http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




அத்தியாயம் 3 - பாழடைந்த கோவில்

     பூங்குளம் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள கிராமம். ஊருக்கு வடக்கே போகும் குறுகலான வண்டிப் பாதை வழியாகக் கொஞ்ச தூரம் போனோமானால் ராஜன் வாய்க்கால் எதிர்ப்படும். சாகுபடி காலத்தில் இந்த வாய்க்காலில் ஒரு ஆள் மட்டத்திற்கு மேல் ஜலம் அதிக விரைவாகப் போய்க்கொண்டிருக்கும். மூங்கில் பாலத்தின் வழியாக ராஜன் வாய்க்காலைத் தாண்டி அப்பால் சென்றால், கொள்ளிடத்தின் லயன் கரையை அடையலாம். லயன் கரையிலிருந்து வடக்கே பார்த்தால், வெகு தூரத்துக்கு நாலா பக்கமும் அடர்ந்த காடுகள் தென்படும். தண்ணீர்த் துறைக்குப் போக ஒரு குறுகலான ஒற்றயடைப்பாதை மட்டுந்தான். இந்தக் காட்டைப் பிளந்து கொண்டு போகின்றது. நீரோட்டத்துக்கு அருகே போகப் போக, மரம் செடி கொடிகளின் நெருக்கம் குறைந்து வந்து நீர்க்கரையில் ஒரே நாணல் காடாயிருப்பதைக் காண்போம்.

     அந்தப் பிரதேசத்தில் லயன் கரைக்கும் நதியில் நீரோடும் இடத்துக்கும் வெகு தூரம் இருக்கிறது. சில இடங்களில் இரண்டு பர்லாங்கு தூரம் கூட இருக்கும். கிழக்கேயும் மேற்கேயும் பல மைல் தூரத்துக்கு அடர்த்தியான காடுதான். பல்வேறு காட்டு மரங்களும் முட்செடிகளும் கொடிகளும் செறிந்து வளர்ந்து, மனிதர்கள் அந்தக் காட்டிற்குள் நுழைவது அசாத்தியமென்றே தோன்றும். ஆனால் கொள்ளிடக் கரையிலே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அந்தக் காட்டுக்குள் பிரவேசிப்பது மிகவும் சகஜமான காரியமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதோ அந்த இளநங்கை அவ்வளவு லாகவமாக அந்தச் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு செல்கிறாளே, அது எப்படி சாத்தியம்?

     ஆமாம்! நேற்று முத்தையன் வீதி வழியே வந்த போது, பந்தல் போட்ட வீட்டின் காமரா உள் ஜன்னலுக்குப் பின்னால் கண்ணுங் கண்ணீருமாய் நின்றாளே, அந்தப் பெண்தான் இவள். முன் அத்தியாயத்தில் நடந்த சம்பாஷணையைக் கொண்டு இவள் தான் கல்யாணி என்று நாம் ஊகிக்கலாம். அவளுக்குப் பதினேழு, பதினெட்டுப் பிராயம் இருக்கும். அவளுடைய முகத்திலே எழிலுடன் கம்பீரமும் கலந்திருந்தது. அவள் நடையிலே அழகுடன் மிடுக்கும் காணப்பட்டது. நீண்டு பரந்த அவள் கண்களிலோ, தண்மையுடன் தணலின் ஜுவாலையும் வீசிற்று.

     அடர்ந்த காட்டிற்குள் அலட்சியமாய் நுழைந்து செல்லும் கல்யாணியைப் பின் தொடர்ந்து நாமும் போகலாம். அதோ, அது என்ன யாரோ பாடுங் குரல் கேட்கிறதே! அந்தக் குரலில் தான் எவ்வளவு தீனம்; எவ்வளவு துயரம்? பாட்டின் ராகமும் விஷயமும் அந்தச் சோகமான குரலுக்குப் பொருத்தமாகவே யிருந்தன.

     "உண்டானபோது கோடி உறன் முறையோர்கள் வந்து
     கொண்டாடி தொண்டாகிக் கொள்வார் தனங் குறைந்தால்
     கண்டாலும் பேசாரிந்தக் கை தவமான பொல்லாச்
     சண்டாள உலகத்தில் சத்குருக்களைத் தேட
     என்றைக்குச் சிவகிருபை வருமோ - ஏழை
     என் மனச்சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)

     பாட்டின் குரல் வந்த வழியே கல்யாணி சென்றாள். கொஞ்ச தூரம் போனதும் காட்டிலே கொஞ்சம் இடைவெளி தென்பட்டது. என்ன ஆச்சரியம்! இங்கே ஒரு பாழடைந்த கோவில் அல்லவா இருக்கிறது? இந்த மாதிரி கோவில் ஒன்று இங்கே இருப்பது அதற்கு சமீபத்தில் வரும் வரைக்கும் தெரியவேயில்லையே?

     ஒரு காலத்தில் அது ஏதோ கிராம தேவதையின் ஆலயமாயிருந்திருக்க வேண்டும். இடிந்துபோன சுவர்களில் செடிகள் முளைத்து மண்டிக் கிடந்தன. ஒரு பக்கத்தில் வேண்டுதல் செய்து கொண்டவர்கள் கொண்டு வைத்த மண் குதிரைகளும், யானைகளும் உடைந்து கிடந்தன. இன்னொரு பக்கம் பெரிய கறையான் புற்றுக்கள் காணப்பட்டன. ஏதோ ஒரு சமயம் கொள்ளிடத்தில் பெரு வெள்ளம் வந்தபோது அந்தக் கோயில் இடிந்து போக, அதற்கு அப்புறம் அதை ஒருவரும் கவனிக்காமல் நாலாபுறமும் காடுமண்டி அது அங்கிருப்பதே தெரியாமல் போயிருக்க வேண்டும்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali1-3.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs