரம் வேதனைப் பட்டுக் கடைசியில் பத்திரிகாசிரியர் ஆகலாம் என்று தீர்மானித்தேன்."

     சுந்தரம் இந்த இடத்தில் தன் சரிதத்தைச் சற்று நிறுத்திவிட்டுக் கொஞ்சம் பொடி போட்டுக் கொண்டான். அவன் திடீரென்று எப்படி மேதாவியானான் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மறுபடி ஆரம்பித்தான் கதையை.

     "எவ்வளவோ பத்திரிகைகள்! எங்கே திரும்பினாலும் பத்திரிகைகள்! இருந்தாலும், என் பத்திரிகையின் பெயரைக் கேட்டாலுமே போதும், உன்னால் அதை வாங்காமலிருக்க முடியாது. நல்ல சுப தினமாகப் பார்த்து அதை ஆரம்பித்தேன். தாளின் தலையிலே ஒரு சேவல்! அதன் வாயின்றும் வருகிறது 'கொக்கரகோ' என்னும் சப்தம். அதுவே பத்திரிகைக்கும் பெயர். சப்தச் சுவை ஒரு பக்கம் கிடக்கட்டும்... அதில் வெளியாகும் விஷயங்களின் பொருட்சுவையின் நயத்தை என்னால் சொல்ல முடியாது."

     "சுந்தரம், ஒரு கேள்வி. அது என்ன, மாதப் பத்திரிகையா, வாரப் பத்திரிகையா அல்லது தினசரியா?" என்று நான் கேட்டேன்.

     "அதை நான் ஏன் கூற வேண்டும்? விஷயம் முழுவதையும் கேட்டு விட்டுப் பிறகு நீயே சொல்லு! மற்ற பத்திரிகை ஆசாமிகளைப் போல ரிசர்வ் பாங்கி மசோதா, வெள்ளைக் காகிதத் திட்டம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சாஸ்திரியார் சாசனம் என்றெல்லாம் நான் எழுதுவது கிடையாது. 'கொக்கரகோ'வில் வெளிவரும் முக்கியமான விஷயங்கள் என்னவென்றால் திடுக்கிடும் சம்பவங்கள், ஆவேசத்தைத் தரக்கூடிய ஆச்சர்ய மர்மங்கள், விநோத விசித்திரங்கள்தாம். ஆனால், ஓரொரு சமயம் பல சிக்கலான பிரச்னைகளைப் பற்றிக் கூட நான் விவாதிப்பதுண்டு.

     உதாரணமாக 'மனிதனுக்கு ஒரு தலை போதுமா?' என்ற தலைப்பின் கீழ் ஒரு ரசமான கட்டுரை எழுதியிருந்தேன். இவ்விஷயமாக இதுவரை ஒருவரும் கவனியாது இருப்பது சுத்தப் பிசகென்றும், அறிவுள்ளோர் இதன் உண்மையைத் தெரிந்துகொண்டு பாமரருக்குக் கூறவேண்டும் என்றும் ரெவரண்டு ராம்சிமித் பிரசங்கம் செய்ததாக எழுதிவிட்டேன். அவ்வளவுதான், அந்த வாரம் பூராவும் அதைப் பற்றி விருத்தி உரைகளும் வியாக்கியானங்களும் ஆராய்ச்சிகளும் 'கொக்கரகோ'வில் வெளிவந்தன. பிறகு..."

     "ஆமாம் சுந்தரம், ராம்சிமித் யார்?" என்று நான் கேட்டேன்.

     சுந்தரம் கதை சொல்லும் உற்சாகத்தில், என் கேள்வியைக் கவனிக்கவேயில்லை. மேலே சொல்லிக்கொண்டே போனான்.

     "மறுவாரம் 'மன்னிக்கவும்' என்ற தலைப்பின் கீழ், ராம்சிமித் 'மனிதனுக்கு ஒரு தலை போதுமா?' என்ற பிரச்னையைக் கிளப்பவே இல்லையென்றும், 'மனிதனுக்கு இருக்கும் ஒரு தலையே போதும், இதை அறிவுள்ளோர் கவனித்துப் பொதுமக்களுக்குக் கூறுவது நலம்' என்று மட்டுமே அவர் கூறினதாகவும் வெளியிட்டு, தப்பாகச் செய்தி அனுப்பின நிருபரை வேலையை விட்டு விலக்கிவிட்டதாகக் 'கொக்கரகோ'வில் பிரசுரம் செய்தேன்."

     எனக்குச் சிரிப்புப் பொங்கிற்று. சுந்தரம் அவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

     "பேஷ்! பேஷ்!" என்று சொல்லிக் கொண்டே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தேன். "தட்டுவது பிறகு ஆகட்டும், சங்கரா! விஷயத்தைக் கேள்" என்று சுந்தரம் கதையை மேலே சொல்லத் தொடங்கினான்.

     "தத்தி விளையாடி, குழந்தைப் பருவத்தைக் கடந்து, 'கொக்கரகோ' வாலிபப் பருவத்தை அடைந்தது. பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் 'கொக்கரகோ'வைப் பார்க்காமல் தூங்குவதில்லை. நானும் விநோத விஷயங்களை வெளியிட்டவண்ணமாகவே இருந்தேன். அதற்காக நான் செய்த யுத்திகள் எவ்வளவு! ஒரு தினம் விந்தையான விஷயம் ஒன்றும் அகப்படவில்லை. ஒரு பக்கம் கூட அச்சாகவில்லை. மணியோ மூன்று, நான்கு என்று வளர்ந்து கொண்டே சென்றது. ஐந்து மணிக்கெல்லாம் பத்திரிகை அச்சடித்தாக வேண்டும். என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்று சுந்தரம் கேட்டான். ஆனால், நல்ல காலமாக என் பதில் வருமுன்னமேயே தன் சரிதத்தை ஓட்டினான்.

     "கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன். திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை. 'ஹிட்லர் பட்லரானால்?' என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். மறுதினம், எனது சித்திரக்காரரைக் கொண்டு ஹிட்லருக்குப் பட்லர் வேஷம் போட்டு, அவர் ஐரோப்பாவிற்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது போலவும், சாப்பாட்டுப் பண்டங்கள் துப்பாக்கி, பாம், புகை முதலியவைகளாகவும் ஒரு படம் பிரசுரம் செய்தேன்.

     விற்பனை பலத்தது. 32 பி.ஏ.-க்களை நிருபர்களாகவும், பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக் கொண்டேன். நீயும் வருவதானால் 33 பி.ஏ.-க்களுக்கு நான் தலைவனாவேன். என் மனைவி மரகதம், பெண்கள் பகுதியை வெகு திறமையாக நடத்திக் கொண்டு வந்தாள். ஓர் அழகிய, சிறிய பங்களாவை விலைக்கு வாங்கி அதில் குடியேறினேன். அடுத்த பங்களாவில் கார்த்திகேயன் அடியார் கூட்டத் தலைவரும், கங்காணிகள் சங்கத்துப் பொக்கிஷதாரருமான ஸ்ரீமான் கருணைப்பிள்ளை, தம் மனைவி கமலாம்பிகையுடன் கூடி வசித்து வந்தார். பலமுறை நான் அவரை அணுகி, 'என் பத்திரிகையைப் பற்றி உம் அபிப்பிராயம் என்ன? அதற்கு ஏதாவது விஷயம் தரக்கூடாதோ?' என்று கேட்டுக்கேட்டு, என் பாடு போதுமென்றாகிவிட்டது. எத்தனையோ பெரிய ஆசாமிகள் விஷயதானம் செய்திருக்கிறார்கள். இந்தக் கருணைப்பிள்ளைக்கு மட்டும் ஏன் கடுகளவு கருணையாவது இருக்கக்கூடாதென்று எண்ணி ஏங்கினேன். ஆனால், விட்டேனா ஆசாமியை! மரகதமும் நானும் கலந்து யோசித்து, அவரைத் தண்டிக்க ஓர் ஏற்பாடு செய்தோம்.

     ஏற்பாட்டின்படி, கமலாம்பிகையை என் மனைவி சிநேகம் செய்துகொண்டாள். ஒரு தினம் இருவரும் வழக்கம் போல் சந்தித்து வம்பளந்து கொண்டிருந்தனர். இருந்தாற்போலிருந்து மரகதம் விழுந்து விழுந்து சிரித்தாள். கமலாம்பிகையின் முகத்தில் அசடு தட்டிற்று. 'ஏன் சிரிக்கிறாய்? காரணத்தைச் சொல்லிவிட்டுச் சிரிக்கக்கூடாதோ?' என்று கெஞ்சினாள். மரகதம் சிரிப்பை நிறுத்திவிட்டு, 'ஒன்றுமில்லை, என் வீட்டுக்காரர் என்னிடம் அதிக அன்புள்ளவர். நான் சொல்வதைத் தட்டுவதே கிடையாது. நேற்று நான் வேண்டுமென்றே அவருடைய அன்பைச் சோதிக்க எண்ணி ஒரு பாவாடையைக் கட்டிக் கொண்டு நடனம் செய்யச் சொன்னேன். அவரும் தடை சொல்லாது ஆடினார். ரொம்பத் தமாஷாக இருந்தது. அதை நினைத்துக் கொண்டுதான் சிரிக்கிறேன்' என்று கூறினாள்.

     அன்று மாலை, நான் ஆபீசிற்குச் செல்லாது கருணைப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் காமிராவுடன் ஒளிந்து கொண்டிருந்தேன். அவரும் அவர் மனைவியும் தோட்டத்திற்கு வந்தனர்.

     'இது என்ன முட்டாள்தனம்! ஆசையிருந்தால் ஆடவேண்டுமா?' என்று பிள்ளை கேட்டார். கமலாம்பிகை கண்களைப் பிசைந்து கொண்டே, 'ஆமாம், ஆடு என்றால் ஆடத்தான் வேண்டும்; பாடு என்றால் பாடத்தான் வேண்டும். பக்கத்து வீட்டு ஆசிரியர் முட்டாளா? அவருடைய மனைவி அவரை ஆடச் சொன்னாள். அவர் ஆடினார். கொடுத்து வைத்த புண்ணியவதிகளுக்கு மனங்கோணாது நடக்கும் புருஷர்கள் வாய்க்கிறார்கள்' என்று கூறிக்கொண்டே, விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.

     'சரி' என்று சொல்லி கருணைப்பிள்ளை ஒரு பாவாடை தரித்து வந்து நடனம் செய்தார்.

     நடனம் மிக அற்புதமாக இருந்தது. கறுத்துப் பெருத்த உருவம், உருண்டைத் தொந்தி, மொட்டைத் தலை... நடனம் நன்றாகத்தானே இருந்திருக்கும்!

     நான் மறைந்திருந்து அவர் ஆடியதைப் போட்டோ பிடித்துக் கொண்டு, பிறகு அவர் எதிரில் திடீரென்று வந்தேன்.

     'பரத நாட்டியத்தைப் பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?' என்று நான் கேட்டேன். ஆள் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார். அன்றைய 'கொக்கரகோ'வில்...

     கருணைப்பிள்ளை நர்த்தனம்

     பரதநாட்டியம் ஒரு பழங்கலை

     என்று தலைப்பு போட்டு, கருணைப்பிள்ளையின் போட்டோவையும் பிரசுரம் செய்தேன். அன்று என்னமோ எனக்கு ஒரு விந்தையான ஆசை ஏற்பட்டது. நமது பத்திரிகையை நாமே விற்க வேண்டுமென்று தோன்றிற்று.

     உடனே, மாறுவேடம் பூண்டு, பிராட்வே முனையில் நின்று கொண்டு, 'கொக்கரகோ - காலணா' என்று கூவிக் கூவி விற்றேன்..."

     "சுந்தரம்! நிறுத்து, நிறுத்து! உன் சரிதம் கிடக்கட்டும். அந்த மாதிரிப் பத்திரிகையை நான் பார்த்ததே இல்லையே; கேள்விப்பட்டது கூட இல்லையே" என்று நான் கேட்டேன்.

     "நீ எப்படி பார்த்திருக்கமுடியும்? இந்த ஊரில் போட்டால்தானே உனக்குத் தெரியப் போகிறது?" என்றான் சுந்தரம்.

     "இந்த ஊரில் போடவில்லையா? எந்த ஊரில் போடுகிறாய்?" என்று நான் வினவினேன்.

     "உங்களுக்குத் தெரியாதா கீழ்ப்பாக்கம் பத்திரிகாசிரியரை?" என்று பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு போலீஸ்காரன் என் நண்பன் கரத்தைப் பற்றிக் கொண்டான். என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அவனை இழுத்துக் கொண்டு போனான்.

     "சங்கர், வைஸராய் ஏதோ பேச வேண்டுமென்று கூப்பிட்டனுப்பி இருக்கிறார். நான் போய்விட்டு, நாளை மாலை உன்னைப் பார்க்கிறேன். இன்றைய 'கொக்கரகோ'வை அவசியம் படி" என்று கூறினான் சுந்தரம்.

     பரிதாபம்! என் நண்பன் சுந்தரம் இரண்டு தரம், வார மும்முறைப் பத்திரிகை நடத்தித் தோல்வியடைந்து, பிறகு மாதமிருமுறை பத்திரிகை போட்டு மூளை இழந்து, கடைசியில் பைத்தியக்காரனாகிக் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் விஷயம் எனக்கும் பிறகே தெரியவந்தது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/annadurai/story/kokkarako.html



தேடல்
தேடல்
 

சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மணி மாலை
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மணிபல்லவம்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாலவல்லியின் தியாகம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்






செய்திகள்
சென்னை: தாய், மனைவி, மகளை கொன்று டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
சென்னை: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி
பேச்சுவார்த்தை தோல்வி: என்.எல்.சி. தொழிலாளர்கள் 28ந் தேதி உண்ணாவிரதம்
அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு
சேலம்: மான் வேட்டையாடிய ரிடையர்ட் டி.எஸ்.பி. உள்பட 4 பேர் கைது
நாஞ்சில் சம்பத் இல்ல திருமண விழா: முதல்வர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து
பிரபல ரவுடி வளத்திக்குமார் குண்டர் சட்டத்தில் கைது
எல்லைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும்: சீன பிரதமர்
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் ஏலம்
கோவில்பட்டி: வங்கியில் அடகு வைத்த ரூ.16 லட்சம் நகைகள் மாயம்
நிதிநிறுவனங்களை கண்காணிக்க செபிக்கு அதிகாரம் அரசு திட்டம்
ஜூன் 2ஆம் தேதி 'சிங்கம் 2' பாடல்கள் ரிலீஸ்
ஒரே நாளில் ஐந்து மைனர் திருமணங்கள் நிறுத்தம்: தேனி ஆட்சியர் நடவடிக்கை
காவிரி நீர் பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வருஷநாடு வனப்பகுதியில் ராசிக்கல் தோண்டிய கும்பல் ஆயுதங்களுடன் கைது
(செய்தி பதிவு செய்த நாள் : 2013 மே 21 - 15:00 இந்திய நேரம்)
Newspaper Bags - செய்தித்தாள் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் செய்தித்தாள் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. நியூஸ்பேப்பர் பேக் - சிறியது
அளவு 1 : உயரம் 22 செ.மீ. (9 இஞ்ச்) - அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.00 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை 80 பைசா
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. நியூஸ்பேப்பர் பேக் - பெரியது
அளவு 2 : உயரம் 26 செ.மீ. (10.5 இஞ்ச்) - அகலம் 24 செ.மீ. (9.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.1.30
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)

Paper Bags - காகிதப் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் காகிதப் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. பேப்பர் பேக் - சிறியது
அளவு: உயரம் 23 செ.மீ. (9 இஞ்ச்) - அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்) - பக்கவாட்டு அகலம் 5 செ.மீ. (2 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.5.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.5.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000 - ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. பேப்பர் பேக் - பெரியது
அளவு: உயரம் 25 செ.மீ. (10 இஞ்ச்) - அகலம் 20 செ.மீ. (8 இஞ்ச்) - பக்கவாட்டு அகலம் 6 செ.மீ. (2.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.6.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.6.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000 - ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)
Candles - மெழுகுவர்த்திகள்
எங்களிடம் முதல் தர மெழுகால் செய்யப்பட்ட தரமான மெழுகுவர்த்திகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். பல வண்ணங்களிலும், இனிமையான நறுமணத்துடனும் கூடிய மெழுகுவர்த்திகள் பலவித வடிவங்களில் கிடைக்கும்.

1. அளவு 1
6 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.1.50)
1 கிலோவுக்கு 170 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

2. அளவு 2
10 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.2.50)
1 கிலோவுக்கு 100 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

3. அளவு 3
220 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.75.00)
1 கிலோவுக்கு 4 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.225
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

வாசனை சேர்க்கப்பட்ட மெழுகுவர்த்திகளுக்கு 1 கிலோவுக்கு ரூ.25 கூடுதலாக செலவாகும்.

தொடர்புக்கு: ச.சுதாதேவி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-50.
பேசி: +91-99427-32425, 86081-55133 மின்னஞ்சல்: sudha@chennainetwork.com