யுத்த காண்டம் 38. மண்டோ தரி புலம்புறு படலம் தன்னைக் காண வந்த தேவர் முதலியோரை இராமன் காணச் செல்லுதல் அவ் வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்களோடும் எவ் வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக் கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண, செவ்வையின் அவர் முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான். 1 வீடணன் பாசத்தால் தமையன்மேல் விழுந்து அரற்றுதல் 'போழ்ந்தென அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்; வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக் கடன் வகுத்தி' என்ன, தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலை வீழ்ந்தென்ன. 2 ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க, தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர, தா அரும் பொறையினான் தன் அறிவினால் தகையத் தக்க ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர, 3 வீடணன் புலம்பல் 'உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்; நீயும் களப் பட்டாயே! எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் எண்ணுதியோ? -எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே! 4 '"ஓராதே ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள்மேல் உற்ற காதல் தீராத வசை" என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ? போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற பேர் ஆசை பெயர்ந்ததோ?-பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! 5 '"அன்று எரியில் விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு ஓர் அன்னை" என்று, குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; அது மனத்துள் கொள்ளாதே போய், உன் தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே பொன்றினையே! இராகவனார் புய வலியை இன்று அறிந்து, போயினாயே! 6 'மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும், வரங்கள் ஈந்த ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன; அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற இன்றுதான் உணர்ந்தனையே, இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல்? 7 'வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ? ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க, மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 8 '"கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்" என்று, அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளோ? நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார், நம்பி! நம்மோடு எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 9 'போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர, சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தம் மோயை, தெய்வக் கறிப்ன் பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து, பழி கொண்ட பித்தா! பின்னைப் பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?' 10 சாம்பன் தேற்ற, வீடணன் தேறுதல் என்று ஏங்கி, அரற்றுவான் தனை எடுத்து, சாம்பவனும் எண்கின் வேந்தன், 'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச் சென்று ஓங்கும் உணர்வினர்போல், தேறாது வருந்துதியோ?' என்ன, தேறி நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டள், மயன் பயந்த நெடுங் கண் பாவை. 11 இராவணன் இறந்த செய்தி கேட்டு, மண்டோ தரி அவன் வீழ்ந்து
கிடக்கும் இடம் அடைதல் அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார், புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார், இனம் தொடர்ந்து உடன் வர, ஏகினாள் என்ப- நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 12 இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர் புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால்- அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. 13
கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்; 'ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்' எனா, மா புரம் தவிர்ந்து, விண் வழிச் சென்றார் சிலர். 14 அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட, குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட, உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக, மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். 15 அரக்கியர் இராவணன்மேல் விழுந்து அழுதல் தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர் முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து, அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன் மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 16 தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும், எழு உயர் புயங்களும், மார்பும், எங்கணும், குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு அழுதிலர், உயிர்த்திலர், ஆவி நீத்திலார். 17 வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும், பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்கினார், ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்- திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். 18 இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர், மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர்,- முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள்-தம் துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. 19 'அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர் திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை; இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 20 மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல் தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்தென உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள், மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து, இரங்கினள்-மயன் மகள்,-இனைய பன்னினாள்: 21 'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன் பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ? முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ? என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 22 'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும், எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடி, இழைத்தவாறோ? "கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும்" எனக் கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி? 23 'ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால் தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று, வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்! ஓர் அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ! 24 'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும், ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும், வேந்தர் பிரான், தயரதனார், பணிதன்னால் வெங் கானில் விரதம் பூண்டு போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! 25 '"தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங் கண் மாற்கும், ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி?" என ஏமாப்புற்றேன்; ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ? 26 'அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு, பேர் அறிஞர்க்கேயும் உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை; திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்.27 'ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும் வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்; கண் புக்க வேழ வில்லால், நார நாள், மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும் மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே! 28 இராவணன் உடலை மண்டோ தரி தழுவி, உயிர்விடல் என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவி, தனி நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29 வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத் தான மங்கையரும், தவப் பாலவர், ஆன மங்கையரும், அருங் கற்புடை மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30 இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி,
உரிய கடன்களை வீடணன் செய்தல் பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை, வன்னி கூவி, வரன்முறையால், மறை சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து, இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31 கடன்கள் செய்து முடித்து, கணவனோடு உடைந்து போன மயன் மகளோடு உடன் அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32 மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை
வந்தடைதல் மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து, உற்ற தீக் கொடுத்து, உண் குறு நீர் உகுத்து, 'எற்றையோர்க்கும் இவன் அலது இல்' எனா, வெற்றி வீரன் குரை கழல் மேவினான். 33 வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும், 'சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்! முந்தை எய்தும் முறைமை இது ஆம்' எனா, அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 34 மிகைப் பாடல்கள் 'வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன், முதல் அமரர் வாழ்த்தி ஏத்த, தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து, வைகிய நீ, தாய் சொல் தாங்கி, கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து, உன் ஊன் புகும் கல் உரம் உருவி ஓட, உளம் நாணினையோ? உயிரும் உண்டோ ? 5-1 'அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே! உன் தன் திருவினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ, ஒருபது வாய் உள; வணங்க, ஒண் முடி பத்து உள; இறைஞ்ச, இருபது கை உள; இலங்கை என்னாக வீந்தாயே! 7-1 'அரு வினை வந்தெய்திய போழ்து ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்? வீட்டின் திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த, ஒருபது நா உள; வணங்க, ஒண் முடிகள் பத்து உளவே; இறைஞ்ச, மேரு இருபது கை உள; இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே! 7-2 'அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள்' என்று உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே! பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ? 28-1 'ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும் நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்; ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை; பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 28-2 இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல் அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து, எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட, 31-1 கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து, உற்ற ஈம வீதியின் உடம்படீஇ, சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர, மற்ற வீரன் விதியின் வழங்கினான். 31-2 இனைய வீரன் இளவலை நோக்கி, 'நீ புனையும் நன் முடி சூட்டுதி, போய்' எனா, அனைய வீரன் அடியின் இறைஞ்சவே, 'அனையனோடும் அனுமனைச் சார்க' எனா. 34-1 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |