|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த: (Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
புதிய வெளியீடு! |
1
நாட்டிலே இருக்கிற சாதி மதங்கள் போதாதென்று புதிதாக இல்லாத ஒன்றை பற்றி ஏன் எழுதுகிறாய்? என்று எடுத்த எடுப்பிலேயே மிகவும் கோபமாக பெரும்பாலனவர்கள் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த தொடர் கட்டுரையின் முடிவில் அப்படி கேள்வி எழுப்பிய அனைவரும் தங்களின் கோபத்தை மறந்து, நான் சொல்லியுள்ளது உண்மைதான் என்று கட்டாயம் ஒப்புக் கொள்வீர்கள்.
இன்னும் என்ன விளக்கம் வேண்டிக்கிடக்கிறது... கட்டுரையைப் படிக்க படிக்க உங்கள் கோபம் தானாகக் குறைகிறாதா இல்லையா பாருங்கள். என் முன்னால் சிரிக்க வெட்கமாய் இருந்தால் தனியே போய் கெக்கே பிக்கே என்று சிரித்து விடுங்கள். சிரிப்பை அடக்கக் கூடாது. இனி கட்டுரையைத் தொடங்குவோம்... பொதுவாக இனம் என்பதற்கு உதாரணமாக, தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று கொள்ளலாம். அதனால் தான் "தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டு" என்று பாடிச் சென்றார் நாமக்கல் கவிஞர். இவர்களை எப்படி அடையாளம் காணுவோம்? பொது இடத்தில் இரண்டு பேர் சந்திக்கும் போது கன்னடத்தில் பேசிக்கொண்டால் அவர்களை கன்னடர்கள் என்றும், தெலுங்கில் பேசிக் கொண்டால் தெலுங்கர்கள் என்றும் மலையாளத்தில் பேசிக்கொண்டால் மலையாளிகள் என்றும் சொல்லுவோம். அதுவே இரண்டு பேர் சந்திக்கும் போது, தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தும், அரை குறை ஆங்கிலத்தில் பேசிக் கொண்டால் அவர்களை நாம் தமிழர்கள் என்று சொல்வதில்லையா? அது போல் இரண்டு பேர் பேசிக் கொள்வதை வைத்தே அவர்களை 'அரசு ஊழியர்' இனம் என்று உடனே முடிவு செய்து விடலாம்? அதுவும் அவர்கள் பேசும் விஷயம் பெரும்பாலும் ஒன்று தான்... அப்படி எதைப் பேசுவார்கள் என்று கேட்கிறீர்களா? "என்ன சார் டி.ஏ. அரியர்ஸ் வாங்கிட்டீங்களா?" அவர்களின் பேச்சில் டி.ஏ., அரியர்ஸ், சம்பள கமிஷன், தீபாவளி அட்வான்ஸ், பொங்கல் போனஸ், இன்கிரிமெண்ட் போன்ற வார்த்தைகள் கட்டாயம் இருக்கும். இதில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. ரிடையர் ஆனவரும், நேற்று தான் புதிதாக சேர்ந்தவரும் ஒரே மாதிரிதான் பேசுவார்கள். அரசு ஊழியர்கள் எந்த சூழ்நிலையில் சந்தித்தாலும், இந்த பேச்சு மட்டும் கண்டிப்பாக மாறாது. அது கல்யாண விசேஷமாக இருக்கலாம், சாவு வீடாக இருக்கலாம், சினிமா தியேட்டராக இருக்கலாம், அல்லது காதுகுத்து வைபவமாக இருக்கலாம். அவர்களுக்கு என்று ஒரு தனி உலகம் கண்டிப்பாக இயங்குகிறது என்று சொன்னால் அதில் தவறில்லை. அதில் அவர்களின் கவலை எல்லாம் மேலே சொன்ன அந்த வார்த்தைகளைச் சுற்றியே இருக்கும். மத்திய அரசு டி.ஏ. ஏற்றியதாக அறிவிப்பு வந்ததுமே மாநில அரசு ஊழியர்கள் தங்களின் டி.ஏ. பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா, எத்தனை மாத அரியர்ஸ் கிடைக்கும், அதில் தங்களுக்கு எவ்வளவு வரும். அது சம்பளத்தோடு சேர்த்து கிடைக்குமா, அல்லது சம்பள பில் போன பிறகு தனியாக பில் போட்டு பாஸ் செய்வார்களா? டிரசரியில் எத்தனை நாள் டிலே செய்வார்கள்? (கருவூலம் என்ற அழகிய தமிழ்ச் சொல் பெயர் பலகையில் மட்டுமே உள்ளது) அரியர்ஸ் தொகை வருவதற்கு லேட்டாகும் போல் தெரிந்தால் அந்த தொகைக்கு முன்கூட்டியே யாரிடம் கடன் வாங்கலாம்? இவை தான் அவர்களின் தினப்படி தாரக மந்திரமாக இருக்கும். அவர்கள் கைக்கு அந்த அரியர்ஸ் பணம் வந்து சேரும் வரை இதே நினைப்புதான். ஒருவேளை சீக்கிரம் அரியர்ஸ் கிடைத்துவிட்டால், அடுத்த வீட்டுக்காரருக்கோ, நண்பருக்கோ (அவர் வேறு டிபார்ட்மெண்டாக இருந்தால்) அரியர்ஸ் கிடைத்துவிட்டதா என்று விசாரணை தொடங்கி விடும். அந்த அரியர்ஸ் பணத்தை செலவு செய்த பிறகு தான் அவர்கள் மனம் நிம்மதி அடைந்து பழைய நிலைக்குத் திரும்பும். இப்போது மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் எந்த அரசு ஊழியராவது டி.ஏ.வைப் பற்றி யாரிடமும், முக்கியமாக பிற அரசு ஊழியரிடம் பேசுவதே இல்லை என்று. ஐயா, அது அவர்களின் பிறப்புரிமை. அப்படி அவர்களில் யாராவது பேசவில்லை என்றால் தான் அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். வருடக்கணக்காக மேலே சொன்ன நிகழ்ச்சிகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் அனுபவித்திருக்கிறேன். (என்ன கொடுமை சரவணன்?) என்ன விழிக்கிறீர்கள்? என் அப்பாவும் ஒரு அரசு ஊழியர் தான்... |
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) |
தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) |
ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் |
சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் |
புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) |
அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) |
பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் |
பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் |
மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) |
ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) |
லா.ச.ராமாமிருதம் : அபிதா |
சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை |
ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் |
ரமணிசந்திரன் |
சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் |
க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு |
கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் |
மகாத்மா காந்தி : சத்திய சோதனை |
ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி |
பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி |
மாயாவி : மதுராந்தகியின் காதல் |
வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் |
கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் |
என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் |
கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே |
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு |
விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் |
கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) |
பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) |
ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி |
ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் |
வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் |
சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை |
மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா |
கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் |
ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை |
திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் |
திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் |
ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை |
முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் |
நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா |
இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை |
உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா |
குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் |
பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் |
நான்மணிமாலை நூல்கள் :
திருவாரூர் நான்மணிமாலை |
தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது |
கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை |
கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் |
சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் |
பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா |
ஆன்மீகம் : தினசரி தியானம் |
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|
© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் |