http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்



     மஞ்சுவும், சாமிநாதனும் ஒரு கால்குலேட்டரை வைத்துக் கொண்டு வட்டிக்கணக்குப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்விட்டனர். ரூபாய் பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு பதினைந்து வருடத் தவணையில் பதினெட்டு சதவீதம் வட்டிக்கு மாதத்திற்கு எவ்வளவு ரூபாய் வருகிறது என்பதைத்தான் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மஞ்சுவிற்கு ஒரு தொகை வந்தால், சாமிநாதனுக்கு வேறு ஒரு தொகை வருகிறது. விளைவு? வாய்த்தகராறு தான் மிச்சம். இரண்டு மூன்று நாட்களாக இரவில் படுக்கப் போகும் முன்பு இவர்களுக்கு இதே வேலையாகி விட்டதை உணர்ந்த சாமிநாதனின் அம்மா சிவகாமிக்கு மருமகள் மஞ்சு மீது எரிச்சல் வரவே, "ஏண்டா... சாமிநாதா நீங்க வீடு வாங்கறதுக்குள்ள நாமெல்லாம் ஒரு வழியா ஆயிடுவோம்னு நினைக்கிறேன். தினம் எனக்கு இந்த தலைவலி தாங்க முடியல... இந்த வயதான காலத்தில..."

     சிவகாமி இப்படி அலுத்துக் கொள்வதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

     சாமிநாதன் ஐம்பது வயதாகியும் இன்னும் ப்ரமோஷன் ஏதுமில்லாமல் சாதாரண அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்கிறான். மஞ்சுவோ ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிளார்க். அவள் சம்பளம் மாதம் மூவாயிரத்தைத் தாண்டாது.

     எப்படியோ தங்கள் மகன் கண்ணனை அதிக மார்க்குகள் வாங்கியதால் குறைந்த செலவிலேயே இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து விட்டார்கள். ஒரே மகளான புவனாவும் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள். கணவன், மனைவியின் மொத்த வருமானமே மாதச் செலவிற்கு சரியாகி விடுகிறது. கலர் கலர் பட்டுப் புடவைகளெல்லாம் மஞ்சுவின் கனவில்தான் வந்து போயின.

     ஏற்கனவே இருந்த சொந்த வீட்டையும் சாமிநாதனின் அப்பா அந்த காலத்தில் பட்ட கடன்களை அடைப்பதற்காக விற்றாகிவிட்டது. இப்போது திடீரென எப்படியாவது ஒரு சொந்த வீடு நமக்கு இருக்க வேண்டும் என்ற வெறியில், கிறுக்குப் பிடித்தவன் போல் கடந்த ஒரு வருடமாக எல்லா வங்கிகள், நிதி நிறுவனங்கள் படி ஏறி இறங்கிய வண்ணமிருந்தான் சாமிநாதன். இதையெல்லாம் பார்த்து சிவகாமியும் கடவுளை வேண்டாத நாளில்லை.

     "அதில்லேம்மா... வீட்டோட விலை ரூபாய் பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ஆகிறது. முதல்ல முணு லட்சம் கட்டச் சொல்றா... பாக்கித் தொகையை பதினைந்து வருடத் தவணையிலே திருப்பிச் செலுத்தணும். அதுக்கு வட்டியோட மாதம் மாதம் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் போல் கட்றாப்ல வருது. கணக்குப் பார்த்தா கடைசியிலே வீட்டோட விலையை விட டபுள் மடங்காயிருது. அந்தக் கம்பெனி மானேஜர் வட்டியைக் குறைக்க முடியாதுங்கிறான்... அதனால மண்டையை போட்டுக் குடைஞ்சிக்கிட்டிருக்கோம்."

     "உங்களைப் பார்த்து சிரிக்கிறதா... அழறதான்னு தெரியலை... ஏதோ இரண்டு பேரும் சம்பாதிக்கிறேள். கொஞ்சம் நிம்மதியா சந்தோஷமா இருக்கோம். இது போதாதா? முதல்ல மூணு லட்சம் முன்பணமா கேட்கிறானே, அதுக்கு என்ன செய்யப் போறே? நாம யார்கிட்டே கேட்க முடியும்? நம்ம வீட்ல இருக்கிற நகைகளெல்லாம் கூட ஒன்றரை லட்சத்துக்கு மேல் தேறாது..."

     இதுக்கு மேலே அம்மாவை பேசவிடாத சாமிநாதன் "நான் என்னமோ... எப்படியோ... பணத்தை பிரட்டிடுவேன்... அதுக்கெல்லாம் எனக்கு நிறைய பிரெண்ட்ஸ் இருக்கா..."

     "சரி இருக்கட்டும்... மாசாமாசம் பதினைந்தாயிரம் கட்டணுமே அதுக்கு என்ன பண்ணுவே?"

     "நமக்குத்தான் அட்வான்ஸ் கொடுத்தவுடனேயே வீடு கொடுக்கிறான்லே... அதை வாடகைக்கு விட்டா மாதம் ஐயாயிரம் வருமே..."

     "சரி... பாக்கி பத்தாயிரம்?" விடவில்லை சிவகாமி.

     "அது... அது... எப்படியாவது கட்டத்தான் வேணும்."

     "உங்க இரண்டு பேரோட சம்பளமே மொத்தம் பதினாலாயிரத்தைத் தாண்டாதேடா... அதுல பத்தாயிரத்தைக் கொடுத்திட்டா மீதம் நாலாயிரம். அதுல வாடகைப் பணம் இரண்டாயிரம் போயிட்டா... பாக்கி இரண்டாயிரம் தான்... அதுல எப்படிடா நாம காலட்சேபம் பண்ண முடியும்? அதுவும் இப்ப இருக்கிற விலைவாசில..."

     அம்மாவிற்கு இவ்வளவு கணக்கெல்லாம் தெரிகிறதா? என்று ஆச்சரியத்தில் அசந்து போனான் சாமிநாதன்.

     தொடர்ந்தாள் சிவகாமி.

     "நமக்குத்தான் ஏற்கனவே வீடு இருக்கேடா..."

     "ஏம்மா... விளையாடறியா... அதைத்தான் வித்துத் தொலைச்சிட்டோமே."

     "அதில்லை..."




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/deivasigamani/story/ammamanasu.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs