|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த: (Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
புதிய வெளியீடு! |
பால காண்டம் 6. கையடைப் படலம் மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன் அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும் விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர் முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற, கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள், 1 நனை வரு கற்பக நாட்டு நல் நகர் வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர் புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 2 தயரதன் அரியணையில் வீற்றிருக்க, விசுவாமித்திர முனிவனின்
வருகை தூய மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்; சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர், 'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம் ஓர் ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3 மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர் அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு' எனாத் தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான். 4 தயரதன் முனிவனை வணங்கி உபசரித்து மொழிதல் வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம், அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச, கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான். 5 பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன் அணிந்த தவிசு இட்டு, இனிது அருத்தியொடு இருத்தி, இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து, 'இன்றே துணிந்தது, என் வினைத் தொடர்' எனத் தொழுது சொல்லும்: 6 'நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்! என் நலம் செய் வினை உண்டு எனினும், அன்று; நகர், நீ, யான் வலம் செய்து வணங்க, எளிவந்த இது முந்து என் குலம் செய் தவம்' என்று இனிது கூற, முனி கூறும்: 7 தயரதனை விசுவாமித்திரன் புகழ்தல் 'என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால், பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், பாற்கடலும், பதும பீடத்து அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ ? இகல் கடந்த புலவு வேலோய்! 8 'இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து, நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி, குறை இரந்து நிற்ப, நோக்கி, குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது?-அரச!' என்றான். 9 தயரதன் கை கூப்பித் தொழுது, 'யான் செய்வது அருளுக!'
என வேண்டுதல் உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும் கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக, கரங்கள் கூப்பி, 'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று, இனிச் செய்வது அருளுக!' என்று, முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின் மொழியும் முனிவன், ஆங்கே: 10 வேள்வி காக்க தயரதனிடம் கரிய செம்மலை முனிவன் வேண்டல் 'தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம், "செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்.11 தயரதன் துயர் உறுதல் எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும், உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட, 'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான் கடுந் துயரம்-காலவேலான்.12 தயரதன் தானே வந்து வேள்வி காப்பேன் எனல் தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி, 'படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்! பணி இதுவேல், பனி நீர்க் கங்கை புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும், புகுந்து செய்யும் இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென்; பெரு வேள்விக்கு எழுக!' என்றான். 13 விசுவாமித்திர முனிவனின் கோபம் என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண் படைத்த முனி; 'இறுதிக் காலம் அன்று' என, 'ஆம்' என இமையோர் அயிர்த்தனர்; மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும் நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச் சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன, போய்த் திசைகள் எல்லாம்.14 வசிட்டன் உரையால் தயரதன் தெளிதல் கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் மறுத்தியோ?' எனா, வசிட்டன் கூறுவான்: 15 'பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல், ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து எய்து காலம் இன்று எதிர்ந்தது' என்னவே, 16 தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம் ஒப்புவித்தல் குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன், 'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,- 'வருக என்றனன்' என்னலோடும், வந்து அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17 வந்த நம்பியைத் தம்பிதன்னொடும் முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல் தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு; எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான். 18 இராம இலக்குவருடன் முனிவன் புறப்படுதல் கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, 'மேல் அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்' எனா, நடத்தல் மேயினான், நவைக்கண் நீங்கினான். 19 ஆயுதம் தாங்கி இராம இலக்குவர் முனிவன் பின் செல்லுதல் வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல் என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில் ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான். 20 அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம் மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென, சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல், பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். 21 மூவரும் சரயு நதியை அடுத்த சோலையைச் சேர்தல் வரங்கள் மாசு அற, தவம் செய்தோர்கள் வாழ் புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய், அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று இரங்கு வார் புனல் சரயு எய்தினார். 22 கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன் வரம்பு மீறிடு மருத வேலிவாய், அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல் சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார். 23 தீய்ந்த சோலையைக் கண்டு இராமன் வினாவுதல் தாழும் மா மழை தவழும் நெற்றியால் சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப் பாழி மா முகட்டு உச்சி, பச்சை மா ஏழும் ஏற, போய் ஆறும் ஏறினார். 24 தேவு மாதவன் - தொழுது, தேவர்தம் நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் தாவும் மா புகை தழுவு சோலை கண்டு, 'யாவது ஈது?' என்றான் - எவர்க்கும் மேல் நின்றான். 25 மிகைப் பாடல்கள் அப்பெருந் திருவொடும் 'அகில நாதன்' என்று, எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே, தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே, ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள். 1-1 அரிஅணை மிசை தனில், அழகு மன்றினில், புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள் அரசர்கள் முடி படி அணைய, அம் பொனின் உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ. 1-2 '"இனைய சோலை மற்று யாவது?" என்று, மா முனிவ! கூறு' என முதல்வன் கூறலும், பனுவல் வேத நூல் பகரும் மா தவன், 'தனு வலாய்! இதன் தன்மை கேள்' எனா, 24-1 'சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன் உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள், வெம்பி, மற்று அவன் வெற்றி கொண்ட போது, அம்பரம் இழந்து, அவனி வந்தனன்; 24-2 'அவனி வந்து, மன்னவர் இடம்தொறும், தவனன் என்னவே தான் உழன்று, அறிந்து, "இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு" எனா, உவன் விரும்பி வந்து, உந்தை நாடு உறா, 24-3 'இந்த இவ் இடத்து எய்தி, இந்திரன், "சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும் வந்து நிற்க" எனா, மன நினைப்பின்முன் முந்து வந்து மா முரல நின்றவால். 24-4 'நின்ற சோலைவாய், நியமம் நித்தமும் குன்றல் இன்றியே செய்து கொண்டு, அவன் நன்றியால் இருந்து, அரசை நண்ணியே, துன்று சோலையின் தொழில் உணர்த்தினான். 24-5 'உருவம் மாறி, வேறு உருவமாகியே, நிருப! நின் குடை நிழலின் நிற்றலும், பரிவின் நோக்கி, "நீ பகர்தியால்" எனத் தருவின் நாயகந்தான் விளம்பினான்: 24-6 '"சதமகன் தனைச் சம்பரன் எனும் மதமகன் துரந்து அரசு வவ்வினான்; கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன் விதம் அகன்று வந்து, உன்னை மேவினேன்." 24-7 'என்றபோது தன் இரதம் ஏறியே சென்று, மற்று அவன் சேனையோடு உகக் கொன்று, வாசவன் அரசு கொள்ளவே அன்று அளித்து, மீண்டு அயோத்தி மேவினான். 24-8 'அன்னது ஆதலின் அவனி வந்த கா இன்ன நாமம், இச் சோலை' என்றலும், மன்னர்மன்னவன் மதலை, 'நன்று' எனா, பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார். 24-9 . |
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) |
தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) |
ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் |
சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் |
புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) |
அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) |
பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் |
பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் |
மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) |
ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) |
லா.ச.ராமாமிருதம் : அபிதா |
சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை |
ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள் |
ரமணிசந்திரன் |
சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் |
க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு |
கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் |
மகாத்மா காந்தி : சத்திய சோதனை |
ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி |
பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி |
மாயாவி : மதுராந்தகியின் காதல் |
வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் |
கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் |
என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் |
கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே |
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு |
விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் |
கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) |
பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) |
ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி |
ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் |
வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் |
சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை |
மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா |
கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் |
ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை |
திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் |
திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் |
ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை |
முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் |
நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா |
இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை |
உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா |
குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் |
பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் |
நான்மணிமாலை நூல்கள் :
திருவாரூர் நான்மணிமாலை |
தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது |
கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை |
கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் |
சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் |
பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா |
ஆன்மீகம் : தினசரி தியானம் |
|
|