அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலக் காரிகை
தற்சிறப்புப் பாயிரம்
கந்தம் மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ் எந்தம் அடிகள் இணையடி ஏத்தி எழுத்து, அசை, சீர் பந்தம், அடி, தொடை, பா, இனம் கூறுவன் பல்லவத்தின் சந்த மடிய அடியான் மருட்டிய தாழ்குழலே! 1 அவையடக்கம்
தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக் கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல் யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால் ஆனா அறிவின் அவர்கட்கென் னாங்கொலென் ஆதரவே. 2 சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம், பனி மாலிமயப் பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய் இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே. 3 உறுப்பியல்
எழுத்து
குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும் சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைஇய நுண்ணிடையாய் அறிஞர் உரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே. 4 அசை
குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்று அறிவேய் புரையுமென் தோளி உதாரணம்ஆழிவெள்வேல் வெறியே சுறாநிறம் விண்தோய் விளாமென்று வேண்டுவரே. 5 சீர்
ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம் நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர் ஓரசை யேநின்றுஞ் சீராம் பொதுவொரு நாலசையே. 6 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |