http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




இரண்டாம் அத்தியாயம் - பெண்குரல்

     திறந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபன், கிழவனுக்குத் தெரியாமல் மறைந்து கொள்ளும் நோக்கத்துடன், சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த வீட்டு நடையில் ஒரு பக்கத்தில் மரப்பலகையினாலான குறுகிய மச்சுப் படி காணப்பட்டது. மச்சுப் படியின் ஓரத்தில், கரியடைந்த அரிக்கன் விளக்கு மிக மங்கலான ஒளியைத் தந்து கொண்டிருந்தது. மச்சுப்படிக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியுமோ என்று பார்ப்பதற்காக வாலிபன் அங்கே போவதற்குள், கிழவன் உள்ளே நுழைந்து விட்டான்.

     "யாரடா அவன்?" என்று கிழவன் கேட்ட குரலில், வியப்பும், திகைப்பும், கோபமும் கலந்திருந்தன.

     ஆனால், அந்தக் குரலைக் கேட்ட வாலிபன், பளிச்சென்று திரும்பிப் பார்த்தபோது, அவனுடைய முகத்தில் வியப்புடன் மகிழ்ச்சியும் காணப்பட்டது.

     "பாட்டா!" என்று சொல்லி, அவன் கிழவனை ஏறிட்டுப் பார்த்தபடி நின்றான்.

     "யார்? மகுடபதியா?" என்று கிழவன் கெட்டான். அவனுடைய குரலில் இப்போது கோபத்துக்குப் பதிலாகக் கனிவு தோன்றியது.

     "ஆமாம், பாட்டா!"

     "இதென்ன அதிசயம், தம்பி! நீ எப்போது இங்கே வந்தே? எப்படி வந்தே? வாசற்கதவு பூட்டியிருக்கிறதே!"

     "நீ பூட்டைத் திறந்துவிட்டு, தடியை எடுக்கக் குனிந்தாயல்லவா, பாட்டா? அப்போது நுழைந்தேன். ஆனால் நுழையும்போது நீதான் என்று தெரியாது. உன்னிடம் அகப்பட்டுக் கொள்ளாமலிருக்க, இந்த மச்சுப்படிக்குப் பின்னால் ஒளியப் பார்த்தேன். என்ன வேடிக்கை, பார்!" என்று கூறி மகுடபதி சிரிக்க முயன்றான்.

     ஆனால், அச்சமயம் கிழவன் முகத்தில் காணப்பட்ட தயக்கத்தையும் பயத்தையும் பார்த்தபோது, சிரிப்பு வாய்க்குள்ளே அடங்கிவிட்டது.

     "நீ விளையாடுகிறாயோ, என்னமோ தெரியவில்லை தம்பி! ஆனால் அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. ஒரு வினாடி கூட இருக்கக் கூடாது. உடனே போய்விடு..." என்று கிழவன் பரபரப்புடன் சொன்னான்.

     மகுடபதி, அப்போது பாதி விளையாட்டுக் குரலில், "அதெல்லாம் முடியாது, பெரியண்ணக் கவுண்டரே! நான் இந்த வீட்டை விட்டு இன்று ராத்திரி கிளம்ப முடியாது. அப்படி என்னத்திற்காக என்னைக் கண்டு பயப்படுகிறாய்? இந்த வீட்டில் நீ களவாட, கிளவாட வரவில்லையே? உன் கையில் இருப்பது தடிதானே? கன்னக் கோல் இல்லையே?..." என்று சொல்லி வந்தவன் சட்டென்று பேசுவதை நிறுத்தி, வாசல் பக்கம் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான்.

     வீதியில் காலடிச் சத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மனிதர்கள் பேசுகிற குரலும் கேட்டது.

     பெரியண்ணன் ஏதோ கேட்க வாயெடுத்தபோது, மகுடபதி தன் வாயின் மேல் விரலை வைத்துப் பேசாமலிருக்கும்படி சமிக்ஞை செய்தான். ஏற்கனவே மங்கலாக எரிந்த அரிக்கன் லாந்தரின் திரியை இன்னும் கொஞ்சம் சின்னதாகப் பண்ணி, அதை மச்சுப் படிக்குப் பின்னால் வைத்தான். வீட்டை நெருங்கிய காலடிச் சத்தமும், பேச்சுக் குரலும் வீதியோடு சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்தன.

     மகுடபதி, பெரியண்ணன் கையைப் பிடித்து ஜன்னலண்டை அழைத்துக் கொண்டு போய், வெளியே சுட்டிக் காட்டினான். தூரத்தில் இரண்டு தடியர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

     "நீ கதவைத் தாழ்ப்பாளிட்டது நல்லதாய்ப் போயிற்று" என்றான் மகுடபதி, மெல்லிய குரலில்.

     "என்ன தம்பி, சமாசாரம்? யார் அவர்கள்? எதற்காக நீ அவர்களைக் கண்டு பயப்படுகிறாய்?" என்று பெரியண்ணனும் மெதுவான குரலில் கேட்டான்.

     "பாட்டா! அவர்கள் இருவரும் என்னை இன்றைக்குக் கொன்று போட்டு விடுவதென்று வந்திருக்கிறார்கள். இன்று ராத்திரி என்னை வெளியே அனுப்பினாயானால் அப்புறம் என்னை உயிரோடு பார்க்க மாட்டாய். மறு உலகத்தில் தான் பார்ப்பாய்" என்று மகுடபதி சொன்னபோது, கிழவன் முகத்தில் கோபம் கொதித்தது.



மகுடபதி:  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17
18  19  20  21  22  23  24  25  26  27


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kalki/mis/magudapathy2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs