http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




சுந்தர காண்டம்

8. சம்புமாலி வதைப் படலம்

அனுமனைப் பிணித்து வருமாறு சம்புமாலியை இராவணன் ஏவுதல்

கூம்பின கையன், நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள்,
பாம்பு இவர் தறுகண், சம்புமாலி என்பவனைப் பாரா,
'வாம் பரித் தானையோடு வளளத்து, அதன் மறனை மாற்றி,
தாம்பினின் பற்றி, தந்து, என் மனச் சினம் தணித்தி' என்றான். 1

சம்புமாலி இராவணனை வணங்கி, போருக்குப் புறப்படுதல்

ஆயவன் வணங்கி, 'ஐய! அளப்பரும் அரக்கர் முன்னர்,
"நீ இது முடித்தி" என்று நேர்ந்தனை; நினைவின் எண்ணி
ஏயினை; என்னப்பெற்றால், என்னின் யார் உயர்ந்தார்?' என்னா,
போயினன், இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான். 2


சம்புமாலியுடன் சென்ற சேனைகள்

தன்னுடைத் தானையோடும், தயமுகன், 'தருக' என்று ஏய
மன்னுடைச் சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின்
மின்னுடைப் பரவையோடும், வேறுளோர் சிறப்பின் விட்ட
பின்னுடை அனிகத்தோடும், பெயர்ந்தனன்,-பெரும் போர் பெற்றான். 3

உரும் ஒத்த முழக்கின், செங் கண், வெள் எயிற்று, ஓடை நெற்றி,
பருமித்த கிரியின் தோன்றும், வேழமும்-பதுமத்து அண்ணல்
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய, நேமி,
சொரி முத்த மாலை சூழும், துகிற்கொடி, தடந் தேர்-சுற்ற; 4

காற்றினை மருங்கில் கட்டி, கால் வகுத்து, உயிரும் கூட்டி,
கூற்றினை ஏற்றியன்ன குலப் பரி குழுவ; குன்றின்
தூற்றினின் எழுப்பி, ஆண்டு, தொகுத்தென, கழல் பைங் கண்ண
வேற்று இனப் புலிஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம். 5

தோமரம், உலக்கை, கூர் வாள், சுடர் மழு, குலிசம், தோட்டி,
தாம் அரம் தின்ற கூர் வேல், தழல் ஒளி வட்டம், சாபம்,
காமர் தண்டு, எழுக்கள், காந்தும் கப்பணம், கால பாசம்,
மா மரம், வலயம், வெங் கோல், முதலிய வயங்க மாதோ. 6

எத்திய அயில், வேல், குந்தம், எழு, கழு முதல ஏந்தி,
குத்திய-திளைப்ப; மீதில் குழுவின மழை மாக் கொண்டல்
பொத்து உகு பொரு இல் நல் நீர் சொரிவன போவ போல,
சித்திரப் பதாகை ஈட்டம் திசைதொறும் செறிவ செல்வ; 7

பல்லியம் துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரல, பொன் தேர்ச்
சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திட, செறி பொன் தாரும்
வில்லும் நின்று இசைப்ப, யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப, விண் தோய்
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ; 8

மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற,
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம் என்ன-
அன்னவன் சேனை செல்ல, ஆர்கலி இலங்கை ஆய
பொன் நகர் தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப. 9

ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம், ஆழி அம் தடந் தேர்; அத் தேர்க்கு
ஏயின் இரட்டி யானை; யானையின் இரட்டி பாய் மா;
போயின பதாதி, சொன்ன புரவியின் இரட்டி போலாம்-
தீயவன் தடந் தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை. 10

வில் மறைக் கிழவர்; நானா விஞ்சையர்; வரத்தின் மிக்கார்;
வன் மறக் கண்ணர்; ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார்;
தொல் மறக் குலத்தர்; தூணி தூக்கிய புறத்தர்; மார்பின்
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர்-கடுந் தேர் ஆட்கள். 11

பொரு திசை யானை ஊரும் புனிதரைப் பொருவும் பொற்பர்;
சுரிபடைத் தொழிலும், மற்றை அங்குசத் தொழிலும், தொக்கார்;
நிருதியின் பிறந்த வீரர்; நெருப்பு இடை பரப்பும் கண்ணர்;
பரிதியின் பொலியும் மெய்யர்-படு மதக் களிற்றின் பாகர். 12

ஏர் கெழு கதியும், சாரி பதினெட்டும், இயல்பின் எண்ணிப்
போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர், போரில்,
தேர் கெழு மறவர், யானைச் சேவகர், சிரத்தில் செல்லும்
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவப் போனார். 13




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/sundara/sambumaalivathaipadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs