உதயண குமார காவியம் ... தொடர்ச்சி - 2 ... பிரச்சோதனன் உதயணனைத் தழுவுதல் சால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி கால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான். 101 பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல் மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப் பெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான். 102 உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல் வேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும் பூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள் வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச் சேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே. 103 மன்னன் மைந்தர் அரங்கேறுதல் உரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள் அரசிளங்குமரர் வித்தை யண்ணனீ காண்கவென்ன வரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி வரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான். 104 வாசவதத்தை யாழ் அரங்கேற்றம் வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ் பேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி ஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே ஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான். 105 வாசவதத்தை யாழ் இசையின் மாண்பு விசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும் பசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார் வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும் அசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே. 106 பிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல் வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி வத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும் வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன வத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார். 107
பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல் ஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை ஈரிரண்டாயிரங்களெழின் மணிப் பொன்னின்றேரும் போரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும் வீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான். 108 யூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல் யூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி வாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம் நகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப் போக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான். 109 பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு
தீயிடுதல் மன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று துன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட நன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப உன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே. 110 உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல் பயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக வயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும் நயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி கயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே. 111 வயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச் செயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப வியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான். 112 நலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு நிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம் நலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக் குலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே. 113 பிடி வீழ்தல் அசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி இசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத் தசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில் இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே. 114 உதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல் உவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப் பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத் தவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித் துவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள். 115 வயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல் பாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும் பூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப வாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான் போவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான். 116 வேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல் சூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு நாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று வீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து சூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார். 117 உதயணனுடன் வேடர் போர் செய்தல் வந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும் தந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும் வெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ நந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான். 118 வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன்
வரவும் செய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன் உய்வகையுங்களுக்கின்றுறு பொருளீவன் என்ன ஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ மெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான். 119 உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல் அன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார் இன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற நன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப் பண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான். 120 2. இலாவாண காண்டம் உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும் தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின் என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான். 121 உதயணன் வாசவதத்தை திருமணம் இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால் நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல் புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன் அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான். 122 கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில் ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும் பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான். 123 உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல் இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன் கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான் அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம் விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான். 124 ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன் எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற் பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன் எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன். 125 மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன் உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன் விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான். 126 யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும் இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன் முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின் அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே. 127 சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும் உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும் தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும் குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும். 128 இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும் குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின் இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான். 129 யூகியின் செயல் சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன் ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர் நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும் பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன். 130 படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன் முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள் இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள். 131 சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல் வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின் சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன் போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள். 132 உதயணன் செயல் அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத் தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள் புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின் தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன். 133 உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல் முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக் கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள் துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான். 134 உதயணனன் தழைகொண்டுவரப் போதல் கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன் கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான். 135 யூகியின் செயல் மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத் துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய் தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர். 136 சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து
வருதல் நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந் தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன் துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான். 137 யூகி வாசவதத்தையை வரங்கேட்டல் என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள். 138 உதயணன் மீண்டும்வந்து வருந்துதல் சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக் கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென் றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக் கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன். 139 பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய் மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான் நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான். 140 உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல் கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின் எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர் நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான். 141 மனம்வருந்தி உதயணன் அழுது புலம்பல் மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன் கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான் புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன். 142 மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும் தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும் வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும். 143 நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம் கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம் சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன். 144 வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான். 145 அமைச்சர் தேற்றுதல் துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன் இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன். 146 யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல் அண்ண றன்னிலை அறிந்த யூகியும் திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு மண்ணு வாவினை மன்னன் அண்டையில் எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான். 147 வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல் தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான் துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன் மன்னற் குறுதி மறித்தினிக் கூறும் பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப. 148 வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில் இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன் தத்துவ முனியுளனாமினிச் சார்வோம். 149 உதயணன் மகதநாடு செல்லல் வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே. 150 3. மகத காண்டம் வாசவதத்தையை நினைத்து உதயணன் வருந்துதல் சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான் நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும் வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான். 151 செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே. 152 உதயணன் மகதநாடு அடைதல் கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம் காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன் காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான். 153 அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல் மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம் தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன் இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற் பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே. 154 காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக்
கூறுதல் காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற் சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில் நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே. 155 காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல் திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும் தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும். 156 பதுமாவதியும் உதயணனும் காமுறுதல் பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத் திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள். 157 உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல் யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக் காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின் சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே. 158 உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல் எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும் மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத் தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார். 159 பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல் மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத் தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக் காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும். 160 அமைச்சன் உருமண்ணுவாவின் உரை ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப் போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும் போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே. 161 அமைச்சன் உருமண்ணுவாவின் செயல் உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள் மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள் மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான். 162 உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல் யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப் பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில். 163 சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப் படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான் முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான் உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார். 164 மகதத்தை அழிக்கத் துவங்குதல் தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார் தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான். 165 அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார். 166 மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம் இன்னு ரைகளியல்பின் வரவரத் துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை உன்னினர்கரந் துரைகள் பலவிதம் 167 பகைவர் ஐயுற்று ஓடுதல் உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின் முரியும் சேனை முயன்றவ ரோடலிற் றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம் மருவி யையம் மனத்திடை நீங்கினார். 168 பகைவர் கூடி விவாதித்தல் இரவு பாசறை யிருந்தவர் போனதும் மருவிக் கூடியே வந்துடன் விட்டதும் விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின் அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன். 169 அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல் வார ணிக் கழல் வத்தவன் றன்செயல் ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக் கேரணிய ரசருக் கியல் கூறலும் தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன். 170 தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல் ஆரா வுவகையுள் ளாகி யரசனும் பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன் நேரா மாற்றரை நீக்குவனானென்றான். 171 படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல் உலம்பொருத தோளுடை யுதயண குமரனும் நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப் புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன் நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன். 172 உதயணன் பதுமாவதி மணம் வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத் தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின் மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன். 173 தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல் புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின் பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன் துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம் அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே. 174 அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும் நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும் பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும் உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும். 175 சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம் பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன். 176 வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச் செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன் எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர். 177 பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல் பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும் தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும் அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர் பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர். 178 வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல் வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப் பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம் திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப் பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர். 179 உதயணன் ஆருணி அரசன் போர் அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச் சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும் அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன் அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே. 180 போர்க் காட்சிகள் விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும் பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும் முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும் வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே. 181 உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல் மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத் தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால் மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கென ஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே. 182 உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல் பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென வகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றது தொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன் நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன். 183 உதயணன் அரண்மனை புகுதல் மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக் கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார் பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல் ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன். 184 உதயணன் திருமுடி சூடுதல் படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன் இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின் தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள். 185 4. வத்தவ காண்டம் உதயணன் அரசு வீற்றிருத்தல் மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப் பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில் தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல் மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின் 186 உதயணனின் கொடை மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக் கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான். 187 உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும்
உருவம் செய்தலும் மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத் துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப் பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே. 188 உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல் அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான் திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு பொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே. 189 பதுமாவதி யாழ் கற்க விரும்புதல் மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும் மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போல விதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள். 190 உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல் பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன் ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான். 191 உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல் கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார் அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள் கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம் இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார். 192 உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல் வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம் தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன ஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வை வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே. 193 அமைச்சர் உருமண்ணுவா விடுதலை என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்து சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடு ஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான். 194 உருமண்ணுவா உதயணனை அடைதல் மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக் காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டு மாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறி வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே. 195 வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல் வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும் ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும் தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்து பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார். 196 உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல் நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள் வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப் பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டு வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை. 197 யூகியின் உரை இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும் திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்று மருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன் அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே. 198 உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல் ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச் சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தே ஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாச நீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட. 199 பதுமாவதியின் வேண்டுகோள் யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான் நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின் பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள் ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான். 200 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2016 பக்கங்கள்: 382 எடை: 400 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-81-84766-94-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 415.00 தள்ளுபடி விலை: ரூ. 375.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட வேறு எந்தக் கோபுரமும் உயரமாக இருக்கக் கூடாது என்று ஓர் எழுதப்படாத சட்டமே இருந்தது. மனக்கவலை, குழப்பம் இருந்தால் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தால் கவலை எல்லாம் அகன்று, மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அதனால்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும், ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றும் சொல்லிவைத்துள்ளனர் நம் முன்னோர். அப்படிப்பட்ட பாரம்பர்யம் கொண்ட கோயில்களின் தனிச் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். மகரிஷிகள் வழிபட்ட திருத்தலங்கள், மகான்களின் திருவடிகள் பதிந்த ஆலயங்கள், மன்னர்கள் எழுப்பி பாதுகாத்த கோயில்கள் என ஒவ்வொரு கோயிலின் வரலாற்றையும், அந்தக் கோயிலில் எழுந்தருளிய இறைவனின் புராணத்தையும் விளக்குகிறார் நூலாசிரியர். இறைவனை வழிபடும் கோயில்களின் புனித வரலாறு நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்யக் கோயில்களைப் பற்றி நாமும் நம் சந்ததியினரும் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும். ஓர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பெற, அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள். நேரடியாக வாங்க : +91-94440-86888
|