http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




சுந்தர காண்டம்

5. சூடாமணிப் படலம்

சீதையை இராமனிடம் சேர்க்க எண்ணிய அனுமனின் விண்ணப்பம்

'உண்டு துணை என்ன எளிதோ உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்ட முதல் நாயகனது ஆவி அனை யாளைக்
கொண்டு அகல்வதே கருமம்' என்று உணர்வுகொண்டான். 1

'கேட்டி, அடியேன் உரை; முனிந்தருளல்; கேள் ஆய்!
வீட்டியிடும் மேல், அவனை வேறல் வினை அன்றால்;
ஈட்டி இனி என் பல; இராமன் எதிர், நின்னைக்
காட்டி, அடி தாழ்வென்; அது காண்டி; இது காலம்; 2


'பொன் திணி பொலங்கொடி! என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க; துயர் விட்டாய்,
இன் துயில் விளைக்க; ஓர் இமைப்பின், இறை வைகும்
குன்றிடை, உனைக் கொடு குதிப்பென்; இடை கொள்ளேன். 3

'அறிந்து, இடை, அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்,
முறிந்து உதிர நூறி, என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும், நெடியோன்பால்,
வெறுங் கை பெயரேன் - ஒருவராலும் விளியாதேன். 4

'"இலங்கையொடும் ஏகுதிகொல்" என்னினும், இடந்து, என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து, எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி, வரி வெஞ் சிலையினோர்தம்
பொலங் கொள் கழல் தாழ்குவென்; இது, அன்னை! பொருள் அன்றால். 5

'அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று, "உன்
மருந்து அனைய தேவி, நெடு வஞ்சர் சிறை வைப்பில்,
பெருந் துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள்" எனப் பகரின், என் அடிமை என் ஆம்? 6

'புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்,
விண்டவர் வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ?
"கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி கொண்டேன்;
கண்டு வருகிற்றிலென்" எனக் கழறுகேனோ? 7

'"இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால், இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி, நிருதக் குலம் முடித்து, வினை முற்றிப்
பொருக்க அகல்க" என்னினும், அது இன்று புரிகின்றேன். 8

'இந்துநுதல்! நின்னொடு இவண் எய்தி, இகல் வீரன்,
சிந்தை உறு வெந் துயர் தவிர்ந்து, தெளிவோடும்,
அந்தம் இல் அரக்கர் குலம் அற்று அவிய நூறி,
நந்தல் இல் புவிக்கண் இடர், பின் களைதல் நன்றால். 9

'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான். 10

அனுமனின் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்

ஏய நல் மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு,
'ஆய தன்மை அரியது அன்றால்' என,
தூய மென்சொல் இனையன சொல்லுவாள்; 11

'அரியது அன்று; நின் ஆற்றலுக்கு ஏற்றதே!
தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு, அது, என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால். 12

'வேலையின்னிடையே வந்து, வெய்யவர்,
கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது,
ஆலம் அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும்; தனிமையோய்! 13

'அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ் சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என்பது என்? வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை, நீயும் நினைத்தியோ? 14




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/sundara/soodamanipadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs