சமகால இலக்கியம்
|
திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிய உண்மை விளக்கம்
காப்பு வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா உண்மைவிளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர் அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப் பந்தம் அறப் புந்தியுள் வைப்பாம் 1 நூல் பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந் தப்பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்தவினா ஐயாநீ தான் கேட்டு அருள். 2 ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? அன்றே தான் மாறா வினை ஏது? மற்று இவற்றின் - வேறு ஆகா நான் ஏது? நீ ஏது? நடம் அஞ்செழுத்துத் தான் ஏது? தேசிகனே! சாற்று. 3 உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உந்தனக்கு வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து - தெள்ளியசீர் ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த யோகம் நிகழ் புதல்வா! உற்று. 4 நாற்கோணம் பூமிபுனல் நண்ணும் மதியின்பாதி ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் - ஆக்கும் அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா உறுகாயம் ஆம் இவற்றால் உற்று. 5 பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார் எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது. 6 குறிகுலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா அறுபுள்ளி ஆர் அமுத விந்துப் - பிறிவு இன்றி மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேஎன்று ஒண்புதல்வா! ஆகமம் ஓதும். 7 பார் ஆதி ஐந்தும் பன்னும் அதி தெய்வங்கள் ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் - ஓர் ஓர் தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றம் முதல் ஐந்தும் பழுதறவே பண்ணுவர்காண் பார். 8 படைப்பன் அயன் அளிப்பன் பங்கயக்கண் மாயன் துடைப்பன் உருத்திரனும் சொல்லில் - திடப்பெறவே என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும் அன்றே அநுக்கிரகர் ஆம். 9 மண்கடினமாய்த் தரிக்கும் வாரிகுளிர்ந்தே பதம் ஆம் ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் - வண்கால் பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. 10 உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக் கள்ளம்மிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் - மெள்ளவே ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம் ஆசைதரும் ஐம்புலனே ஆம். 11 ஞானேந் திரியங்கள் நன்றாய்க் உரைக்கக்கேள் ஊனம் மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம் சத்தாதியை அறியும் தானம் செவிதோல்கண் அத்தாலு மூக்கு என்று அறி. 12 வானிடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை ஈனமிகும் தோல்கால் இடமாக - ஊனப் பரிசம் தனை அறியும் பார்வையில்கண் அங்கி விரவி உருவம் காணுமே. 13 நன்றாக நீர் இடமாக நாஇரதம் தான் அறியும் பொன்றா மணம்மூக்கும் பூ இடமா - நின்று அறியும் என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை வென்றார் சென்றார் இன்ப வீடு. 14 கண்நுதல் நூல் ஓதியிடும் கன்மேந்திரியங்கள் எண்ணும் வசனாதிக்கு இடமாக - நண்ணியிடும் வாக்குப் பாதம்பாணி மன்னு குதம் உபத்த மாக்கருதும் நாளும் அது. 15 |