ஆரண்ய காண்டம் 12. கவந்தன் படலம் இராம இலக்குவர் கவந்தன் வனத்தைக் காணுதல் ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி, அடவி புடைபடுத்த வையம் திரிந்தார்; கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான்; எய்யும் சிலைக் கை இருவரும் சென்று, இருந்தே நீட்டி எவ் உயிரும் கையின் வளைந்து வயிற்று அடங்கும் கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார். 1 எறுப்பு இனம், கடையுற, யானையே முதல் உறுப்புடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன; வெறிப்புறு நோக்கின, வெருவுகின்றன; பறிப்பு அரு வலையிடைப் பட்ட பான்மைய; 2 மரபுளி நிறுத்திலன், புரக்கும் மாண்பிலன்; உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன; வெருவுவ, சிந்துவ, குவிவ, விம்மலோடு இரிவன, மயங்குவ, இயல்பு நோக்கினார். 3 மால் வரை உருண்டன வருவ; மா மரம் கால் பறிந்திடுவன; கான யாறுகள் மேல் உள திசையொடு வெளிகள் ஆவன; சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன; 4 கவந்தன் கைப்பட்ட இருவரும் பலவாறு எண்ணுதல் நால் திசைப் பரவையும் இறுதி நாள் உற, காற்று இசைத்து எழ எழுந்து, உலகைக் கால் பரந்து ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன போல், திசை சுற்றிய கரத்துப் புக்குளார். 5 தேமொழி திறத்தினால், அரக்கர் சேனை வந்து ஏமுற வளைந்தது என்று, உவகை எய்தினார்; நேமி மால் வரை வர நெருக்குகின்றதே ஆம் எனல் ஆய, கைம் மதிட்குள் ஆயினார். 6 இளவலை நோக்கினன் இராமன், 'ஏழையை உளைவு செய் இராவணன் உறையும் ஊரும், இவ் அளவையது ஆகுதல் அறிதி; ஐய! நம் கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்' என, 7 'முற்றிய அரக்கர் தம் முழங்கு தானையேல், எற்றிய முரசு ஒலி, ஏங்கும் சங்கு இசை, பெற்றிலது; ஆதலின், பிறிது ஒன்று ஆம்' எனச் சொற்றனன் இளையவன், தொழுது முன் நின்றான். 8 'தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய வெள் எயிற்று அரவம்தான்? வேறு ஓர் நாகம்தான்? தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து, உள் உறக் கவர்வதே ஒக்கும்; ஊழியாய்!' 9 கவந்தனின் தோற்றம் என்று இவை விளம்பிய இளவல் வாசகம் நன்று என நினைந்தனன், நடந்த நாயகன்; ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு, ஓங்கல்தான் நின்றென இருந்த அக் கவந்தன் நேர் சென்றார். 10 வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை குயிற்றியதாம் எனக் கொதிக்கும் கண்ணினன்; எயிற்று இடைக்குஇடை இரு காதம்; ஈண்டிய வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான். 11 ஈண்டிய புலவரொடு அவுணர், இந்துவைத் தீண்டிய நெடு வரைத் தெய்வ மத்தினைப் பூண்டு உயர் வடம், இரு புடையும் வாங்கலின், நீண்டன கிடந்தென நிமிர்ந்த கையினான். 12 தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு என, புகைக் கொடி, கனலொடும் பொடிக்கும் மூக்கினான்; பகைத் தகை நெடுங் கடல் பருகும் பாவகன் சிகைக் கொழுந்து இது எனத் திருகு நாவினான். 13 புரண்டு பாம்பு இடை வர வெருவி, புக்கு உறை அரண்தனை நாடி, ஓர் அருவி மால் வரை முரண் தொகு முழை நுழை, முழு வெண் திங்களை இரண்டு கூறிட்டென, இலங்கு எயிற்றினான். 14 ஓத நீர், மண் இவை முதல ஓதிய பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே, வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் பாதகம் திரண்டு, உயிர் படைத்த பண்பினான். 15 வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அரா, செய் தொழில் இல, துயில் செவியின் தொள்ளையான்; பொய் கிளர் வன்மையில் புரியும் புன்மையோர் வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான். 16 முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி, தான் பற்றிய கரத்தினன், பணைத்த பண்ணையில் துற்றிய புகுதரும் தோற்றத்தால், நமன் கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான். 17 ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான்; ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்; நீல மால்; நேமியின் தலையை நீக்கிய காலநேமியைப் பொரும் கவந்தக் காட்சியான். 18 தாக்கிய தணப்பு இல் கால் எறிய, தன்னுடை மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர் ஆக்கையின் இருந்தவன் தன்னை, அவ் வழி, நோக்கினர் இருவரும், நுணங்கு கேள்வியார். 19
கவந்தனின் வாயைப் பார்த்து இராம இலக்குவர் ஐயுறுதல் நீர் புகும் நெடுங் கடல் அடங்கும், நேமி சூழ் பார் புகும், நெடும் பகு வாயைப் பார்த்தனர்; 'சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில் ஊர் புகு வாயிலோ இது?' என்று, உன்னினார். 20 அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே, 'வெவ்வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய், வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்; செய்வது என் இவண்?' என, செம்மல் சொல்லுவான்: 21 'பழி சுமந்து வாழ்கிலேன்' எனல் தோகையும் பிரிந்தனள்; எந்தை துஞ்சினன்; வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்; ஆகலின், யான், இனி, இதனுக்கு ஆமிடம்; ஏகுதி ஈண்டுநின்று, இளவலே!' என்றான். 22 'ஈன்றவர் இடர்ப்பட, எம்பி துன்புற, சான்றவர் துயருற, பழிக்குச் சார்வுமாய்த் தோன்றலின், என் உயிர் துறந்தபோது அலால், ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ? 23 '"இல் இயல்புடைய, நீர் அளித்த, இன் சொலாம் வல்லி, அவ் அரக்கர்தம் மனை உளாள்" எனச் சொல்லினென், மலை எனச் சுமந்த தூணியென், வில்லினென், செல்வேனோ, மிதிலை வேந்தன்பால்? 24 '"தளை அவிழ் கோதையைத் தாங்கல் ஆற்றலன், இளை புரந்து அளித்தல்மேல் இவர்ந்த காதலன், உளன்" என, உரைத்தலின், "உம்பரான்" என விளைதல் நன்று; ஆதலின், விளிதல் நன்று' என்றான். 25 'முன்னம் முடிவன்' என இலக்குவன் மொழிதல் ஆண்டான் இன்ன பன்னிட, ஐயற்கு இள வீரன், 'ஈண்டு, யான் உன்பின் ஏகியபின், இவ் இடர் வந்து மூண்டால், முன்னே ஆர் உயிரொடும் முடியாதே, மீண்டே போதற்கு ஆம் எனின், நன்று என் வினை!' என்றான். 26 என்றான் என்னாப் பின்னும் இசைப்பான், 'இடர்தன்னை வென்றார் அன்றே வீரர்கள் ஆவார்? விரவாரின் தன் தாய், தந்தை, தம்முன், எனும் தன்மையர் முன்னே பொன்றான் என்றால், நீங்குவது அன்றோ புகழ் அம்மா? 27 '"மானே அன்னாள்தன்னொடு தம்முள் வரை ஆரும் கானே வைக, கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு ஆனாள்; என்னே!" என்றவர் முன்னே, "அவர் இன்றித் தானே வந்தான்" என்றலின், வேறு ஓர் தவறு உண்டோ ? 28 'என் தாய், ''உன்முன் ஏவிய யாவும் இசை; இன்னல் பின்றாது எய்தி, பேர் இசையாளற்கு அழிவு உண்டேல், பொன்றாமுன்னம் பொன்றுதி" என்றாள்; உரை பொய்யா நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா? 29 'என்-பெற்றாளும், யானும், எனைத்து ஓர் வகையாலும், நின்-பெற்றாட்கும், நிற்கும், நினைப்புப் பிழையாமல், நல் பொன் தோளாய்! நல்லவர் பேண நனி நிற்கும் சொல் பெற்றால், மற்று ஆர் உயிர் பேணி, துறவேமால். 30 'ஓதுங்கால், அப் பல் பொருள் முற்றுற்று, ஒருவாத வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய்; மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின்தலை வாழும் பூதம் கொல்லப் பொன்றுதிஎன்னின், பொருள் உண்டோ ? 31 கேட்டார் கொள்ளார்; கண்டவர் பேணார்; 'கிளர் போரில் தோட்டார் கோதைச் சோர் குழல்தன்னைத் துவளாமல் மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான், செரு வெல்ல மாட்டான், மாண்டான்" என்றலின்மேலும் வசை உண்டோ ? 32 'பூதத்தின் கையொடு வாயைத் துணிப்பதே கருமம்' எனல் 'தணிக்கும் தன்மைத்து அன்று எனின், இன்று இத் தகை வாளால்,- கணிக்கும் தன்மைத்து அன்று, விடத்தின் கனல் பூதம்- பிணிக்கும் கையும், பெய் பில வாயும் பிழையாமல் துணிக்கும் வண்ணம் காணுதி; துன்பம் துற' என்றான். 33 என்னா முன்னே, செல்லும் இளங்கோ, இறையோற்கு முன்னே செல்லும்; முன்னவன், அன்னானினும் முந்த, தன் நேர் இலாத தம்பி தடுப்பான்; பிறர் இல்லை அன்னோ! கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால். 34 கவந்தனை எதிர்த்து இராம இலக்குவர் போர் புரிதல் இனையர் ஆகிய இருவரும், முகத்து இரு கண்போல், கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும், கவந்தன், 'வினையின் எய்திய வீரர் நீர் யாவர்கொல்?' என்ன, நினையும் நெஞ்சினர், இமைத்திலர்; உருத்தனர், நின்றார். 35 'அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை' என்று அழன்றான்; பொழிந்த கோபத்தன்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப, 'விழுங்குவேன்' என வீங்கலும், விண் உற, வீரர், எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார். 36 கைகள் அற்று வெங் குருதி ஆறு ஒழுகிய கவந்தன் மெய்யின், மேற்கோடு கிழக்கு உறுப் பெரு நதி விரவும், சைய மா நெடுந் தாழ் வரைத் தனி வரைதன்னோடு ஐயம் நீங்கிய, பேர் எழில் உவமையன் ஆனான். 37 கவந்தன் முன்னை உருப் பெற்று, விண் உற நிமிர்தல் ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால், மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான்; தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா, நீளம் நீங்கிய பறவையின், விண் உற நிமிர்ந்தான். 38 விண்ணில் நின்றவன், 'விரிஞ்சனே முதலினர் யார்க்கும் கண்ணில் நின்றவன் இவன்' எனக் கருத்துற உணர்ந்தான்; எண் இல் அன்னவன் குணங்களை, வாய் திறந்து, இசைத்தான்; புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப் பொருளே? 39 இராமனைத் துதித்தல் ஈன்றவனோ எப் பொருளும்? எல்லை தீர் நல் அறத்தின் சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப் பயனோ? மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ? தோன்றி, அரு வினையேன் சாபத் துயர் துடைத்தாய்! 40 மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும் கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்; ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! 41 'காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி, பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய், மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்; ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? 42 'ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ! ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ! "சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!" என்று சொல்லுகின்ற வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? 43 அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை; அம்மா! 44 'மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! 45 'நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள் ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! 46 'நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்? உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ? என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்- பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! 47 'மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக் காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி, பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்! நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?' என்றான். 48 எதிரில் நின்றவனை இலக்குவன் 'நீ யார்' என வினவல் என்று, ஆங்கு, இனிது இயம்பி, 'இன்று அறியக் கூறுவெனேல், ஒன்றாது, தேவர் உறுதிக்கு' என உன்னா, தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய், நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான். 49 'பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர் பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய், நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை ஆராய்!' என, அவனும், 'ஆர்கொலோ நீ?' என்றான். 50 தனுவின் வரலாறு 'சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர் கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்; வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன், எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின்' என்றான். 51 தனு சவரியை அடைந்து சுக்கிரீவன் நட்பைப் பெறுமாறு கூறல் 'கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும் இணை இலாள்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்; புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல், துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல். 52 'பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து உழிப் பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே, ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? 53 'ஆயது செய்கை என்பது, அறத் துறை நெறியின் எண்ணி, தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்ந்து, செய்தல்; தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள் ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி. 54 'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட, வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது' என்றான், அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். 55 மதங்கன் இருக்கை சேர்தல் ஆனபின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து அவனும் போனான்; மானவக் குமரர் தாமும் அத் திசை வழிக் கொண்டு ஏகி, கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து இறுக்கும் காலை, யானையின் இருக்கை அன்ன, மதங்கனது இருக்கை சேர்ந்தார். 56 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |