http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
இயற்றிய
அழகர் கிள்ளைவிடு தூது

... தொடர்ச்சி ...

23    செப தேசிகர்க்கு எல்லாம் தென்அரங்கர் நாமம்
        உபதேசமாக உரைப்பாய் - இபமுலையார்

24    சித்தம் களிகூரச் செவ்விதழில் ஆடவர்போல்
        முத்தம் கொடுக்க முகம் கோணாய் - நித்தம் அவர்

25    செவ்விதழ்உன் மூக்கால் சிவந்ததோ உன்மூக்கில்
        அவ்விதழின் சிவப்பு உண்டானதோ - செவ்வி இழந்து


26    அண்டருக்குத் தோற்றான் அடல்வேள் ஆநானைநீ
        கொண்டு இழுத்தால் ஆகும் குறைஉண்டோ - உண்டாக்கி

27    ஆயுவை நீட்ட அருந்தவத்தோர் பூரகம்செய்
        வாயுவைஉன் பின்னே வரவழைப்பாய் - தேயசு ஒளிர்

28    மைப்பிடிக்கும் வேல்கண் மலர்மாதும் சங்கரியும்
        கைப்பிடிக்க நீ வங்கணம் பிடித்தாய் - மெய்ப்பிடிக்கும்

29    பச்சை நிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கும் மூன்றனக்கும்
        இச்சைபெற வந்தவிதம் எந்தவிதம் - மெச்சும்

30    குருகே உன் நாக்குத்தான் கூழை நாக்கு ஆனது
        அரி கீர்த்தனத்தினால் அன்றோ - தெரிவையர்கள்

31    ஆர்த்த விரல் உன்முகம் ஒப்பாகையாலே கையைப்
        பார்த்து முகம்அதனைப் பார்என்பார் - சீர்த்திக்

32    கிரிகையிலே காணுங்கால் கிள்ளை அடையாத
        பெரியதனம் வீண்அன்றோ பேசாய் - தெரியும்கால்

33    தேறுகனி காவேரி சிந்து கோதாவிரியும்
        வீறுபெறுமே நீ விரும்பினால் - கூறில் அனம்

34    உன்னுடைய ஊண்அன்றோ ஊதப் பறந்துபோம்
        சின்ன வடிவன்றோ செழும்குயிலும் - என்னே

35    முதுவண்டு இனந்தான் முடிச்சு அவிழ்த்தாலும்
        மதுஉண்டாற் பின்னை வாயுண்டோ - எதிரும்

36    கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
        வரும் புறாவுக்கும் ஒரு வாயோ - விரும்புமயில்

37    உற்ற பிணிமுகமே உன்போல் சுகரூபம்
        பெற்ற பறவை பிறவுண்டோ - கற்று அறியும்

38    கல்வியும் கேள்வியும் நீ கைக்கொண்டாய் சாரிகைக்குள்
        செல்வம் அதில் அள்ளித் தெளித்தாயோ - சொல் வேதம்

39    என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்வேள்
        தன் பரியே உனக்குச் சாரதியார் - வன்போரில்

40    மேவுஞ் சிவன் விழியால் வேள்கருகி நாண்கருகிக்
        கூவும் பெரிய குயில்கருகிப் - பாவம்போல்

41    நின்று மறுப்பாடுநாள் நீதான நடுப்படையில்
        சென்று மறுப்படாதே வந்தாய் - என்று மாக்

42    காய்க்கும் கனிஅல்லால் காய்பூ என்றால் நாக்கும்
        மூக்கு மறுப்பாய் முகம் பாராய் - ஆக்கம்

43    வரையாமல் நன்மை வரத்தினை நல்கும்
        அரிதாளை நீ விட்டு அகலாய் - இருகை

44    உனக்குஇல்லை உன்சிறகு இரண்டும் எனக்கில்லை
        எனக்கும் உனக்கும் பேதம் ஈதே - மனைக்குள்

45    இதமாய் மனிதருடையனே பழகுவாய் அன்பு
        அதனால் முறையிட்டு அழைப்பாய் - மது உண்டு

46    அளிப்பிள்ளை வாய்குழறும் ஆம்பரத்தில்ரேறிக்
        களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் - கிளிப்பிள்ளை

47    சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
        பின் அத்தைப் போலும் ஒரு பேறுண்டோ - அன்னம் இன்றிப்




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/mis/azhagarviduthoothu2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs