http://www.chennailibrary.com


பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
இயற்றிய
அழகர் கிள்ளைவிடு தூது

காப்பு
வெண்பா

தெள்ளு தமிழ் அழகர் சீபதிவாழ் வார்மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே - பிள்ளைக்
குருகுஊரத் தானேசங்கு ஊர்கமுகில் ஏறும்
குருகூர் அத்தான் நேசம் கூர்.

நூல்
கிளியின் சிறப்புகள்

1       கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
        நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு - சீர்கொண்ட

2      வையம் படைக்கும் மதனையும் மேல் கொண்டு இன்பம்
        செய்யுங் கிளியரசே செப்பக்கேள் - வையம்எலாம்

3      வேளாண்மை என்னும் விளைவுக்கு நின்வார்த்தை
        கேளாதவர் ஆர்காண் கிள்ளையே - நாளும்

4      மலைத்திடும் மாரன் ஒற்றை வண்டிலும் இல்லாமல்
        செலுத்திய கால்தேரை முழுத்தேராய்ப் - பெலத்து இழுத்துக்

5      கொண்டுதிரி பச்சைக் குதிராய் உனக்கு எதிரோ
        பண்டுதிரி வெய்யோன் பரிஏழும் - கண்ட

6      செகமுழுதும் நீ ஞானதீபமும் நீ என்று
        சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் - வகைவகையாய்

7      எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்
        ஐவண்ணத்துள்ளே அடங்குமே - மெய்வண்ணம்

8      பார்க்கும்பொழுதில் உனைப் பார்ப்பதி என்பார் என்றோ
        மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் - நாக்குத்

9      தடுமாறுவோரை எல்லாம் தள்ளுவரே உன்னை
        விடுவார் ஒருவர் உண்டோ விள்ளாய் - அடுபோர்

10     மறம்தரு சீவகனார் மங்கையரில் தத்தை
        சிறந்ததுநின் பேர்படைத்த சீரே - பிறந்தவர்

11     ஆரும் பறவைகளுக்கு அச்சுதன் பேரும் சிவன்தன்
        பேரும் பகர்ந்தால் பிழைஅன்றோ - நேர்பெறு வி

12     வேகி ஒருகூடு விட்டு மறு கூடுஅடையும்
        யோகி உனக்கு உவமை உண்டோ காண் - நீகீரம்

13     ஆகையால் ஆடை உனக்கு உண்டே பாடகமும்
        நீ கொள்வாய் கால் ஆழி நீங்காயே - ஏகாத

14     கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே
        அற்புடைய பெண்கொடி நீ ஆகாயோ - பொற்புடையோர்

15     துன்னிய சாயுச்யம் சுகரூபம் ஆகையால்
        அன்னது நின்சொரூபம் அல்லவோ - வன்னி

16     பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ
        உருசித்த உன்எச்சில் உண்பார் - துரிசு அற்றோர்

17     இன்சொல்லைக் கற்பார் எவர்சொல்லும் நீகற்பாய்
        உன்சொல்லைக் கற்கவல்லார் உண்டோ காண் - நின்போலத்

18     தள்ளரிய யோகங்கள் சாதியாதே பச்சைப்
        பிள்ளையாய் வாழும் பெரியோர்யார் - உள்உணர்ந்த

19     மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டம்அறப்
        பாலனத்தாலே பசி தீர்ப்பாய் - மேல் இனத்தோர்

20     நட்டார் எனினும் நடந்துவரும் பூசைதனை
        விட்டார் முகத்தில் விழித்திடாய் - வெட்டும் இரு

21     வாள்அனைய கண்ணார் வளர்க்க வளர்வாய் உறவில்
        லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய் - கேளாய்

22    இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
        திருவடிகள் வீறுஎல்லாம் சேர்வாய் - குருவாய்ச்




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/mis/azhagarviduthoothu.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.