http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
   
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி? (விலை ரூ.50) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - உலக சினிமா - ஓர் பார்வை (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - ஊசியும் நூலும் (விலை ரூ.40) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (விலை ரூ.40) - பிரபலங்கள் சொன்ன குட்டிக் கதைகள் - 1 (விலை ரூ.35) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - மகளிருக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - இனிப்பு நோயின் கசப்பு முகம் (விலை ரூ.50) - பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் (விலை ரூ.50) - பூவும் பிஞ்சும் (விலை ரூ.60) - சீனாவில் இன்ப உலா (விலை ரூ.60) - பொது அறிவுத் துளிகள் (விலை ரூ.30) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40) - திருநீலகண்டர் (2), இயற்பகையார் (3), இளையான்குடி மாறன் (4) (விலை ரூ.10) - ஏனாதிநாதர் (9), கண்ணப்பர் (10), குங்கிலியக்கலயர் (11) (விலை ரூ.10) - கதம்ப மலர்கள் (விலை ரூ.50) - மௌன வெளி (விலை ரூ.40) - சிந்தைகளின் சிதறல் (விலை ரூ.35) - சரணாகதி (விலை ரூ.125) - நந்தவனம் (விலை ரூ.70) - வழி விடுங்கள் (விலை ரூ.40) - தேவதை உலா (விலை ரூ.40) - வேணு கானம் (விலை ரூ.40) - கரையான் அரித்த கடிதங்கள் (விலை ரூ.60) - திருநாவுக்கரசர் (அப்பர்), சிறுத்தொண்டர் (விலை ரூ.10) - கடவுளின் வாசி இரகசியம் (விலை ரூ.20) - சங்கமம் (விலை ரூ.30)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.

உறுப்பினராக சேர விரும்புவோர், கட்டணத்தொகை ரூ.100 மட்டும் எமது ஏதாவதொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு, கட்டணம் அனுப்பிய விவரம், உங்கள் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எமக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

தொடர்புக்கு: பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com

உறுப்பினர் பட்டியல்  -   உறுப்பினர் சலுகைகள்




(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)

முதல் பாகம்

10. சமய அறிவின் உதயம்

     எனது ஆறு அல்லது ஏழாவது வயதிலிருந்து பதினாறாம் பிராயம் வரையில் நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். மதத்தைத் தவிர மற்ற எல்லாவிதமான விஷயங்களைப்ப்பற்றியும் எனக்குப் போதித்தார்கள். உபாத்தியாயர்கள், தங்கள் அளவில் எவ்விதமான சிரமமுமின்றி எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடியவை எனக்குக் கிடைக்கவில்லை என்றே கூறுவேன். என்றாலும், அக்கம் பக்கங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக சமய ஞானம் பற்றி நான் அறிந்து வந்தேன். சமயம் என்பதை அதன் விரிவான கருத்தில் - தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே நான் உபயோகிக்கிறேன்.

     வைஷ்னவக் குடும்பத்தில் பிறந்தவனாகையால் நான் அடிக்கடி விஷ்ணு கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால் அது என் மனதை ஒரு போதும் கவரவில்லை. அதன் பகட்டும் ஆடம்பரமும் எனக்குப் பிடிக்கவே வில்லை. அதோடு ஒழுக்கவீனமான காரியங்கள் பல அங்கே நடக்கின்றன என்ற வதந்திகளையும் கேள்விப்பட்டேன். ஆகவே, கோயிலுக்குப் போவதில் எனக்கு சிரத்தையில்லை. இதனால், விஷ்ணு கோயிலிலிருந்து நான் எதையும் பெறவில்லை.

     ஆனால், கோயிலில் நான் பெற முடியாது போனதை, எங்கள் குடும்ப வேலைக்காரக் கிழவியான என் செவிலித் தாயிடமிருந்து பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர். அவளுக்கு என் மீதிருந்த பிரியம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. எனக்குப் பேய், பிசாசுகளின் பயம் இருந்தது என்று முன்பே கூறியிருக்கிறேன். ராம நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதே அந்தப் பயத்தைப் போக்குவதற்கான மருந்து என்று எனக்கு ரம்பா யோசனை கூறினாள். அவள் கூறிய பரிகாரத்தில் எனக்கு இருந்த நம்பிக்கையைவிட அவளிடம் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு ஆகையால், பேய் பிசாசுகளிடம் எனக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கு இளம் பிராயத்திலிருந்தே ராம நாம ஜபம் செய்வேன். இது தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால் குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட அந்த நல்ல விதை வீணாகப் போய் விடவில்லை. அந்த நல்ல பெண்மணியான ரம்பா விதைத்த விதையினாலேயே ராம நாமம் இன்று எனக்குப் பொய்க்காத அருமருந்தாக இருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.

     இந்தச் சமயத்தில் ராமாயண பக்தரான என் பெரியப்பா பிள்ளை ஒருவர், நானும் என் சின்ன அண்ணனும் ராமரட்சை கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதை மனப்பாடம் செய்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்த பிறகு வழக்கமாக அதைப் பாராயணம் செய்து வந்தோம். நாங்கள் ராஜ்கோட்டை அடைந்ததும் அதை மறந்துவிட்டோம். ஏனெனில் அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நான் அதைப் பாராயணம் செய்து வந்ததற்கு ஒரு காரணம், சுத்தமான உச்சரிப்புடன் ராமரட்சையை என்னால் பாராயணம் செய்ய முடிகிறது என்பதில் நான் கொண்டிருந்த பெருமையேயாகும்.

     என்றாலும், என்னுள் ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியது, என் தந்தையார் எதிரில் ராமாயணம் படிக்கப்பட்டு வந்ததாகும். என் தந்தை நோயுற்றிருந்த சமயம் கொஞ்ச காலம் போர்பந்தரில் இருந்தார். அங்கே மாலை நேரத்தில் ராமயணத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். அவ்விதம் ராமாயணம் வாசித்து வந்தவர் சிறந்த ராம பக்தர். அவர் பிலேஸ்வரைச் சேர்ந்த லதா மகராஜ் என்பவர். அவருக்கு குஷ்ட நோய் இருந்து குணமாகிவிட்டது. எந்த மருந்தினாலும் அவருக்குக் குணமாகிவிடவில்லை என்றும், பிலேஸ்வரர் கோயிலில் மகாதேவர் சிலைக்கு அர்ச்சனை செய்து, பிறகு தூரப் போடப்படும் வில்வ இலைகளைத் தமது உடலில், குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டியதாலும், விடாமல் ராமநாம ஜபம் செய்ததாலுமே அந்நோய் அவருக்குக் குணமாயிற்று என்றும் சொல்லுவார்கள். அவருடைய நம்பிக்கை அவர் நோயைப் போக்கியது என்பார்கள். நாங்கள் என்னவோ இக்கதையை நம்பினோம். லதா மகராஜ் எங்கள் வீட்டில் ராமாயணம் வாசிக்க ஆரம்பித்தபோது அவர் உடலில் குஷ்டநோய் என்பதே இல்லை என்பது உண்மை. அவருக்கு இனிமையான சாரீரம் இருந்தது. கண்ணிகளையும் விருத்தங்களையும் பாடுவார். அவற்றை விளக்கிப் பொருள் சொல்லுவார். சொல்லும்போதே மெய் மறந்து அவர் பரவசமாகிவிடுவதோடு கேட்போரையும் மெய் மறந்திருக்கச் செய்துவிடுவார். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். என்றாலும், அவர் வாசிப்பதைக் கேட்டு நான் பரவசமாகிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ராமாயணத்தினிடம் எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதற்கு அடிகோலியதே அதுதான். பக்தி நூல்களிலெல்லாம் தலையாய நூல் துளசிதாஸரின் ராமாயணமே என்று நான் இன்று கருதுகிறேன்.

     இதற்கு சில மாதங்கள் கழிந்து நாங்கள் ராஜ்கோட்டிற்கு வந்தோம். ராமாயண பாராயணம் எதுவும் இங்கே நடைபெறவில்லை. ஒவ்வொர் ஏகாதசி தினத்தன்றும் பாகவதம் படிப்பது வழக்கம். சில சமயங்களில் நான் கேட்கப் போவேன். ஆனால், அதைப் படித்தவரோ, கேட்போருக்கு உருக்கம் உண்டாக்கக் கூடியவர் அன்று. பாகவதம் சமய உணர்ச்சியை உண்டாக்க வல்ல நூல் என்பதை இன்று நான் காணுகிறேன். அதைத் தீவிரமான சிரத்தையுடன் குஜராத்தி மொழியில் படித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இருபத்தொரு நாள் உண்ணாவிரத காலத்தில் பாகவதத்தின் மூலத்திலிருந்து சில பகுதிகளைப் பண்டித மதன் மோகன மாளவியா படிக்க நான் கேட்டேன். பண்டித மாளவியாவைப் போன்ற ஒரு பக்தர் அதைப் படிக்கச் சிறு வயதிலேயே நான் கேட்டிருந்தால் அப்போதிருந்தே அதன் மீது எனக்கு விருப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரிந்தது. அந்த வயதில் உருவாகும் அபிப்ராயங்கள் ஒருவருடைய சுபாவத்தில் ஆழ வேரூன்றி விடுகின்றன. அந்தக் காலத்தில் இதுபோன்ற மற்றும் பல நல்ல நூல்களைப் படிக்கக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாது போயிற்றே என்ற வருத்தம் என்னைவிட்டு என்றும் நீங்காது.

     என்றாலும் ஹிந்து சமயத்தின் எல்லா உட்பிரிவுகள் சம்பந்தமாகவும், மற்றச் சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத் தன்மையுடன் இருக்கும் ஆரம்பப் பயிற்சியும் எனக்கு ராஜ்கோட்டிலேயே கிடைத்தது. ஏனெனில், என் தந்தையும் தாயாரும் விஷ்ணு கோயிலுக்குப் போவதோடு சிவன் கோயிலுக்கும், ராமர் கோயிலுக்கும் போவார்கள். அங்கெல்லாம் சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துப் போவார்கள்; அனுப்புவார்கள். ஜைன பிஷுசுக்கள் அடிக்கடி என் தந்தையைப் பார்க்க வருவார்கள். ஜைனர்கள் அல்லாத எங்கள் வீட்டில் சாப்பிடும் அளவுக்கும் அவர்கள் தாராளமாக நடந்து கொள்ளுவார்கள். சமய விஷயங்களைக் குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என் தந்தையுடன் அவர்கள் பேசுவார்கள்.

     இதல்லாமல் அவருக்கு முஸ்லீம், பார்ஸி நண்பர்களும் உண்டு தங்கள் சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம் பேசுவார்கள். எப்பொழுதுமே அவர்கள் கூறுவனவற்றிற்கு மதிப்புக் கொடுத்தும், பெரும்பாலும் சிரத்தையுடனும் இவர் கேட்பார். என் தந்தையாருக்கு நான் பணிவிடை செய்து வந்ததால் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிட்டியது. மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னுள் வளர்ந்தன.

     அச்சமயம் கிறிஸ்தவ மதம் மாத்திரம் இதற்கு ஒரு விலக்காக இருந்தது அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அக்காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள், உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் தெருத் திருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இதை என்னால் சகிக்க முடிவதில்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே நின்றிருப்பேன். இந்தப் பரீட்சை இனி வேண்டாம் என்று நான் தீர்மானித்து விட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பெற்றார் என அறிந்தேன். அவர் 'ஞானஸ்நானம்' செய்விக்கப் பெற்ற போது, மாட்டிறைச்சி தின்று, மதுபானமும் குடிக்க வேண்டியிருந்தது என்றும், தமது உடையையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அது முதல் அவர் ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் போக ஆரம்பித்தாராம். இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின. 'மாட்டிறைச்சி தின்ன வேண்டும் என்றும், குடிக்கவேண்டும் என்றும், தமது சொந்த உடையை மாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்றும், ஒருவரைக் கட்டாயப் படுத்தும் ஒரு மதம், மதம் என்ற பெயருக்கே நிச்சயமாக அருகதையில்லாதது' என்று நான் எண்ணினேன். புதிதாக மதம் மாறியவர், தமது மூதாதையாரின் மதத்தையும், பழக்க வழக்கங்களையும், நாட்டையும் தூஷித்துப் பேசவும் தலைப்பட்டு விட்டார் என்றும் கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் கிறிஸ்தவத்தின் மீது எனக்கு வெறுப்பை உண்டாக்கின.

     மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மை கொள்ள நான் கற்றிருந்தேன் என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமான நம்பிக்கை இருந்தது என்பது பொருளல்ல. அந்த சமயத்தில் மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது. படைப்பைப் பற்றியும், அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை. இதற்குமாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச் சாயும்படியும் அது செய்தது.

     என் பெரியப்பா பிள்ளை ஒருவர் உண்டு. அவர் இன்றும் இருக்கிறார். அவருடைய அறிவாற்றலில் எனக்கு அபார மதிப்பு உண்டு. எனக்கு இருந்த சந்தேகங்களையெல்லாம் குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவற்றைத் தீர்த்துவிட அவரால் இயலவில்லை. "உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை எல்லாம் நீயே தீர்த்துக் கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட சந்தேகங்கள் உனக்குத் தோன்றலாகாது" என்று பதில் சொல்லி, அவர் என்னை அனுப்பிவிட்டார். என் வாய் அடைப்பட்டுப் போயிற்று. ஆயினும், மனம் திருப்பதியடையவில்லை. மனுஹ்மிருதியில் உணவு பற்றியும் அது போன்றவை குறித்தும் கூறப் பட்டிருந்தவை, தினசரி வழக்கத்திற்கு மாறுப்பட்டவை என எனக்குத் தோன்றின. இதில் எனக்கு உண்டான சந்தேகத்திற்கும் அதே பதில்தான் கிடைத்தது. அறிவு வளர வளர, அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப் புரிந்து கொள்ளுவேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

     மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சாதருமத்தை எனக்கு போதிக்கவிலலை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப் பூச்சிகள் போன்ற ஜந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.

     ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது. 'ஒழுக்கமே எல்லாவற்றிக்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றிற்கும் சாரமும்' என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது.

     அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. தீமை செய்தோருக்கும் நன்மையே செய் என்ற அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில் எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள் இவை:

'உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிய படைத்திடுவாய்.
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்.
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,
வையத்தார் எல்லோரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண
நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.'




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai1-10.html



தேடல்
தேடல்
 

சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மணி மாலை
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மணிபல்லவம்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாலவல்லியின் தியாகம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்




செய்திகள்
சென்னை: தாய், மனைவி, மகளை கொன்று டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
சென்னை: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி
பேச்சுவார்த்தை தோல்வி: என்.எல்.சி. தொழிலாளர்கள் 28ந் தேதி உண்ணாவிரதம்
அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு
சேலம்: மான் வேட்டையாடிய ரிடையர்ட் டி.எஸ்.பி. உள்பட 4 பேர் கைது
நாஞ்சில் சம்பத் இல்ல திருமண விழா: முதல்வர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து
பிரபல ரவுடி வளத்திக்குமார் குண்டர் சட்டத்தில் கைது
எல்லைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும்: சீன பிரதமர்
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் ஏலம்
கோவில்பட்டி: வங்கியில் அடகு வைத்த ரூ.16 லட்சம் நகைகள் மாயம்
நிதிநிறுவனங்களை கண்காணிக்க செபிக்கு அதிகாரம் அரசு திட்டம்
ஜூன் 2ஆம் தேதி 'சிங்கம் 2' பாடல்கள் ரிலீஸ்
ஒரே நாளில் ஐந்து மைனர் திருமணங்கள் நிறுத்தம்: தேனி ஆட்சியர் நடவடிக்கை
காவிரி நீர் பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வருஷநாடு வனப்பகுதியில் ராசிக்கல் தோண்டிய கும்பல் ஆயுதங்களுடன் கைது
(செய்தி பதிவு செய்த நாள் : 2013 மே 21 - 15:00 இந்திய நேரம்)
Newspaper Bags - செய்தித்தாள் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் செய்தித்தாள் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. நியூஸ்பேப்பர் பேக் - சிறியது
அளவு 1 : உயரம் 22 செ.மீ. (9 இஞ்ச்) - அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.00 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை 80 பைசா
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. நியூஸ்பேப்பர் பேக் - பெரியது
அளவு 2 : உயரம் 26 செ.மீ. (10.5 இஞ்ச்) - அகலம் 24 செ.மீ. (9.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.1.30
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)

Paper Bags - காகிதப் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் காகிதப் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. பேப்பர் பேக் - சிறியது
அளவு: உயரம் 23 செ.மீ. (9 இஞ்ச்) - அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்) - பக்கவாட்டு அகலம் 5 செ.மீ. (2 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.5.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.5.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000 - ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. பேப்பர் பேக் - பெரியது
அளவு: உயரம் 25 செ.மீ. (10 இஞ்ச்) - அகலம் 20 செ.மீ. (8 இஞ்ச்) - பக்கவாட்டு அகலம் 6 செ.மீ. (2.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.6.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.6.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000 - ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)
Candles - மெழுகுவர்த்திகள்
எங்களிடம் முதல் தர மெழுகால் செய்யப்பட்ட தரமான மெழுகுவர்த்திகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். பல வண்ணங்களிலும், இனிமையான நறுமணத்துடனும் கூடிய மெழுகுவர்த்திகள் பலவித வடிவங்களில் கிடைக்கும்.

1. அளவு 1
6 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.1.50)
1 கிலோவுக்கு 170 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

2. அளவு 2
10 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.2.50)
1 கிலோவுக்கு 100 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

3. அளவு 3
220 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.75.00)
1 கிலோவுக்கு 4 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.225
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

வாசனை சேர்க்கப்பட்ட மெழுகுவர்த்திகளுக்கு 1 கிலோவுக்கு ரூ.25 கூடுதலாக செலவாகும்.

தொடர்புக்கு: ச.சுதாதேவி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-50.
பேசி: +91-99427-32425, 86081-55133 மின்னஞ்சல்: sudha@chennainetwork.com