அயோத்தியா காண்டம் 11. ஆறு செல் படலம் மந்திரக் கிழவோர் முதலியோர் அரசவையை அடைதல் வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து அரு மறை முனிவனும், ஆண்டையான் என, விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்; பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர். 1 மந்திரக் கிழவரும், நகர மாந்தரும், தந்திரத் தலைவரும், தரணி பாலரும், அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும், சுந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார். 2 சுமந்திரன் முனிவரைக் குறிப்பாக நோக்குதல் சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப் பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான், கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான், முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான். 3 முனிவர் சுமந்திரனின் குறிப்பை உணர்தல் நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை, வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன், 'காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்' எனக் கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்: 4 பரதனுக்கு வசிட்டன் அரசின் சிறப்பை உரைத்தல் 'வேதியர், அருந்தவர், விருத்தர், வேந்தர்கள் ஆதியர் நின்வயின் அடைந்த காரியம், நீதியும் தருமமும் நிறுவ; நீ இது, கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால். 5 'தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் அருமை என்பது பெரிது; அறிதி; ஐய! நீ இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது, தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்! 6 'வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம், நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும் தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின், உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே. 7 'தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல் மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும், ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம். 8 'முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின், மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை, நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன, இறைவரை இல்லன யாவும் காண்கிலம். 9 'பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர் ஏத்து, வான் புகழினர், இன்று காறும் கூக் காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால், நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால். 10 'உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்; வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது சிந்தனை எமக்கு' எனத் தெரிந்து கூறினான். 11 வசிட்டன் சொல் கேட்ட பரதனின் அவல நிலை 'தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்' எனச் செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும், 'நஞ்சினை நுகர்' என, நடுங்குவாரினும் அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான். 12 நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும் இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்; ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர, தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்: 13 அரசவைக்கு பரதன் தன் கருத்தை எடுத்தியம்புதல் 'மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல் தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல், சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால், ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ? 14 'அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை, நடைவரும் தன்மை நீர், "நன்று இது" என்றிரேல், இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது கடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ! 15 'வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார், மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம் காத்தவர் உளர் எனின், காட்டிக் காண்டிரால். 16
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்; அன்னவன் தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால். 17 'அன்று எனின், அவனொடும் அரிய கானிடை நின்று, இனிது இருந்தவம், நெறியின் ஆற்றுவென்; ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்' என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை. 18 பரதனை அரசவையோர் புகழ்தல் 'ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும் ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ, வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந் தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்? 19 'ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும், வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ? ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும், வாழிய நின் புகழ்!' என்று வாழ்த்தினார். 20 சத்துருக்கனனிடம் இராமனை அழைத்து வருதல் பற்றி முரசு
அறிவிக்க பரதன் கூறுதல் குரிசிலும், தம்பியைக் கூவி, 'கொண்டலின் முரசு அறைந்து, "இந் நகர் முறைமை வேந்தனைத் தருதும் ஈண்டு" என்பது சாற்றி, தானையை, "விரைவினில் எழுக!" என, விளம்புவாய்' என்றான். 21 சத்துருக்கனன் உரை கேட்ட மக்களின் மகிழ்ச்சி நல்லவன் உரைசெய, நம்பி கூறலும், அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் ஒல்லென இரைத்ததால் - உயிர் இல் யாக்கை அச் சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே. 22 அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள புவித்தலை உயிர் எலாம், 'இராமன் பொன் முடி கவிக்கும்' என்று உரைக்கவே, களித்ததால்-அது செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்? 23 படு முரசு அறைந்தனர், 'பரதன் தம்முனைக் கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும் முடுகுக' என்ற சொல் மூரி மா நகர், உடுபதி வேலையின் உதயம் போன்றதே! 24 எழுந்தது பெரும் படை - எழு வேலையின், மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ, அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க் கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே. 25 சேனையின் எழுச்சி பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும், மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள், கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே. 26 ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும் ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி; காசையின் கரியவற் காண மூண்டு எழும் ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே. 27 படியொடு திரு நகர் துறந்து, பல் மரம் செடியொடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம் கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப் பிடியொடு நடந்தன-பெருங் கை வேழமே. 28 சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக் கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்- ஏற்று இளம் பிடிக்குலம்-இகலி, இன் நடை தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே. 29 வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச் சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன; கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா மாதரின் நுடங்குவ, வரம்பு இல் கோடியே. 30 வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென, அண்ணல் வெங்கதிரவன், அளவு இல் மூர்த்தி ஆய், மண்ணிடை இழிந்து ஒரு வழிக் கொண்டாலென, எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார். 31 தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக் கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல், ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும் பார்மிசைப் படர்ந்தது, பதாதிப் பௌவமே. 32 தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும், பேரியும், இயம்பல சென்ற - பேதைமைப் பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. 33 தா அரு நாண் முதல் அணி அலால், தகை மே வரு கலங்களை வெறுத்த மேனியர், தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர், பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினார். 34 அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை, பொதி பல கவிகக மீன் பூத்தது ஆகிலும் கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே. 35 செல்லிய செலவினால், 'சிறிய திக்கு' எனச் சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில், ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, 'ஓர் மெல்லியல்' என்றவர் மெலியரே கொலாம்? 36 தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில, குங்குமம் கொட்டில, கோவை முத்து இல,- பொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய. 37 இன் துணையவர் முலை எழுது சாந்தினும் மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய குன்று எனப் பொலிந்தன - குவவுத் தோள்களே. 38 நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள் குறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான், கறை அறக் கழுவிய கால வேலையே. 39 விரி மணி மேகலை விரவி ஆர்க்கில தெரிவையர் அல்குல், தார் ஒலி இல் தேர் என பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி, அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே. 40 மல்கிய கேகயன் மடந்தை வாசகம் நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!- புல்கிய மணிவடம் பூண்கிலாமையால், ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே. 41 'கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்; காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம்' என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையை. 42 உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்? கண்ணினும் மனத்தினும், கமலத்து அண்ணல்தன் எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே! 43 அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம் நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த் தலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே. 44 அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால் குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள் மறிகடல் ஒத்தது - அவ் அயோத்தி மாநகர். 45 பெருந்திரை நதிகளும், வயலும், பெட்புறு மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத் திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் அருந்தெரு ஒத்தது - அப் படை செல் ஆறு அரோ! 46 'தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை ஏர்கள் தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால்- கார்கள் தாம் என மிகக் கடுத்த கைம்மலை வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே. 47 ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல், தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்- வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே. 48 மத்தளம் முதலிய வயங்கு பல் இயம் ஒத்தன சேறலின், உரை இலாமையின், சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய பத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே. 49 ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை, ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது - காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே. 50 கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம்- அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர் மனம் கிடந்து உண்கில, மகளிர் கொங்கையே? 51 மரவுரி அணிந்து பரதன் சத்துருக்கனனுடன் தேரில் செல்லுதல் இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும், தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்; பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும், நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான். 52 பரதனுடன் தாயரும் வருதல் தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின் ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும், தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப் போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே. 53 சத்துருக்கனன் கூனிய துன்புறுத்தப் பற்ற, பரதன் விலக்கல் மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும் உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும், சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்: 54 'முன்னையர் முறை கெட முடித்த பாவியைச் சின்னபின்னம் செய்து, என் சினத்தைத் தீர்வெனேல், "என்னை இன்று என் ஐயன் துறக்கும்" என்று அலால், "அன்னை" என்று, உணர்ந்திலென், ஐய! நான்' என்றான். 55 'ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல் வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும், கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்! போதும் நாம்' என்று கொண்டு, அரிதின் போயினான். 56 இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல் மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும் கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட, ஐயனும் தேவியும் இளைய ஆளியும் வைகிய சோலையில் தானும் வைகினான். 57 இராமன் தங்கிய புல்லணை அருகில் பரதன் மண்ணில் இருத்தல் அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன், கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன், வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான். 58 'ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான் ஈண்டிய நெறி' என, தானும் ஏகினான் - தூண்டிடு தேர்களும் துரக ராசியும் காண் தகு கரிகளும் தொடர, காலினே. 59 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |