நீதிநெறி விளக்கம்
காப்பு
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே வழுத்தாத தெம்பிரான் மன்று. நூல்
அறம்பொருளின்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை. 1 தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும் மடங்கொன்றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம் முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது. 2 கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச் - சொல்வளம் மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும் செல்வமு முண்டு சிலர்க்கு. 3 எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந் துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்தும் சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற் பொன்மலர் நாற்ற முடைத்து. 4 அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று. 5 கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யு முடம்பு. 6 நெடும்பகற் கற்ற வகையத் துதவா துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே நீதென்று நீப்பரி தால். 7 வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் றொடங்கல் - கருந்தனம் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள்செய் திடல். 8 எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்வி தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் - மனைத்தக்காள் பாண்பில ளாயின் மணமக னல்லறம் பூண்ட புலப்படா போல். 9 இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல் வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும் கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன் ஞாலம் பித்துடைய வல்ல பிற. 10 இவறன்மை கண்டு முடையாரை யாரும் குறையிரந்துங் குற்றேவல் செய்ப பெரிதுந்தாம் முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல் கற்பன்றே கல்லாமை யன்று. 11 கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக் கழகுசெய்வார். 12 முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉம் கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற் கல்லுந் தகருந் தகரா கனங்குழாய் கொல்லுலைக் கூடத்தி னால். 13 தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே யிவர்க்குநா மென்று. 14 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|