நீதிநெறி விளக்கம்
... தொடர்ச்சி ... கல்வியுடைமை பொருளுடைமை யென்றிரண்டு செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார் குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமும் தலைவணங்கித் தாழப் பெறின். 15 ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணி னனிதாழ்ப - தூக்கின் மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழுந் துலைக்கு. 16 விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப்பகையை வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். 17 தன்னை வியப்பிப்பான் றற்புகழ்த றீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றாற் - றன்னை வியவாமை யன்றே வியப்பாவ தின்பம் நயவாமை யன்றே நலம். 18 பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல். 19 கற்றப் பிறர்க்குரைத்துத் தாநில்லார் வாய்ப்படூஉம் வெற்றுரைக் குண்டோ ர் வலியுடைமை - சொற்றநீர் நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல். 20 பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் தமக்குப் பயன்வே றுடையார் திறப்படூஉம் தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் கோவினை வேலை கொளல். 21 கற்பன வூழற்றார் கல்விக் கழகத்தாங் கொற்கமின் றூத்தைவா யங்காத்தல் - மற்றுத்தம் வல்லுரு வஞ்சன்மி னென்பவே மாபறவை புல்லுரு வஞ்சுவ போல். 22 போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி மீக்கொ ணகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும் ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம் பேடு கொளப்படுவ தில். 23 கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் குற்றந் தமதே பிறிதன்று முற்றுணர்ந்தும் தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா ஏதிலரை நோவ தெவன். 24 வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங் குகப்பெய்தார் - மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கந்துகொல் பூட்கைக் களிறு. 25 குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் - அறவோர்க் கடிகளே தெய்வ மனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூ ணிறை. 26 கண்ணிற் சொலிச்செவியினோக்கு மிறைமாட்சி புண்ணியத்தின் பாலதே யாயினும் - தண்ணளியால் மன்பதை யோம்பாதார்க் கென்னாம் வயப்படைமற் றென்பயக்கு மாணல் லவர்க்கு. 27 குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலு மாண்பே - குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. 28 இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான் நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் ஆவன கூறி னெயிறலைப்பா னாறலைக்கும் வேடலன் வேந்து மலன். 29 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |