http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

... தொடர்ச்சி ...

     முதல் நாள் கோயமுத்தூரில் பிரசித்தி பெற்ற ஒரு காங்கிரஸ் தொண்டர், தம்பதி சமேதராய்ச் சத்தியாக்கிரகம் செய்தார். அவர்களைப் போலீஸார் காங்கிரஸ் ஆபீஸ் வாசலிலேயே கைது செய்து கொண்டு போனார்கள்.

     அதற்குப் பிறகு நகரின் முக்கிய தெருக்களில் போலீஸ்-'மார்ச்' நடந்தது.

     மறுநாள் ஆறு தொண்டர்கள் காங்கிரஸ் ஆபீஸிலிருந்து கிளம்பினார்கள். கிளம்பி, 'வந்தேமாதரம்' முதலிய கோஷங்களைச் செய்து கொண்டு கடைத்தெரு வரையில் சென்றார்கள். வேடிக்கை பார்ப்பதற்கு ஏக ஜனக் கூட்டம் கூடிவிட்டது.

     அப்போது பலமான போலீஸ் படை அங்கு வந்து சேர்ந்தது. முன்னால் போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்குப் பின்னால் குண்டாந்தடி சகிதமாக சாதாரண போலீஸ் ஜவான்கள் - அவர்களுக்குப் பின்னால் துப்பாக்கி சகிதமாக மலபார் ஸ்பெஷல் போலீஸ் - இப்படியாக அந்தப் போலீஸ் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. தொண்டர்கள் நின்ற கடைத் தெரு முனைக்கு வந்ததும், தலைமைப் போலீஸ் அதிகாரி பயங்கரமான குரலில் போலீஸ் படையைப் பார்த்து உத்தரவுகள் போட்டார். நாலாபுறமும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்ததும் ஏதோ சொன்னார். அவர் சொன்னது இன்னதென்று யாருக்கும் தெரியவில்லை. கூட்டத்திலிருந்தவர்களில் பொறுப்பற்ற இளம் பிள்ளைகள் சிலர் போலீஸ்காரர்களைப் பரிகசிக்கும் பாவனையாகக் கூச்சலிட்டார்கள்.

     அடுத்த நிமிஷம் போலீஸ் குண்டாந்தடி கைவரிசையைக் காட்டத் தொடங்கிற்று.

     சில போலீஸ் ஜவான்கள் தொண்டர்களைச் சூழ்ந்து கொண்டு அடிக்கத் தொடங்கினார்கள். அடி ஆரம்பமான போது, தொண்டர்கள் கூட்டத்திலிருந்து 'வந்தேமாதரம்' என்று கிளம்பிய வீர கோஷத்தின் ஸ்வரம் வர வரக் குறைந்து வந்தது. ஒவ்வொரு தொண்டராகக் கீழே விழுந்து வந்தார்கள். சிலருக்கு உணர்வு தப்பிவிட்டது.

     தொண்டர்களைச் சாதாரணப் போலீஸார் ஒரு புறம் கவனித்துக் கொண்டிருக்கையில், மலபார் ஸ்பெஷல் போலீஸ் வீரர்கள், சுற்றுமுற்றும் கூடியிருந்த ஜனங்களை ஸ்பெஷலாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். பயங்கரமான ஊளைச் சத்தம் போட்டு அவர்கள் பாய்ந்துவந்து ஜனங்களைக் குண்டாந்தடியினால் விசாரிக்கத் தொடங்கவே, ஜனங்கள் நாலாபுறமும் ஓடினார்கள். அப்படி ஓடினவர்களைத் தொடர்ந்து ஜவான்கள் துரத்தினார்கள். துரத்தப்பட்டவர்களில் சிலர் கடைகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் நுழைந்தார்கள். போலீஸார் அவர்களுக்குப் பின்னால் புகுந்து தாக்கினார்கள்.

     தெருவிலே போனவர்கள், வந்தவர்கள் வண்டிக்காரர்கள், வீட்டுக்காரர்கள், கடைக்காரர்கள், கடைக்கு வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள், பார்க்காமல் ஓடியவர்கள் ஆகிய சகலரும் பட்சபாதமின்றி அன்றையத் தினம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் மகத்துவத்தை மண்டையிலும் முதுகிலும் தோள்பட்டைகளிலும் முழங்கால் சில்லுகளிலும் அனுபவித்தார்கள்.

     கடைத்தெருவில் சில கடைகளுக்குள் போலீஸார் புகுந்த செய்தியைக் கேட்டதும், எல்லாக் கடைகளும் மளமளவென்று சாத்தப்பட்டன.

     இதற்குள் செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. மலபார் போலீஸார் வீதியில் யாரைக் கண்டாலும் அடிக்கிறார்களென்றும், அடிக்கப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர் இறந்து போனார் என்றும் வதந்தி பரவியது. இதனால் நகரம் முழுவதும் கதிகலங்கிப் போய்விட்டது.

     சற்று நேரத்திற்கெல்லாம் நகரின் வீதிகளில் போலீஸார், 'மார்ச்' செய்துகொண்டு போனதனால் ஜனங்களின் பீதி அதிகமாயிற்று. யாரும் வெளியில் தலைகாட்டத் துணியவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய வீடுகளுக்குள் கதவைச் சாத்தித் தாளிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

     கொஞ்ச நேரத்துக்குப் பிறகு முனிசிபல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால், அவையும் பயத்தால் மங்கலாகப் பிரகாசித்தது போலவே தோன்றின.



மகுடபதி:  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17
18  19  20  21  22  23  24  25  26  27


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kalki/mis/magudapathy1a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs