http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




... தொடர்ச்சி ...

     "இப்ப நாம இருக்கிற வீட்டை சொல்றியா...? இது வாடகை வீடு தானே..."

     "அதில்லேடா... ஆண்டவன் கொடுத்த வீடு..."

     மஞ்சுவும் 'இந்த கிழத்திற்கு ஏதோ ஆகிவிட்டது' என்று தன் மனதுள் புலம்பிக் கொண்டாள்.

     யாரும் பதில் பேசாமலிருக்கவே "உன் உடம்பைச் சொல்றேன்டா. நம்ப உடம்பே நமக்கு வீடு மாதிரிதான். நம்மோட ஆன்மா எப்போதும் சந்தோஷமா இருக்கணும்னு தான் உடம்பு என்கிற வீட்டை ஆண்டவன் அந்த ஆன்மாவிற்கு கொடுத்திருக்கான். எவ்வளவு வருஷத்துக்கு நீ உடம்பை நல்ல ஆரோக்கியத்தோட பாதுகாப்பா வைச்சிருக்கியோ... அந்த அளவிற்கும் ஆன்மா சந்தோஷமா குடியிருக்கும். அதை விட்டு விட்டு உன் சக்திக்கு மீறிய காரியங்களில் நீ இறங்கிண்டு உன்னோட கண்ட அபிலாஷைகளுக்கும் நீ உன் உடம்பை ஆட்டி வைச்சா நாளுக்கு நாள் உன் உடம்பு கெட ஆரம்பிச்சிடும். பின்னாடி அதை தேத்தறதுக்கு டாக்டருக்கு ஆயிரக்கணக்குல செலவு பண்ண வேண்டியிருக்கும். உன் மனசும் வேதனைப்படும்... இதெல்லாம் நமக்குத் தேவையா...?"

     "..."

     "ஒரு மனுஷன் எந்த வீட்ல வாழ்றான்கிறது முக்கியமில்ல... அவன் எப்படி வாழ்றான்கிறதுதான் முக்கியம்... நானும் பார்த்துக்கிட்டேதான் வர்றேன்... வர... வர... நேரங்கெட்ட நேரத்தில வீட்டுக்கு வர்றே... சரியாவும் சாப்பிட மாட்டேங்கிறே... நாளுக்கு நாள் உடம்பு மெலிஞ்சிண்டு வர்றே..."

     "போதும்மா... உன் அட்வைஸ்... வாழ்க்கைன்னா இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்தாத்தான் முடியும்."

     "போடா மடையா... 'சாந்தமு லேகா... சௌக்யமு லேது' தெரியுமா உனக்கு?"

     பதிலேதும் பேசாமல் மஞ்சுவும் சுவாமிநாதனும் பெட்ரூமிற்குப் போய்விட்டார்கள்.

     மறுநாள் காலை.

     வழக்கம் போல், பேரன் கண்ணனுக்கு டிபன் பாக்ஸில் தயிர்சாதம், ஊறுகாய், வடாம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சிவகாமி. மஞ்சுவும் அப்போது மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தாள்.

     "என்ன பாட்டி... ரெடியா... நான் காலேஜுக்கு கிளம்பிக்கிட்டிருக்கேன்" கண்ணன் அருகில் வந்தான்.

     டிபன்பாக்சை வாங்கிய கையோடு வேகமாகக் கிளம்பிய கண்ணனை "டேய் கண்ணா... கொஞ்சம் எனக்காக ஒரு நிமிஷம் ஒதுக்கு... நான் உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்..."

     "என்ன... சொல்லு..."

     "நீ இன்னும் ஒரு வருஷத்திலே கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆயிடுவே இல்லே... அதுக்கப்புறம் நீ அமெரிக்கா... இல்லே... ஆஸ்திரேலியான்னு எங்கேயாவது வெளிநாடு போய் மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கணும்பா..."

     "சரி... எதுக்கு இதெல்லாம் இப்பச் சொல்றே?"

     "உன் அப்பா தனக்கு ஒரு சொந்த வீடு இருக்கணும்னு ஆசைப்படறாண்டா... அந்தக் காலத்திலே நம்ம வீடு பெரிய வீடு. அந்த சொந்த வீட்டில் சொகுசா... செல்லமா வளர்ந்தவன். இப்ப குடும்ப நிலை மாறிப் போய் இந்த வாடகை வீட்ல இருந்துகிட்டிருக்கோம்... அவனோட நண்பர்களெல்லாம் வீடெல்லாம் கட்டி கிரகப் பிரவேசத்திற்கு அழைக்கிறப்பெல்லாம் உன் அப்பா கூனிக் குறுகிப் போயிடறான். இனிமேலும் இந்த வயசுல அவனால ஓடி ஆடி மாசம் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும்னு எனக்குத் தோணல... இனிமே புவனா கல்யாணத்துக்கு வேறே அவன் ஏதாவது சேமிச்சாகணும்..."

     கண்ணனின் முகம் பரிதாபமாக மாறிக் கொண்டிருந்தது.

     "உனக்கும் நாளைக்கு சம்பந்தம் பண்ணப் போறவங்க மாப்பிள்ளைக்குச் சொந்த வீடு இருக்கான்னு கேட்பாங்க. இப்பெல்லாம் சொந்த வீடு இருந்தா தாண்டா ஸ்டேட்டஸ், கௌரவம் எல்லாம். மாசா மாசம் வாடகை கொடுக்கிற டென்ஷன்லாம் இருக்காது... நீ சின்ன வயசு. அதான் இப்பவே சொல்றேன். பின்னாடி நீ எப்படியாவது சம்பாதிச்சு அப்பாவுக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்திருடா பேராண்டி... நல்லாயிருப்பே... எனக்கும் எழுபத்தைஞ்சு வயசாச்சு. அந்த வீட்டெல்லாம் நான் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கோ என்னவோ... சரி... நீ போயிட்டு வா..." என்றவள் முந்தானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

     குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டே ஜன்னலுக்குப் பின்னால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாமிநாதன் கண்களும் குளிக்க ஆரம்பித்து விட்டன கண்ணீரில்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/deivasigamani/story/ammamanasu2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs