|
News | |
-TN: Engineering colleges likely to seek higher quota-PIL plea against occupation of Assembly building dismissed -TN: Inter-State racket in sale of expired drugs busted -TN: Power tariff revision: first public hearing on March 30 -MoU for Cooum restoration signed -Ilayaraja complains of copyright violation -No extradition, but India can directly question David Headley -Teenage girl shot dead by neighbour in Mumbai -Bidding for 3G begins, auction on April 9 -Saina breaks into badminton's world Top-5 |
-LPG dealership scheme to empower rural women -Relax visa norms for Indian professionals: India to US -Bharti application store clocks 2.5 mn downloads -United Bank makes its debut with 4% premium -Food inflation eases, headline index expected to rise -Cabinet likely to sanction Rs 700 crore for Delhi Games -Modi plans second IPL, this one overseas -BCCI wants daily updates on players' fitness -Khel Ratna not to be shared in future |
![]() |
| ||||||||||||||
தமிழியக்கம் 1. நெஞ்சு பதைக்கும் நிலை
கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். 1 எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய் மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு தொடுத்துமகிழ்நெஞ்சுடையார்துறைதோறும்நின்னெழிலைத்தோன்றாவண்ணம் தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். 2 பண்டுவந்த செழும்பொருளே, பாடர்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள் கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே, வாழ்வில் தொண்டுவந்தநெஞ்சுடையார்துறைதோறும்நின்னெழிலைத்துளிர்க்காவண்ணம் உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்ப தைக்கும். 3 உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம் கடலியக்கும் சுவைப்பாட்டே, கண்ணான செந்தமிழே, அன்பே, நாட்டில் கெடலியக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப் தைக்கும். 4 வையத்தின் பழநிலவே வாழ்வுக்கோர் புத்துணர்வே, மயிலை, மேலோர் ஐயத்திற் கறிவொளியே, ஆடல்தரும் செந்தமிழே, அன்பே, தீமை செய்யத்தான் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தீர்க்க எண்ணும் மெய்யைத்தான் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்விளக்க வாய்ப தைக்கும். 5 2. இருப்பதை விட இறப்பது நன்று
வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோயில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர், தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர், நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும் ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7 மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை மாய்ப்பதுண்டோ ? வாய்ப்பாட் டாளர், இகழ்ச்சியுற நடப்பதுண்டோ ? இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார்? நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ? வாழ்வுக் கான புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 8 கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார் தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில் ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 9 நல்லஅரும் பெருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்? நாட்டில் ஆணை சொல்லவரும் அரசியலார் செந்தமிழ்நா டிதுவென்றும் தெரியார் போலும்! வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார்? இன்ப வாழ்வின் எல்லையறிந் தும்திருந்தாத் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்று. 10 |
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |