http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




இருபத்தேழாம் அத்தியாயம் - ஓடைக்கரை

     சிங்கமேட்டு ஓடைக்கரை இந்த வரலாற்றில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிக்கிறது. அந்த அழகான இடத்துக்கு இன்னொரு தடவை போகாமல் கதையை முடிப்பதற்கு மனம் வரவில்லை.

     மாலை நாலு மணி இருக்கும். ஓடை ஜலம் நிர்மலமாயிருந்தது. ஆங்காங்கே கரையோரத்தில் உட்கார்ந்திருந்த வெண் கொக்குகள் நீரில் பிரதிபலித்தன. ஓடைக் கரையில் இருபுறமும் வளர்ந்திருந்த கல்யாண முருங்கை மரங்களில் இளந்தளிர்களும் சிவப்புப் பூக்களும் குலுங்கிக் கொண்டிருந்தன. மந்தமாகத் தவழ்ந்து வந்த குளிர்ந்த காற்றில் அவை இலேசாக ஆடின. மரக் கிளைகளில் உட்கார்ந்திருந்த குருவிகள், ஒன்றின் மூக்கை ஒன்று கொத்திக் கலகலவென்று சப்தித்தும், அவ்வப்போது ஜிவ்வென்று பறந்து போய்த் திரும்பி வந்து உட்கார்ந்தும் விளையாடிக் கொண்டிருந்தன.

     குருவிகள் குரலுடன் போட்டியிடுவது போல் கலகலவென்று பெண்கள் சிரிக்கும் ஒலி கேட்டது. பங்களாவின் பக்கமிருந்து இரண்டு இளம் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். கைகோத்துக் கொண்டு நடந்த அவர்களுடைய முகத்தில் குதூகலம் தாண்டவமாடியது. அவர்கள் வேறு யாருமில்லை, செந்திருவும் பங்கஜமுந்தான்.

     பங்கஜத்தின் குரல்தான் ஓங்கியிருந்தது. "எந்த மரமடி அது? அதோ தெரிகிறதே, அதுவா? நீ எப்படிப் படுத்துக் கொண்டிருந்தாய்? கண்ணை எவ்விதம் மூடிக் கொண்டிருந்தாய்? அவன் என்ன செய்தான்? - என்றெல்லாம் நடந்தது போலவே காட்டவேண்டும். நீ என்ன பேசினாய்? அவன் என்ன பதில் சொன்னான் என்பதையெல்லாம் ஒரு வார்த்தை விடாமல் சொல்ல வேண்டும்" என்று பங்கஜம் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தாள்.

     செந்திரு சிரித்துக் கொண்டே ஓடி, ஒரு மரத்தடிக்கு வந்ததும், "இந்த மரந்தானடி" என்றாள்.

     "சரி; நான் தான் அந்தக் காந்திக் குல்லாக்காரன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்தாய்? அந்த மாதிரியே செய்து காட்டு!" என்றாள் பங்கஜம்.

     செந்திரு தரையில் படுத்துக் கொண்டு கண்ணையும் மூடிக் கொண்டாள்.

     அப்போது பங்கஜம், நாடகமேடைக் கதாநாயகனுடைய தோரணையில் செந்திருவின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து, "என் கண்ணே! கண்மணியே! தாமரை இதழையும், கருவண்டையும், மீனையும், வேலையும் ஒத்த உன் அழகான கண்களைத் திறந்து என்னைப் பாராயோ?" என்று சொல்லிக் கொண்டு சட்டென்று குனிந்து செந்திருவின் கன்னத்தில் முத்தமிட்டாள். குபீரென்று சிரித்துக் கொண்டு செந்திரு எழுந்து உட்கார்ந்தாள்.

     பங்கஜம் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அடியே! நிஜமாகச் சொல்! இப்படித்தானே அவன் உண்மையில் செய்தான்? நீ என்னிடம் சொன்னதெல்லாம் பொய் தானே?" என்றாள்.

     பதினாறு, பதினேழு வயதுப் பெண்கள் இரண்டு பேர் சேர்ந்தால் அவர்களுடைய பேச்சு, கொஞ்சம் அசட்டுப் பிசட்டு என்றும், தத்துப் பித்து என்றும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? எனவே, இவர்களும் அம்மாதிரி பேசுவதற்குப் பதினைந்து நிமிஷம் கொடுத்து விடுவோம். ஓடைக்கரையை ஒரு சுற்றுச் சுற்றுவிட்டு வருவோம்.

     பதினைந்து நிமிஷம் கழித்து நாம் திரும்பி வந்து பார்க்கும் போது காட்சி ஒருவாறு மாறியிருப்பதைக் காண்கிறோம். அதே இரண்டு பெண்கள் அதே மரத்தடியில்தான் இருக்கிறார்கள். ஆனால் இருவர் முகத்திலும் குதூகலத்துக்குப் பதிலாகச் சோகக் குறி காணப்படுகிறது.

     செந்திருவின் கண்களில் ஜலம் ததும்பிக் கொண்டிருக்கிறது. "மறுபடியும் இந்த ஓடைக் கரையில் இவ்வளவு சந்தோஷமாக ஒருநாள் உட்கார்ந்திருப்போம் என்று நான் சொப்பனத்திலும் எண்ணவில்லை, பங்கஜம்!" என்றாள் செந்திரு.

     "போனதைப் பற்றி இனிமேல் என்ன? கடவுள் அருளால் எல்லாந்தான் சந்தோஷமாக முடிந்து விட்டதே!" என்றால் பங்கஜம்.



மகுடபதி:  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17
18  19  20  21  22  23  24  25  26  27


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kalki/mis/magudapathy27.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs