http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




ஆரணிய காண்டம்

8. மாரீசன் வதைப் படலம்

மாரீசன் இராவணன் வந்த காரணத்தை வினவுதல்

இருந்த மாரீசன், அந்த இராவணன் எய்தலோடும்,
பொருந்திய பயத்தன், சிந்தை பொருமுற்று வெருவுகின்றான்,
கருந் தட மலை அன்னானை எதிர்கொண்டு, கடன்கள் யாவும்
திருந்திய செய்து, செவ்வித் திருமுகம் நோக்கிச் செப்பும். 1

'சந்த மலர்த் தண் கற்பக நீழல் தலைவற்கும்,
அந்தகனுக்கும், அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்!
இந்த வனத்து, என் இன்னல் இருக்கைக்கு, எளியோரின்
வந்த கருத்து என்? சொல்லுதி' என்றான் - மருள்கின்றான். 2


சீதையைக் கவர இராவணன் மாரீசனின் துணை வேண்டுதல்

'ஆனது அனைத்தும்; ஆவி தரித்தேன், அயர்கின்றேன்;
போனது, பொற்பும்; மேன்மையும் அற்றேன், புகழோடும்,
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி?' என்னா
'வானவருக்கும் நாண அடுக்கும் வசை மன்னோ?' 3

'வன்மை தரித்தோர் மானிடர்; மற்று அங்கு, அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்;
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர்
புன்மை, தெரிப்பின், வேறு இனி எற்றே? புகல்-வேலோய்! 4

'திருகு சினத்தார் முதிர மலைந்தார்; சிறியோர், நாள்
பருகினர் என்றால், வென்றி நலத்தின் பழி அன்றோ?
இரு கை சுமந்தாய்! இனிதின் இருந்தாய்! இகல் வேல் உன்
மருகர் உலந்தார்; ஒருவன் மலைந்தான், வரி வில்லால். 5

'வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன், விளிகின்றேன்;
ஒப்பு இலர் என்றே, போர் செயல் ஒல்லேன்; உடன் வாழும்
துப்பு அழி செவ் வாய் வஞ்சியை வௌவ, துணை கொண்டிட்டு,
இப் பழி நின்னால் தீரிய வந்தேன், இவண்' என்றான். 6

மாரீசன் இராவணனுக்கு அறிவுரை பகர்தல்

இச் சொல் அனைத்தும் சொல்லி, அரக்கன், எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்னக் கிளராமுன்,
'சிச்சி' என, தன் மெய்ச் செவி பொத்தி, தெருமந்தான்;
அச்சம் அகற்றி, செற்ற மனத்தோடு அறைகின்றான்; 7

'மன்னா! நீ உன் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய்
உன்னால் அன்று ஈது; ஊழ்வினை என்றே உணர்கின்றேன்;
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம்' என்னா,
சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம். 8

'அற்ற கரத்தொடு, உன் தலை நீயே அனல் முன்னில்
பற்றினை உய்த்தாய்; பற்பல காலம் பசி கூர
உற்று, உயிர் உள்ளே தேய, உலந்தாய்; பினை அன்றோ
பெற்றனை செல்வம்? பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ? 9

'திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய்,
மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்!-
அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும்
புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ? 10

'நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார், என்ற இவர் தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! 11

'அந்தரம் உற்றான், அகலிகை பொற்பால் அழிவுற்றான்;
இந்திரன் ஒப்பார், எத்தனையோர் தாம் இழிவுற்றார்?
செந் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்;
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய், மதி அற்றாய். 12

'செய்தாயேனும், தீவினையோடும் பழி அல்லால்
எய்தாது, எய்தாது, எய்தின், இராமன், உலகு ஈன்றான்,
வைதால் அன்ன வாளிகள் கொண்டு, உன் வழியோடும்
கொய்தான் அன்றே, கொற்றம் முடித்து, உன் குழு எல்லாம்? 13




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/aaraniya/maareesanvathaippadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs