|
News | |
-TN:CPI(M) demands CB-CID probe over party functionary murder-Rajya Sabha revokes suspension of four Samajwadi Party MPs -India's ballistic missile defence shield test fails -SC rejects Satyam founder's bail plea -Lapanag to meet Chidambaram to discuss border firing -BJP picks Bimla Kashyap as Rajya Sabha nominee from Himachal -Thai PM rejects protesters' call for new elections -Rebel group bombs Nigerian government building -SBI to open 1000 semi urban, rural area branches -SC to consider recall of SIT probe against Modi |
-Mayawati presented garland made of hundreds of Rs. 1000 notes-RCom touches 100 mn subscriber base -Pradip Overseas IPO subscribed 14 times -Inflation rises to 9.89% in February -Hussey narrows gap with Dhoni in top ODI rankings -Special trains for IPL matches at Eden Gardens -Government to rake in Rs200 crore tax from IPL -Action against CAB for ignoring fire safety norms |
![]() |
| ||||||||||||||
நந்திக் கலம்பகம் இந் நூல் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பெற்றதாகும். இது ஏனைய கலம்பங்களைப் போல் அல்லாது ஒரு வரலாற்று நூலாக விளங்குகிறது. இந் நூலை பாடியவர் யாரென்று தெரியவில்லை. இந் நூலினைப் பாடிய காலம் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகும். ஆகவே இதுவே கலம்பகங்களுக்கெல்லாம் முதன்மையானது எனக் கொள்ளலாம். தற்சிறப்புப் பாயிரம்
கடவுள் வாழ்த்து
பிள்ளையார்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வியோடும் விடைப்பாகன் அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிதகன்று தம்மின் முத்தம் கொளநோக்கிச் சற்றே நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி மலர்த்தாள் எம் சென்னி மிசையிற் புனைவாமே. சிவபெருமான்
தரவு கொச்சகக் கலிப்பா
பொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைத்த நெருப்புருவம் வெளியாக நீறணிந்த வரை மார்ப! பருப்புரசை மதயானைப் பல்லவர்கோன் நந்திக்குத் திருப்பெருக அருளுகநின் செழுமலர்ச்சே வடிதொழவே. திருமால்
வஞ்சித்துறை
கரியின் முனம்வரும் அரியின் மலர்பதம் உருகி நினைபவர் பெருமை பெறுவரே. கலைமகள் முதலிய கடவுளர்கள்
நேரிசை வெண்பா
திருவாணி யைக்குருவைத் தென்முனியைப் போற்றத் தருவாணி ஆண்மை இறை சாரும்-உருவாணி ஐங்கரனைச் சங்கரனை ஆறுமுகத் தோன் உமையைப் பங்கில்வைப் பார்க்கில்லை பவம். நூல்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தரவு
ஒண்சுடராய் ஒளிஎன்னும் ஓருஉருவம் மூன்றுருவ மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ செவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திருமேனி; அருவரையின் அகங்குழைய அனல் அம்பு தெரிந்தவுணர் பொருமதில்கள் அவைமூன்றும் பொன்றுவித்த புனிதற்கும் குருமணிசேர் அணிமுறுவற் குலக்கங்கை நதிபாயத் திருமுடியைக் கொடுத்தாற்கும் செம்பாகம் திறம்பிற்றே; இலகொளிய மூவிலைவேல் இறைவாநின் னியற்கயிலைக் குலகிரியும் அருமறையும் குளிர்விசும்பும் வறிதாக அலைகதிர்வேற் படைநந்தி அவனிநா ராயணன் இவ் வுலகுடையான் திருமுடியும் உள்ளமுமே உவந்தனையே. அராகம்
எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை; அருவரை அடிஎழ முடுகிய அவுணனது ஒருபது முடிஇற ஒருவிரல் நிறுவினை. தாழிசை
வாசிகையின் ஊடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே பாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம் ஆயிரவாய் கருங்கச்சை அழல் உமிழ அசைத்தனையே; சோர்மதத்த வார்குருதி சோனைநீ ரெனத்துளிப்ப ஏர்மதத்த கரிஉரிவை ஏகாச மிட்டனையே. திசைநடுங்கத் தோன்றிற்று நீ உண்ட திறல்நஞ்சம். உயிர்நடுங்கத் தோன்றிற்று நீ உதைத்த வெங்கூற்றம். |
|
|
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |