http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




ஆரணிய காண்டம்

11. அயோமுகிப் படலம்

நெடு வரைச் சாரலில் இராம இலக்குவர் தங்கியிருத்தல்

அந்தி வந்து அணுகும்வேலை, அவ் வழி, அவரும் நீங்கி,
சிந்துரச் செந் தீக் காட்டு ஓர் மை வரைச் சேக்கை கொண்டார்;
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்ததென்ன
வெந் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே. 1


துயர மிகுதியால் தூக்கமின்றி இருத்தல்

தேன் உக அருவி சிந்தி, தெருமரல் உறுவ போல,
கானமும் மலையும், எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்,
மானமும் சினமும் தாதை மரணமும், மைந்தர் சிந்தை
ஞானமும் துயரும் தம்முள் மலைந்தென, நலிந்த அன்றே. 2

மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும்
பொய் உறு பிறவிபோல, போக்க அரும் பொங்கு கங்குல்,
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர, உயிர்ப்பு நீள,
கையறவு உறுகின்றாரால்; காணல் ஆம் கரையிற்று, அன்றே. 3

யாம் அது தெரிதல் தேற்றாம்; இன் நகைச் சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ? முகமதி காண்கிலாதோ?
தே மரு தெரியல் வீரன் கண் எனத் தெரிந்த செய்ய
தாமரை, கங்குற் போதும், குவிந்திலாத் தன்மை என்னோ? 4

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து,
எண்ணியது அறிதல் தேற்றாம்; இமைத்தில, இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும், வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே. 5

'வண்டு உளர் கோதைச் சீதை வாள் முகம் பொலிய வானில்
கண்டனென்' என்று, வீரற்கு, ஆண்டு ஒரு காதல் காட்ட,
தண் தமிழ்த் தென்றல் என்னும் கோள் அராத் தவழும் சாரல்,
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே. 6

களியுடை அனங்கக் கள்வன் கரந்து உறை கங்குற்காலம்
வெளிபடுத்து, உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம்-
நளி இருள் பிழம்பு என்று, ஈண்டு, நஞ்சொடு கலந்த நாகத்
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என-சுட்டது அன்றே. 7

இடம்படு மானத் துன்பம், இருள்தர, எண்ணின் தீர்ந்தான்
விடம் பரந்தனையது ஆய வெண் நிலா வெதுப்ப, வீரன்,
படம் பரந்தனைய அல்குல், பால் பரந்தனைய இன் சொல்,
தடம் பெருங் கண்ணினாள்தன் தனிமையை நினையலுற்றான். 8

சீதையை நினைத்து இராமன் வருந்துதல்

மடித்த வாயன்; வயங்கும் உயிர்ப்பினன்,
துடித்து வீங்கி, ஒடுங்குறு தோளினன்;
பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால் கரி
ஒடித்த கொம்பு அனையாள்திறத்து உன்னுவான்: 9

'"வாங்கு வில்லன் வரும், வரும்" என்று, இரு
பாங்கும், நீள் நெறி பார்த்தனளோ?' எனும்-
வீங்கும் வேலை விரி திரை ஆம் என,
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான். 10

'தன் நினைந்திலள் என்பது சாலுமோ-
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான்,
"நில் நில்" என்று, நெருங்கியபோது அவள்
என் நினைந்தனளோ?' என எண்ணுமால். 11

'நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயில் மதி என மட்குவாள்,
"வெஞ் சினம் செய் அரக்கர் தம் வெம்மையை
அஞ்சினான்கொல்?" என்று ஐயுறுமால்' என்பான். 12

பூண்ட மானமும், போக்க அருங் காதலும்,
தூண்ட நின்று, இடை தோமுறும் ஆர் உயிர்,
மீண்டு மீண்டு வெதுப்ப, வெதும்பினான்,
'வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்?' என்பான். 13

வில்லை நோக்கி நகும்; மிக வீங்கு தோட்-
கல்லை நோக்கி நகும்; கடைக்கால் வரும்
சொல்லை நோக்கித் துணுக்கெனும்-தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான். 14




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/aaraniya/ayomugippadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs