ஆரண்ய காண்டம் 4. சடாயு காண் படலம் கழுகின் வேந்தன் சடாயுவை காணல் நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி கிடந்தன, நின்றன; கிரிகள் கேண்மையின் தொடர்ந்தன, துவன்றின; சூழல் யாவையும் கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே. 1 உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து உச்சி சேர் அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் சிறை விரித்து இருந்தனன் என, விளங்குவான் தனை, 2 முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின் சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய, அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய, மந்தரகிரி என வயங்குவான் தனை. 3 மால் நிற விசும்பு எழில் மறைய, தன் மணிக் கால் நிறச் சேயொளி கதுவ, கண் அகல் நீல் நிற வரையினில் பவள நீள் கொடி போல் நிறம் பொலிந்தென, பொலிகின்றான் தனை, 4 தூய்மையன், இருங் கலை துணிந்த கேள்வியன், வாய்மையன், மறு இலன், மதியின் கூர்மையன், ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச் சேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை, 5 வீட்டி வாள் அவுணரை, விருந்து கூற்றினை ஊட்டி, வீழ் மிச்சில் தான் உண்டு, நாள்தொறும் தீட்டி, மேல் இந்திரன் சிறு கண் யானையின் தோட்டிபோல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான் தனை, 6 கோள் இரு-நாலினோடு ஒன்று கூடின ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை, நீளுறு மேருவின் நெற்றி முற்றிய வாள் இரவியின் பொலி மௌலியான் தனை, 7 சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை, அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை, சிற்பம் கொள் பகல் எனக் கடிது சென்று தீர் கற்பங்கள் எனைப் பல கண்டுளான் தனை, 8 ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று, அது தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற வீங்கிய வலியினில் இருந்த வீரனை- ஆங்கு அவர் அணுகினர், அயிர்க்கும் சிந்தையார். 9 ஒருவரை ஒருவர் ஐயுறல் 'இறுதியைத் தன் வயின் இயற்ற எய்தினான் அறிவு இலி அரக்கன் ஆம்; அல்லனாம் எனின், எறுழ் வலிக் கலுழனே?' என்ன உன்னி, அச் செறி கழல் வீரரும், செயிர்த்து நோக்கினார். 10 வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை, அனையவன் தானும் கண்டு, அயிர்த்து நோக்கினான் - 'வினை அறு நோன்பினர் அல்லர்; வில்லினர்; புனை சடை முடியினர்; புலவரோ?' எனா. 11 'புரந்தரன் முதலிய புலவர் யாரையும் நிரந்தரம் நோக்குவென்; நேமியானும், அவ் வரம் தரும் இறைவனும், மழுவலாளனும், கரந்திலர் என்னை; யான் என்றும் காண்பெனால். 12 'காமன் என்பவனையும், கண்ணின் நோக்கினேன்; தாமரைச் செங் கண் இத் தடங் கை வீரர்கள் பூ மரு பொலங் கழற் பொடியினோடும், ஒப்பு ஆம் என அறிகிலென்; ஆர்கொலாம் இவர்? 13 'உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்; மலர்மகட்கு உவமையாளோடும் வந்த இச் சிலை வலி வீரரைத் தெரிகிலேன்' எனா, 14 'கரு மலை செம் மலை அனைய காட்சியர்; திரு மகிழ் மார்பினர்; செங் கண் வீரர்தாம், அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான் ஒருவனை, இருவரும் ஒத்துளார் அரோ.' 15 'யார்?' எனச் சடாயு வினவல் எனப் பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான், சினப் படை வீரர்மேல் செல்லும் அன்பினான், 'கனப் படை வரி சிலைக் காளை நீவிர் யார்? மனப்பட, எனக்கு உரைவழங்குவீர்' என்றான். 16 தயரதன் மைந்தர் என அறிந்த சடாயு மகிழ்தல் வினவிய காலையில், மெய்ம்மை அல்லது புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால், 'கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான், வனை கழல் தயரதன், மைந்தர் யாம்' என்றார். 17 உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன், தரைத்தலை இழிந்து, அவர்த் தழுவு காதலன், 'விரைத் தடந் தாரினான், வேந்தர் வேந்தன் தன், வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான். 18
தயரதன் மறைவு அறிந்த சடாயுவின் துயரம் 'மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் துறக்கம் உற்றான்' என, இராமன் சொல்லலும், இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்; உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான். 19 தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம் கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்; வழுவிய இன் உயிர் வந்த மன்னனும், அழிவுறு நெஞ்சினன், அரற்றினான் அரோ. 20 'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக் குடைக்கும் பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற கரவல் அருங் கற்பகமும், உடுபதியும், கடல் இடமும், களித்து வாழ- புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!- இரவலரும், நல் அறமும், யானும், இனி என் பட நீத்து ஏகினாயே? 21 'அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த நிலம் காவல் அது கிடக்க, நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் நலம் காண் நடந்தனையோ? நாயகனே! தீவினையேன், நண்பினின்றும், விலங்கு ஆனேன் ஆதலினால்,விலங்கினேன்;இன்னும் உயிர்விட்டிலேனால். 22 'தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனைத் தடிந்த அந் நாள், அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய, "நீ உடல்; நான் ஆவி" என்று செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய்! செப்பினாய்; திறம்பா, நின் சொல்; உயிர் கிடக்க, உடலை விசும்பு ஏற்றினார், உணர்வு இறந்த கூற்றினாரே. 23 'எழுவது ஓர் இசை பெருக, இப்பொழுதே, ஒப்பு அரிய எரியும் தீயில் விழுவதே நிற்க, மட மெல்லியலார்- தம்மைப்போல் நிலத்தின்மேல் வீழ்ந்து அழுவதே யான்?' என்னா, அறிவுற்றான் என எழுந்து, ஆங்கு அவரை நோக்கி, 'முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர்! கேண்மின்' என முறையின் சொல்வான்: 24 சடாயு இறக்கத் துணிதல் 'அருணன் தன் புதல்வன் யான்; அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன்; ஆழி இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் உயிர்த் துணைவன்; இமையோரோடும் வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;- தருணம் கொள் பேர் ஒளியீர்!-சம்பாதிபின் பிறந்த சடாயு' என்றான். 25 ஆண்டு அவன் ஈது உரைசெய்ய, அஞ்சலித்த மலர்க்கையார் அன்பினோடும் மூண்ட பெருந் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்க்கண் மொய்த்த நீரார்,- பூண்ட பெரும் புகழ் நிறுவி; தம் பொருட்டால் பொன்னுலகம் புக்க தாதை, மீண்டனன்வந்தான்அவனைக்கண்டனரே ஒத்தனர்-அவ்விலங்கல்தோளார். 26 மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உறத் தழுவி, 'மக்காள்! நீரே உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்; உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் பிரியவும், தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம்; பீழை பாராது, எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல்,இத் துயரம் மறவேன்' என்றான். 27 சடாயுவை இராம இலக்குவர் தடுத்தல் 'உய்விடத்து உதவற்கு உரியானும், தன் மெய் விடக் கருதாது, விண் ஏறினான்; இவ் இடத்தினில், எம்பெருமாஅன்! எமைக் கைவிடின், பினை யார் களைகண் உளார்? 28 '"தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர் வாயின், நீங்கி, வனம் புகுந்து, எய்திய நோயின் நீங்கினெம் நுன்னின்" என் எங்களை நீயும் நீங்குதியோ?-நெறி நீங்கலாய்!' 29 என்று சொல்ல, இருந்து அழி நெஞ்சினன், நின்ற வீரரை நோக்கி நினைந்தவன், '"அன்று அது" என்னின், அயோத்தியின், ஐயன்மீர் சென்றபின் அவற் சேர்குவென் யான்' என்றான். 30 சடாயு இராம இலக்குவர் வனம் புகுந்த காரணத்தை வினாவுதல் 'வேந்தன் விண் அடைந்தான் எனின், வீரர் நீர் ஏந்து ஞாலம் இனிது அளியாது, இவண் போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க் காந்துகின்றது, கட்டுரையீர்' என்றான். 31 'தேவர், தானவர், திண் திறல் நாகர், வேறு ஏவர் ஆக, இடர் இழைத்தார் எனின்,- பூ அராவு பொலங் கதிர் வேலினீர்!- சாவர் ஆக்கி, தருவென் அரசு' என்றான். 32 இராமன் இலக்குவனுக்கு குறிப்பால் விடையிறுத்தல் தாதை கூறலும், தம்பியை நோக்கினான் சீதை கேள்வன்; அவனும், தன் சிற்றவை- மாதரால் வந்த செய்கை, வரம்பு இலா ஓத வேலை, ஒழிவு இன்று உணர்த்தினான். 33 இராமனை சடாயு போற்றுதல் 'உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை தந்த சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி, வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே! எந்தை வல்லது யாவர் வல்லார்?' எனா, 34 அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன், 'வல்லை மைந்த!' அம் மன்னையும் என்னையும் எல்லை இல் புகழ் எய்துவித்தாய்' என்றான். 35 சடாயு சீதையைப் பற்றி வினவி அறிதல் பின்னரும், அப் பெரியவன் பெய் வளை அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்; 'மன்னர் மன்னவன் மைந்த! இவ் வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால்' என்றான். 36 அல் இறுத்தன தாடகை ஆதியா, வில் இறுத்தது இடை என, மேலைநாள் புல் இறுத்தது யாவும் புகன்று, தன் சொல் இறுத்தனன் - தோன்றல்பின் தோன்றினான். 37 பஞ்சவடியில் தங்க உள்ளதை இராமன் உரைத்தல் கேட்டு உவந்தனன், கேழ் கிளர் மௌலியான்; 'தோட்டு அலங்கலினீர்! துறந்தீர், வள நாட்டின்; நீவிரும் நல்நுதல்தானும் இக் காட்டில் வைகுதிர்; காக்குவென் யான்' என்றான். 38 'இறைவ! எண்ணி, அகத்தியன் ஈந்துளது, அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத் துறையுள் உண்டு ஒரு குழல்; அச் சூழல் புக்கு உறைதும்' என்றனன் -உள்ளத்து உறைகுவான். 39 மூவரும் பஞ்சவடி சேர்தல் 'பெரிதும் நன்று; அப் பெருந் துறை வைகி, நீர் புரிதிர் மா தவம்; போதுமின்; யான் அது தெரிவுறுத்துவென்' என்று, அவர், திண் சிறை விரியும் நீழலில் செல்ல, விண் சென்றனன். 40 ஆய சூழல் அறிய உணர்த்திய தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான் போய பின்னை, பொரு சிலை வீரரும் ஏய சோலை இனிது சென்று எய்தினார். 41 வார்ப் பொற் கொங்கை மருகியை, மக்களை, ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம் சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் -சேக்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான். 42 மிகைப் பாடல்கள் 'தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள், தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள், மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈன்றாள்; மைக்கருங்கண்திதி என்பாள் அதின் இரட்டி அசுரர்தமைவயிறு வாய்த்தாள்.24-1 தானவரே முதலோரைத் தனு பயந்தாள்; மதி என்பாள் மனிதர்தம்மோடு- ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால்; சுரபி என்பாள் தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள்; தெரிக்குங்காலை, மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள். 24-2 மழை புரை பூங் குழல் விநதை, வான், இடி, மின், அருணனுடன் வயிநதேயன், தழை புரையும் சிறைக் கூகை, பாறுமுதல் பெரும் பறவை தம்மை ஈன்றாள்; இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல், காடை, பல பிறவும் ஈன்றாள்; கழை எனும் அக்கொடி பயந்தாள், கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம். 24-3 வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்; மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்; அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்; தெருட்டிடும்மாது இளைஈந்தாள்,செலசரம் ஆகியபலவும்,தெரிக்குங்காலை.24-4 'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற மதி, இளை, கந்துருவுடனே, குரோதவசை, தாம்பிரை, ஆம் மட நலார்கள், விதி முறையே, இவை அனைத்தும் பயந்தனர்கள்; விநதை சுதன் அருணன் மென் தோள், புது மதி சேர் நுதல், அரம்பைதனைப் புணர, உதித்தனம் யாம், புவனிமீதே. 24-5 என்று உரைத்த எருவை அரசனைத் துன்று தாரவர் நோக்கித் தொழுது, கண் ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக- நின்று, மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார். 27-1 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |