http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




கிட்கிந்தா காண்டம்

12. தானை காண் படலம்

சேனைத் தலைவர் தம் பெருஞ் சேனையுடன் வந்து சேர்தல்

அன்று அவண் இறுத்தனர்; அலரி கீழ்ட்டிசைப்
பொன் திணி நெடு வரை பொலிவுறாதமுன்,
வன் திறல் தூதுவர் கொணர, வானரக்
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம்; 1

ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த
வானராதிபர் ஆயிரர் உடன் வர, வகுத்த
கூனல் மாக் குரங்கு ஐ - இரண்டு ஆயிர கோடித்
தானையோடும், - அச் சதவலி என்பவன் - சார்ந்தான். 2

ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை,
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான், வந்து - சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல். 3


ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை
ஆறு - எண் ஆயிர கோடி அது உடன் வர, - அமிழ்தம்
மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் - வந்தான். 4

ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த,
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப, -
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி - கடல் என நடந்தான். 5

மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின, வயிரத்
திண் கொள் மால் வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, - எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான். 6

முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்,
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும்,
இனிய மாக் குரங்கு ஈர் - இரண்டு ஆயிர கோடி
அனிகம் முன் வர, -ஆன் பெயர்க் கண்ணன் - வந்து அடைந்தான். 7

தனி வரும் தடங் கிரி எனப் பெரியவன், சலத்தால்
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்குறும் நிலையன்,
பனசன் என்பவன் - பன்னிரண்டு ஆயிர கோடிப்
புனித வெஞ் சின வானரப் படை கொடு - புகுந்தான். 8

இடியும், மாக் கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் உறுக்கு உடையன, விசையன, முரண்,
கொடிய கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படை கொண்டு புகுந்தனன் - நீலன். 9

மா கரத்தன, உரத்தன, வலியன, நிலைய,
வேகரத்து, வெங் கண் உமிழ் வெயிலன, மலையின்
ஆகரத்தினும் பெரியன, ஆறு - ஐந்து கோடி
சாகரத்தொடும் - தரீமுகன் என்பவன் - சார்ந்தான். 10

இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க,
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்,
விளைத்த வெஞ் சினத்து, அரி இனம் வெருவுற விரிந்த
அளக்கரோடும், -அக் கயன் என்பவனும்-வந்து அடைந்தான். 11

ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த
பாயிரப் பெரும் படை கொண்டு, பரவையின் திரையின்
தாய், உருத்து உடனே வர - தட நெடு வரையை
ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும்,-வந்து இறுத்தான். 12

வகுத்த தாமரை மலர் அயன், நிசிசரர் வாழ்நாள்
உகுத்த தீவினை பொருவரும் பெரு வலி உடையான்,
பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி
தொகுத்த கோடி வெம் படை கொண்டு,-துன்முகன்-தொடர்ந்தான். 13

இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி
உயர்ந்த வெஞ் சின வானரப் படையொடும், ஒருங்கே,-
சயம் தனக்கு ஒரு வடிவு எனத் திறல் கொடு தழைத்த
மயிந்தன் - மல் கசகோமுகன் தன்னொடும், வந்தான். 14




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/kitkintha/thaanaikaanpadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs