http://www.chennailibrary.com


ஆத்திசூடி

     ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.

நூல்

1. அறஞ் செய விரும்பு

2. ஆறுவது சினம்

3. இயல்வது கரவேல்

4. ஈவது விலக்கேல்

5. உடையது விளம்பேல்

6. ஊக்கமது கைவிடேல்

7. எண் எழுத்து இகழேல்

8. ஏற்பது இகழ்ச்சி

9. ஐயம் இட்டு உண்

10. ஒப்புரவு ஒழுகு

11. ஓதுவது ஒழியேல்

12. ஔவியம் பேசேல்

13. அஃகஞ் சுருக்கேல்

14. கண்டு ஒன்று சொல்லேல்

15. ஙப் போல் வளை

16. சனி நீராடு

17. ஞயம் பட உரை

18. இடம் பட வீடு எடேல்

19. இணக்கம் அறிந்து இணங்கு

20. தந்தை தாய்ப் பேண்

21. நன்றி மறவேல்

22. பருவத்தே பயிர் செய்

23. மண் பறித்து உண்ணேல்

24. இயல்பு அலாதன செயேல்

25. அரவம் ஆட்டேல்

26. இலவம் பஞ்சில் துயில்

27. வஞ்சகம் பேசேல்

28. அழகு அலாதன செயேல்

29. இளமையில் கல்

30. அறனை மறவேல்

31. அனந்தல் ஆடேல்

32. கடிவது மற



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/avvai/athichoody.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.