சென்னைநூலகம்.காம் உறுப்பினராக | ||||||||||
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...
வெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்: (Axis Bank | Anna Salai, Chennai | SB Account | A/c Name : G.Chandrasekaran | A/c No.: 168010100311793 | IFS Code: UTIB0000168 | SWIFT Code : AXISINBB168) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
சென்னை நூலகம் புரவலர் திட்டம் |
எமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தமிழ் நூலகம், அரசு இணையதளமோ, அல்லது அரசு உதவி பெறும் இணையதளமோ அல்ல. தனிமனித உழைப்பின் மூலம் உருவாகி கடந்த 13 ஆண்டுகளாக நன்முறையில் வளர்ந்து வருகிறது. எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எமது தளத்தின் சேவைகளை மேலும் செம்மையாக்க அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே ‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ துவங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2000/- வழங்கி புரவலராகச் சேரலாம். புரவலர்கள் வழங்கும் தொகை எமது ‘கௌதம் இணைய சேவைகள்’ வங்கிக்கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும் தமிழ் இணைய நூலக வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் இணைய நூலக புரவலர் என்பதற்கான கடிதம் தங்களுக்கு வழங்கப்படும். புரவலர்கள் பெயர், சேர்ந்த தேதி, முதிர்வு தேதி (1 ஆண்டு), தொகை ஆகியவை இதே பக்கத்தில் கீழே வெளியிடப்படும். புரவலராக 1 ஆண்டு இருப்பது கட்டாயம். அதற்கு பின்பாக விலக விரும்பினால் அவர்கள் செலுத்திய தொகை ஒரு வார அவகாசத்தில் திருப்பி அளிக்கப்படும். இத்திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளோரும் சேரலாம். புரவலராக இணைபவர்கள் உறுப்பினருக்கான அனைத்து சலுகைகளையும் பெறுவதோடு, ஓராண்டிற்குப் பிறகு தாங்கள் செலுத்திய தொகையையும் திரும்பப் பெறலாம். எனவே விரைந்து புரவலராக இணைவீர்! (இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை சொடுக்கவும்.)
வெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். வங்கி விவரம்: G.Chandrasekaran, ICICI Bank Ltd, Anna Nagar (West) Extension, Chennai A/c No. : 039501003171 IFSC Code: ICIC0000395 SWIFT Code: ICICINBBNRI
|
மொத்த உறுப்பினர்கள் - 401 | புதிய உறுப்பினர்: Mahasathiyaraj (13-02-2019) |
புதிய வெளியீடு! |
மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை
மாணிக்கவாசகர் மதுரைக்கு
அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர்
என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில்
தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப்
பாடுவது போல் பாடியுள்ளார்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய் விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய். 1 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். 2 அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். 3 ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து) எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். 4 மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம் போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று) ஓலமிடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். 5 மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 6 அன்னே இவையும் சிலவோ பல அமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 7 கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பவாய். 8 முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். 9 போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 10 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல் செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 11 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். 12 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 13 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14 சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 15 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 16 செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 17 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று) அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள் எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20 . |
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) லா.ச.ராமாமிருதம் : அபிதா சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை ரமணிசந்திரன் சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் மகாத்மா காந்தி : சத்திய சோதனை ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி மாயாவி : மதுராந்தகியின் காதல் வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா ஆன்மீகம் : தினசரி தியானம் |
|