சரசுவதி அந்தாதி ... தொடர்ச்சி ... ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய் கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம் திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. 11 தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும் யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. 12 புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத் தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 13 வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம் பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும் போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 14 நாயக மான மலரக மாவதுஞான வின்பச் சேயக மான மலரக மாவதுந் தீவினையா லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந் தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. 15 சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும் உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற் சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும் ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. 16 கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள் அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத் தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற் பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. 17 தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன் எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான் கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. 18 கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக் கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக் கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார் கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. 19 காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும் நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும் ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 20 அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின் விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21 வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர் கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர் மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற் சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. 22 சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும் சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23 அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும் உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப் படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும் தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. 24 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |