http://www.chennailibrary.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். சிறந்த கருத்துக்களை அனுப்பும் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு.
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும்.



அருணாசலத்தின் அலுவல்

1

     இது ஒரு கதை. இந்தச் செய்தியை ஆரம்பத்திலேயே நான் வற்புறுத்திச் சொல்லாமற் போனால், ஒரு வேளை இதை ஒரு கட்டுரை என்றோ, பிரசங்கம் என்றோ நினைத்துக் கொள்வீர்கள். மற்றோர் அபாயமும் உண்டு. இதில் வரும் சம்பவம் உண்மையாகவே நடந்தது என்று எண்ணிவிடலாம். அவ்வளவு நிஜம் போல் இருக்கும். பிறகு ஆஸாமி யார் என்று தேடப் புறப்படுவீர்கள். தன்னுடைய விஷயம் அவ்வளவு விளம்பரமாவதை என் நண்பன் அருணாசலம் ஒருவேளை விரும்ப மாட்டான்.

     இந்தப் பரந்த பூமண்டலத்திலே தற்போது தனி மனிதர்கள் முதல் அரசாங்கங்கள் வரையில் எல்லாரையும் திக்குமுக்காடச் செய்துவரும் பெரிய பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம் அல்லவா? நமது தேசத்திலும் இதுதான் பெரிய திண்டாட்டமாக இருக்கிறது. காந்தி மகான் முதல் நவ நாகரிகத்திற் சிறந்த ஸர். எம். விஸ்வேஸ்வரையா வரையில் இந்தியப் பிரமுகர்கள் அநேகர் இந்தப் பிரச்னையைப் பற்றிச் சிந்தித்து இதைத் தீர்த்து வைக்க வழி தேடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்திலும், மத்திய வகுப்பார் அதாவது படித்த ஜனங்களுடைய திண்டாட்டந்தான் மிகக் கொடியது. ஏழைக் குடியானவர்கள், தொழிலாளிகள் முதலியவர்களின் திண்டாட்டம் அவ்வளவு பெரிதல்ல; ஏனென்றால் அவர்களுக்கு பட்டினி கிடக்கும் வித்தை நன்றாய்த் தெரியவரும். 'சித்திரமும் கைப்பழக்கம்' அல்லவா? பட்டினியும், வயிற்றுப் பழக்கந்தான். ஒரு நாளைக்கு ஒரேவேளை அரை வயிற்றுக்குச் சாப்பிட்டுவிட்டுச் சந்தோஷமாய்க் காலங்கழிக்கக் கிராமத்துக் குடியானவர்களுக்குத் தெரியும். இத்தகைய மனப்பான்மைதான் தேச முன்னேற்றத்திற்கே தடையாயிருக்கிறதென்பது சிலர் கொள்கை. பட்டணங்களில் உள்ள படித்த ஜனங்களின் விஷயம் இப்படியல்ல. ஒரு வேளைக் காப்பி கிடைக்காவிட்டால் போதும்; அவர்களுடைய வாழ்க்கை சோகமயமாகி விடுகிறது.

     இந்த வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடுதலையடைய அநேகர் அநேக வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இவைகளில் சர்வ சாதாரணமாக 100-க்கு 90 பேர் முயன்று பார்க்கும் வழி ஒன்று இருக்கிறது. அதுதான் பத்திரிகைக்கு எழுதுவது. தினசரிப் பத்திரிகையில் ஒரு விசேஷக் கட்டுரையைப் படிப்பார்கள் அல்லது மாதப் பத்திரிகையில் ஒரு சிறுகதையை வாசிப்பார்கள். "என்ன பிரமாதம்? இதைப் போல் நாம் ஒன்று எழுதக் கூடாதா?" என்று தோன்றும். உடனே பத்திரிகைத் தொழிலில் பெர்னார்ட்ஷாவையும் செஸ்டர்ட்டனையும் போல் பணம் சம்பாதிப்பதாகப் பகற் கனவுகள்!

     "என்ன எழுதுவது?" என்பது அவர்கள் மனத்தில் தோன்றும் அடுத்த கேள்வி. "என்ன எழுதுவது?" என்பதையே தலைப்பாகப் போட்டுக் கொண்டு சிலர் எழுதத் தொடங்குவார்கள். "ஒன்றுமில்லை" என்ற தலைப்புடன் ஒரு வெள்ளைக்காரர் பெரிய புத்தகம் ஒன்று எழுதிவிடவில்லையா? வேறு சிலர் வேலையில்லாத் திண்டாட்டத்தையே விஷயமாகக் கொண்டு, "உத்தியோக வேட்டை" என்பது போன்ற தலைப்புக்களுடன் கட்டுரையோ, கதையோ எழுதுவார்கள். தங்களுடைய சொந்த அனுபவங்களுடன் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்ந்தால் நல்ல கதையாகி விடுமென்று நம்பிக்கை.

     இத்தகைய கதை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு, ஒரு நாள் அருணாசலம் என்னிடம் வந்தான். அவன் என்னுடைய பாலிய நண்பன். ஆனால் இடையில் பல வருஷங்களாக நாங்கள் சந்திக்கவில்லை. அவனுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிக் கேட்டேன். மூன்று வருஷங்களாக முயன்று பி.ஏ. பரிக்ஷையில் தேறியவரையில் க்ஷேமந்தான் என்றும், அதனால் லாபந்தான் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறினான். வயது இருபத்தைந்து ஆகிவிட்டபடியால் சர்க்கார் உத்தியோகம் பெறும் ஆசையை விட்டு விட்டானாம். மற்றபடி தன்னுடைய அனுபவங்களை என் கையில் கொடுத்த கட்டுரையில் காணலாம் என்று தெரிவித்தான்.

     அதை வாசித்துப் பார்த்தேன். சில அனுபவங்கள் மிகவும் ருசிகரமாகவே இருந்தன. உதாரணமாக ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன். ஒரு முறை அருணாசலம் ஆங்கிலப் பத்திரிகைகளில் பின்வருமாறு ஒரு விளம்பரஞ் செய்தான்.

     தேவை

     பி.ஏ. பட்டதாரிக்கு ரூ.100 சம்பளத்தில் ஓர் உத்தியோகம் தேவை. ரூ.1000 ரொக்க ஜாமீன் கட்டக்கூடும்.

     பெட்டி நெம்பர் 7032




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kalki/mis/arunachalathinaluval.html


இலவச தமிழ் நூல்கள்
அகநானூறு
அகல் விளக்கு
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏலாதி
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மணி மாலை
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மணிபல்லவம்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளையாபதி
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்

எமது வலைதளங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்
சென்னை நூலகம் தேடல்
Custom Search
இலக்கிய தகவல்கள்
கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சமையல்அறை.காம்
அரிசி பாயசம்
அரிசி மாவு புட்டு
அரிசி மாவு முறுக்கு
ஆட்டுக்கால் மிளகு குழம்பு
ஆட்டுக்கறி வெண்டைக்காய் குழம்பு
ஆம்பூர் மட்டன் பிரியாணி
இட்லி
இட்லி உப்புமா
இட்லி பொடி
இடியாப்ப கிச்சடி
இடியாப்பம்
இறால் கிரேவி
இறால் வறுவல்
இனிப்பு சோமாஸ்
உப்புமா
உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி மசால்
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு மசாலா
உருளைக்கிழங்கு வறுவல்
கடலைப்பருப்பு குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
கருப்பு கொண்டை கடலை சுண்டல்
களி உருண்டை
கறிவேப்பிலை சட்னி
கறிவேப்பிலை சாதம்
காய்கறி சாதம்
காய்கறி வடை
காளான் குருமா
காளான் பிரியாணி
காளிஃபிளவர் பட்டாணி மசாலா
காளிஃபிளவர் பொரியல்
கிட்னி கூட்டு
கிட்னி ஃபிரை
கீரை பொரியல்
கீரை வடை
குஸ்கா
கேரட் அல்வா
கேரட் கீர்
கேரட் சூப்
கேரட் பச்சடி
கேரட் பொரியல்
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி-2
கொத்தவரங்காய் பொரியல்
கொத்து பரோட்டா
கொள்ளு சட்னி
கொள்ளு ரசம்
கோதுமை மாவு பிஸ்கட்
கோழிக்கறி குழம்பு
சாம்பார் பொடி
சிக்கன் கிரேவி
சிக்கன் பிரியாணி
சுறா மீன் புட்டு
சேப்பங்கிழங்கு வறுவல்
சேமியா கிச்சடி
சேமியா பாயசம்
சேனைக்கிழங்கு பொரியல்
சேனைக்கிழங்கு வறுவல்
சோள மாவு அல்வா
தக்காளி கொத்சு
தக்காளி சட்னி
தக்காளி சாதம்
தக்காளி சூப்
தக்காளி ரசம்
தேங்காய் சட்னி
தேங்காய் சாதம்
தேங்காய் பர்பி
தேங்காய்ப்பால் முறுக்கு
நண்டு வறுவல்
நிலக்கடலை சட்னி
நிலக்கடலை பக்கோடா
நெத்திலி தொக்கு
நெய் சாதம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காய் பச்சடி
பச்சைப்பயிறு குழம்பு
பட்டாணி சூப்
பணியாரம்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாத பொடி
பருப்பு சாதம்
பருப்பு சாம்பார்
பருப்பு ரசப் பொடி
பருப்பு ரசம்
பரோட்டா
பழ சாலட்
பஜ்ஜி
பாசிப்பருப்பு குழம்பு
பாசிப்பருப்பு பாயசம்
பால் கீர்
பால் பாயசம்
பீட்ரூட் அல்வா
பீட்ரூட் சூப்
பீட்ரூட் பச்சடி
பீட்ரூட் பொரியல்
புடலங்காய் கூட்டு
புடலங்காய் பச்சடி
புடலங்காய் பொரியல்
புளி குழம்பு
புளி சாதம்
பூசணிக்காய் பச்சடி
பூர்ண கொழுக்கட்டை
பூரி
பொட்டுக்கடலை உருண்டை
பொட்டுக்கடலை சட்னி
பொரி உருண்டை
போண்டா
மசால் வடை
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
மாங்காய் இனிப்பு தொக்கு
மாங்காய் சாதம்
மாம்பழ ஐஸ்கிரீம்
மீன் குழம்பு
முட்டை குழம்பு
முட்டை பொரியல்
முந்திரி பக்கோடா
முந்திரி பர்பி
முருங்கை சூப்
மெது வடை
மைதா கேக்
மோர் குழம்பு
ரவா கேசரி
ரவா தோசை
ரவா புட்டு
ரவா லட்டு
ராகி அவல் புட்டு
லஸ்ஸி
லெமன் லாலி பாப் சிக்கன்
வாழைக்காய் வறுவல்
வாழைப்பூ பக்கோடா
வாழைப்பூ பொரியல்
வெங்காய சட்னி
வெங்காய பக்கோடா
வெண்டைக்காய் புளி குழம்பு
வெண் பொங்கல்
ஜவ்வரிசி பாயசம்
ஜவ்வரிசி முறுக்கு
ஜவ்வரிசி வடகம்
ஜவ்வரிசி வற்றல்
தமிழ்திரைஉலகம்.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்