இளைஞர் இலக்கியம் ... தொடர்ச்சி ... 4. தமிழ்மொழி - தமிழ்நாடு
நாம்பே சுமொழி தமிழ் மொழி! நாமெல்லாரும் தமிழர்கள்! மாம் பழம் அடடா! மாம் பழம் வாய்க் கினிக்கும் தமிழ் மொழி! தீம்பால் செந்தேன் தமிழ் மொழி! செங்க ரும்பே தமிழ் மொழி! நாம்பே சுமொழி தமிழ் மொழி! நாமெல்லாரும் தமிழர்கள்! நாம்பே சுமொழி தமிழ் மொழி! நமது நாடு தமிழ் நாடு! காம்பில் மணக்கும் மல்லிகை காதில் மணக்கும் தமிழ் மொழி! வேம்பா நஞ்சா தமிழ்மொழி? விரும்பிக் கற்பது தமிழ் மொழி! நாம்பே சுமொழி தமிழ் மொழி! நமது நாடு தமிழ் நாடு! 5. கட்டாயக் கல்வி
பன்றி எதற்குத் தெருவில் வந்தது? பாட்டையி லுள்ள கழிவை உண்ண. என்ன கழிவு தெருவில் இருக்கும்? இருக்கும் பிள்ளைகள் வெளிக் கிருந்தனர். என்ன காரணம் அப்படிச் செய்ய? இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர். சின்ன நடத்தை எப்படித் தொலையும்? சிறந்த அறிவு பெருக வேண்டும். அறிவை எப்படி அடைய முடியும்? அனைவர் தாமும் படிக்க வேண்டும். நிறைய எவரும் படிப்ப தெப்படி? நீள முயன்றால் முடியும். குறைகள் தீர முயல்வ தெப்படி? கூட்ட மக்கள் கிளர்ச்சி வேண்டும். கறைகள் போகா திருப்ப தென்ன? கட்டாயக் கல்வி கிட்டாமை தான். 6. தமிழன்
நல்லுயிர், உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்! கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும் ஏன் ஏன் ஏன்? பல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு பார் பார் பார்! செல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன் யார் யார் யார்? சொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும் தூண் தூண் தூண்! புல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது வீண் வீண் வீண்! தொல்லுல குக்குள்ள அல்லல்அ றுப்பதென் தோள் தோள் தோள்! வல்லவன் என்னை வெல்ல நினைப்பவன் தூள் தூள் தூள்! அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |