சடகோபர் அந்தாதி இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் முதலியவை. சிறப்புப் பாயிரம்
தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன் பாவில் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே நாவில் சிறந்த மாறற்குத் தக்கநன் நாவலவன் பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே. ஆரணத் தின்சிர மீதுஉறை சோதியை ஆந்தமிழால் பாரணம் செய்த வனைக்குருக்ஷரனைப் பற்பலவா நாரண னாம்என ஏத்திக் தொழக்கவி நல்குகொடைக் காரண னைக்கம் பனைநினை வாம்உள் களிப்புறவே. 'நம்சட கோபனைப் பாடினையோ?' என்று நம்பெருமாள் விஞ்சிய ஆதரத் தால்கேட்பக் கம்பன் விரைந்துஉரைத்த செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும்வண்ணம் நெஞ்சுஅடி யேற்குஅருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே. நாதன் அரங்கன் நயந்துரை என்னநல் கம்பன்உன்தன் பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே ஓதும் படியெனக்கு உள்ளத் தனையருள் ஓதரிய வேதம் தமிழ் செய்த மெய்ப்பொரு ளேஇதுஎன் விண்ணப்பமே. தற்சிறப்புப் பாயிரம்
மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனைமுன் சென்றே மதுரகவிப் பெருமாள் தென்த மிழ்த்தொடையில் ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்அடி யுற்றுநின்றான் என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே. நூல்
வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர் கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணம்கடந்த போதக்க டல்எங்கள் தென்குரு கூர்ப் புனிதன் கவிஓர் பாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1 சுடர்இரண் டேபண்டு மூன்றா யினதுகள் தீர்ந்துலகத்து இடர்இரண் டாய்வரும் பேர்இருள் சீப்பன எம்பிறப்பை அடர்இரண் டாம்மலர்த் தாள்உடை யான்குரு கைக்கரசன் படர்இருங் கீர்த்திப் பிரான்திரு வாய்மொழிப் பாவொடுமே. 2 பாவொடுக் கும்நுன் இசைஒடுக் கும்பலவும் பறையும் நாவொடுக் கும்நல் அறிவொடுக் கும்மற்றும் நாட்டப்பட்ட தேவொடுக் கும்பர வாதச் செருஒடுக் கும்குருகூர்ப் பூவொடுக் கும்அமு தத்திரு வாயிரம் போந்தனவே. 3 தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தருமநிறை கனமாம் சிலர்க்குஅதற் குஆரண மாஞ்சிலர்க்கு ஆரணத்தின் இனமாம் சிலர்க்குஅதற்கு எல்லையு மாம்தொல்லை ஏர்வகுள வனமாலை எம்பெரு மான்குரு கூர்மன்னன் வாய்மொழியே. 4 மொழிபல ஆயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும் வழிபல வாயவிட் டொன்றா அதுவழு வாநரகக் குழிபல ஆயின பாழ்பட் டதுகுளிர் நீர்ப்பொருநை சுழிபல வாய் ஒழுகுங்குரு கூர் எந்தை தோன்றலினே. 5 தோன்றா உபநிட தப்பொருள் தோன்றலுற் றார்தமக்கும் சான்றாம் இவைஎன் றபோதுமற் றென்பலகா லும்தம்மின் மூன்றா யினவும் நினைந்து ஆரணத் தின்மும் மைத்தமிழை ஈன்றான் குருகைப் பிரான்எம் பிரான்தன் இசைக்கவியே. 6 கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக் குவிப்பான் குருகைப் பிரான்சட கோபன்கு மரிகொண்கன் புவிப்பா வலர்தம் பிரான்திரு வாய்மொழி பூசுரர்தம் செவிப்பால் நுழைந்துபுக் குள்ளத் துளேநின்று தித்திக்குமே. 7 தித்திக்கும் மூலத் தெளியமு தேயுண்டு தெய்வமென்பார் பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம்பவம் அறுப்பார் முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய்குழலார் அத்திக்கு மூலம் குருகைப் பிரான்சொன்ன ஆயிரமே. 8 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|