http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



அண்ணாமலை ரெட்டியார்
இயற்றிய
காவடிச் சிந்து

... தொடர்ச்சி ...

சீதள முகிற்குவமை கூறும் - நிறச்
     சிந்துரங்கள் சிந்துமதத் தாறும், - உயிர்ச்
சித்திரம் நிகர்ந்தமின்னார் குத்துமுலைக் குங்குமச்செஞ்
     சேறும் காதம் நாறும்.

நித்தநித்த மும்கணவ ரோடும் - காம
     லீலையில் பிணங்கிமனம் வாடும் - கரு
நீலவிழி யார்வெறுத்த கோலமணி மாலைரத்னம்
     நெருங்கும் எந்த மருங்கும்.

கத்துகட லொத்தகடை வீதி - முன்பு
     கட்டுதர ளப்பந்தலின் சோதி - எங்கும்
காட்டுவதால் ஈரிரண்டு கோட்டுமத யானையிற்பல்
     களிறும் நிறம் வெளிரும்;

முத்தமிழ்சேர் வித்வசனக் கூட்டம் - கலை
     முற்றிலும் உணர்ந்திடும் கொண் டாட்டம் - நெஞ்சில்
முன்னுகின்ற போதுதொறும் தென் மலையில் மேவுகுறு
     முனிக்கும் அச்சம் சனிக்கும்.

எத்திசையும் போற்றமரர் ஊரும், - அதில்
     இந்திரன் கொலுவிருக்கும் சீரும், - மெச்சும்
இந்தநக ரம்தனை அடைந்தவர்க் கதுவும்வெறுத்
     திருக்கும்; அரு வருக்கும்.

துள்ளிஎழும் வெள்ளையலை அடங்கும் - படி
     சுற்றிலும் வளைந்த அகழ்க் கிடங்கும் - பல
சொன்னமலை போல்மதிலும் மின்னுவதி னாலேபுகழ்
     தோன்றும் லோகம் மூன்றும்.

கள்ளிவிழ் கடப்பமலர் வாகன், - குறக்
     கன்னியை அணைக்கும் அதி மோகன் - வளர்
கழுகுமலை நகரின்வள முழுமையும்என் நாவில்அடங்
     காதே! மட மாதே.


4. கோயில் வளம்

சென்னி குளநகர் வாசன், - தமிழ்
          தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
     செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
          தீரன்; அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
          வள்ளி பதம்பணி நேசன் - உரை
     வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
          வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
          கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
     கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
          குலவும் புவி பலவும்.

நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
          நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
     நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
          நோக்கும் படி தாக்கும்.

சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
          தாவி வருகின்ற கும்பம் - எனும்
     சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
          தாங்கும்; உயர்ந் தோங்கும்.

உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
          உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
     உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
          உறங்கும்; மின்னிக் கறங்கும்.

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
          அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
     அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
          அடைக்கும்; அண்டம் உடைக்கும்.

கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
          காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
     கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
          காண்பார்; இன்பம் பூண்பார்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/mis/kavadichindhu2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs