http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




கிட்கிந்தா காண்டம்

5. துந்துபிப் படலம்

துந்துபியின் உடலைப் பார்த்து, இராமன் வினாவுதல்

அண்டமும், அகிலமும் அடைய, அன்று அனலிடைப்
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும், வான்
மண்டலம் தொடுவது, அம் மலையின்மேல் மலை எனக்
கண்டனன், துந்துபி, கடல் அனான், உடல் அரோ! 1

'தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ்
வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன்
என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா,
அன்பு உலப்பு அரிய நீ, உரைசெய்வாய்' என, அவன், 2


துந்துபியின் வரலாற்றைச் சுக்கிரீவன் உரைத்தல்

'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான்,
மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர்
சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். 3

'அங்கு வந்து அரி எதிர்ந்து, "அமைதி என்?" என்றலும்,
"பொங்கு வெஞ் செருவினில் பொருதி" என்று உரைசெய,
"கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே
உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன்" என்று உரைசெய்தான். 4

'கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையை,
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, "முன்
நொடிதி; நின் குறை என்?" என்றலும், நுவன்றனன் அரோ
"முடிவு இல் வெஞ் செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க!" எனா, 5

'"மூலமே, வீரமே மூடினாயோடு, போர்
ஏலுமே? தேவர்பால் ஏகு" எனா, ஏவினான் -
"சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர்
வாலிபால் ஏகு" எனா - வான் உளோர் வான் உளான். 6

'அன்னவன் விட, உவந்து, அவனும் வந்து, "அரிகள் தம்
மன்னவன்! வருக! போர் செய்க!" எனா, மலையினைச்
சின்னபின்னம் படுத்திடுதலும், சினவி, என்
முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், 7

'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்; எவ் உலகினும்,
வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்;
மருவ அருந் தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். 8

'தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை;
தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும்,
சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். 9

'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில்,
கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியொடும்
பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து,
எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான். 10




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/kitkintha/thunthubippadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs