http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



தேசிய கீதங்கள்

... தொடர்ச்சி ...

38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று

ராகம் - தாண்டகம்
தாளம் - ஆதி

நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
     நாட்டினாய்; - கனல் - மூட்டினாய்,
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
     மாட்டுவேன்; - வலி - காட்டுவேன். (நாட்டி) 1

கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
     கோஷித்தாய்; - எமை - தூஷித்தாய்,
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
     ஓட்டினாய்; - பொருள் - ஈட்டினாய் (நாட்டி) 2

கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
     கூறினாய்; - சட்டம் - மீறினாய்,
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே
     ஏசினாய்; - வீரம் - பேசினாய் (நாட்டி) 3


அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
     ஆக்கினாய், - புன்மை - போக்கினாய்,
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
     மீட்டினாய்; - ஆசை ஊட்டினாய் (நாட்டி) 4

தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத்
     தூண்டினாய்; - புகழ் வேண்டினாய்,
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
     காட்டினாய்; - சோர்வை ஓட்டினாய் (நாட்டி) 5

எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
     ஏவினாய், - விதை - தூவினாய்,
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
     செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி) 6

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச்
     சொல்லுவேன்; - குத்திக் கொல்லுவேன்
தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே
     தள்ளுவேன்; - பழி - கொள்ளுவேன். (நாட்டி) 7

39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி

சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
     துஞ்சிடோ ம் - இனி - அஞ்சிடோம்
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
     ஏற்குமோ? - தெய்வம் - பார்க்குமோ? 1

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
     வாழ்த்துவோம்; - முடி - தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
     ஈனமோ? - அவ மானமோ? 2

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
     போகவோ? - நாங்கள் - சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள்
     அல்லமோ? - உயிர் வெல்லமோ? 3

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
     நாய்களோ? - பன்றிச் - சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இது
     நீதமோ? - பிடி - வாதமோ? 4

பார தத்திடை அன்பு செலுத்துதல்
     பாபமோ? - மனஸ் - தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
     குற்றமோ? - இதில் - செற்றமோ? 5

ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
     ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோம்;
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
     மலைவு றோம்; - சித்தம் - கலைவுறோம். 6

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
     சாயுமோ? - ஜீவன் - ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி
     ஏகுமோ? - நெஞ்சம் - வேகுமோ? 7


தேசிய கீதங்கள் : 1  2  3  4  5   6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30
31   32   33   34   35   36   37   38   39   40   41   42


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/bharathiyar/desiyageethangal29.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs