தினசரி தியானம் |
மாட்சி இயற்கை முழுதிலும் உனது மாட்சியை விளக்கும் மாண்பொருளே, என் மனத்தையும் மாட்சியுடையதாக்குவாயாக.
எப்பொருளிலும் எவ்விடத்தும் இறைவனது திருக்கோலமே தென்படுகிறது. அவனது பெருமைக்கு விளக்கமாக அமைந்துள்ளது பிரபஞ்சம். அவனது மகிமை இத்தனை விதமாக விளங்கிக்கொண்டிருப்பது பெருவியப்பேயாம்.
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி. -அப்பர்
குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |