முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம்
இறை வணக்கம்
தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப் பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின் துதித்து ஈண்டற நெறிச் சாரத்தைத் தோன்ற விரிப்பன் சுருக்காய் விரைந்து. 1 நூல் பாயிரம்
மறவுரையும் காமத்துரையும் மயங்கிப் பிறவுரையும் மல்கிய ஞாலத் - தறவுரை கேட்கும் திருவுடையாரே பிறவியை நீக்கும் திருவுடையார். 2 ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடன்
உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பின்றி நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல் வான்மையின் மிக்கார் வழக்கு. 3 அறம் கொல்வோன் இயல்பு
அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலன்கள் மாட்டும் இறங்காது இருசார் பொருளும் - துறங்தடங்கி மன்னுயிர்க்கு உயந்துபோம் வாயில் உரைப்பானேல் பன்னுதற்குப் பாற்பட்டான். 4 அறம் கூறத் தகுதியற்றவன் குணம்
பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி வெள்ளைகளிவிடமன் வேட்கையான் - தெள்ளிப் புரைக்கப் பொருளுணர்வான் என்று இவரே நூலை உரைத்தற்குரிமையிலாதார். 5 அறம் கேட்பதற்கு உரியவர் குணம்
தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான் வடுமாற்றம் அஞ்சித் தற்காப்பான் - படுமாற்றால் ஒப்புரவு செய்தாண்டுறுதிச் சொல்சேர்பவன் தக்கான் தரும் உரைக்கு. 6 அறநூலைக் கேட்கத் தகுதியற்றவர்கள்
தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன் புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை என்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு ஆன்றவர்கள் கூறார் அறம். 7 நல்லற இயல்பு
வினை உயிர்கட்கு வீடு இன்ன விளக்கித் தினையனைத்தும் தீமையின்றாகி - நினையுங்கால் புல்லறத்தைத் தேய்த்துலகினோடும் பொருந்துவதாம் நல்லறத்தை நாட்டு மிடத்து. 8 அறத்தின் போலி
ஆவட்டை போன்றறியாதாரை மயக்குறுத்திப் பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க் - காவிட்டு இருமைக்கும் ஏமம் பயவாதனவே தருமத்துப் போலிகல் தாம். 9 அறவுரையின் பயன்
புல்ல உரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல் நல்வர் இவரென்று நட்பாடல் - சொல்லின் அறங்கேள்வியால் ஆம்பயன் என்று உரைப்பர் மறங்கேள்வி மாற்றியவர். 10 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |