|
News | |
-Gas pipe link to TN from KG basin by 2012-Karunanidhi flays opposition leaders for criticising budget -Karunanidhi clarifies on lower revenue receipts -Police probing inputs on LTTE cadre entering TN -Sahitya Akademi translating works of Subramania Bharathiar -Jayalalithaa slams fancy announcements -TN: New department for disabled well received -Villupuram-Mayiladuthurai BG line cleared for passenger traffic -State will never give up its rights on Mullaperiyar dam: Karunanidhi -Sugarcane procurement price to go up to Rs.2,000 |
-Cabinet gives approval for ESI benefits to unorganised workers-BJP opposes serving of beef during C'wealth Games -Girija Prasad Koirala dead -Strong earthquake jolts Papua New Guinea coast -Pranab launches IndiaFirst Life Insurance -Dhoni likely to rejoin CSK for Mumbai match -New IPL teams likely to be named on today -Five special teams set up to probe bomb on Bangalore plane incident |
![]() |
| ||||||||||||||
ஐம்பெருங் காப்பியங்களுள் நான்காவது வளையாபதி
புகார் நகரில் நவகோடி நாராயணன் என்னும் செல்வச் செழிப்புமிக்க வணிகன் இருந்தான். அவன் சைவ சமயத்தவன். அவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி அவன் குலத்தைச் சார்ந்தவள். இரண்டாம் மனைவி வேறு குலத்தைச் சார்ந்தவள். அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தவே அவன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பிறிந்த சமயத்தில் அப் பெண் கருவுற்றிருந்தாள். பின்னர் அவன் கடற்பயணத்தை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு வந்தாள். சில மாதம் கழித்து அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டு தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்தவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அது கேட்ட அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான். இவ்வாறு இக் காப்பியத்தின் கதை கூறப்பட்டாலும், இந்நூல் சமண சமயக் கருத்துக்களையும் கூறுவதால், சமண நூலில் காளியைப் பற்றிய செய்திகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் செய்யுட்கள் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலவில்லை. கடவுள் வாழ்த்து
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண் திலகம் ஆய திறல் அறி வன் அடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான். 1 [இளம்பூரனார் தொல்காப்பிய உரையில் செய்யுளியல் 98ஆம் நூற்பாவுக்கும்,
யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும்
நூற்பெயரைக் குறிப்பிடாமல் மேற்கோளாக இச் செய்யுளைக் காட்டியுள்ளனர்.
நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148ஆம் நூற்பாவின் உரையில்
இப்பாடல் வளைபதிச் செய்யுள் எனக் கூறப்பட்டுள்ளது.]
[பின் வரும் 66 பாடல்கள் புறத் திரட்டிலிருந்து தொகுக்கப்
பட்டவை]
வினைபல வலியி னாலே வேறுவேறு யாக்கை யாகி நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு மனிதரின் அரியதாகும் தோன்றுதல்; தோன்றி னாலும் இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம். 2 உயர்குடி நனிஉள் தோன்றல் ஊனமில் யாக்கை ஆதல் மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல் பெரிதுணர் அறிவே யாதல் பேரறம் கோடல் என்றாங்கு அரிதிவை பெறுக லோடே பெற்றவர் மக்கள் என்பார். 3 நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும் பீடுறும்மழை பெய்கஎனப் பெய்தலும் கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால் பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே. 4
|
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |