|
|
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும். |
தினசரி தியானம் | |||||
ஆள் இல்லாத படகு அஹங்காரம் அற்ற இடத்தில் அண்ணலே, நீ வீற்றிருக்கிறாய்.
படகு ஒன்றில் நிறையப் போக்கிரிகள் போய்க்கொண்டிருந்தார்கள். சினமும், சச்சரவும், செருக்கும் வடிவெடுத்தவர்கள் அவர்கள். அன்னவர் ஊர்ந்து சென்ற படகைக் காலிப் படகு ஒன்று மிதந்துகொண்டு வந்து மோதியது. அது மோதியதை முன்னிட்டு யாரும் மனத்தாங்கல் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அது ஓர் ஆளாவது ஊர்ந்த படகாயிருந்திருக்குமாயின் வம்பு மிக வந்திருக்கும். நமது மனம் என்ற படகில் ஆணவ அஹங்காரம் என்ற ஆட்கள் இல்லாவிட்டால் நம்முடன் யாரும் சண்டைக்கு வரமுடியாது.சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே. -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம்.
|
எமது வலைதளங்கள் |
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |
| ||||||||||||||
|
|
|
|