|
News | |
-Gas pipe link to TN from KG basin by 2012-Karunanidhi flays opposition leaders for criticising budget -Karunanidhi clarifies on lower revenue receipts -Police probing inputs on LTTE cadre entering TN -Sahitya Akademi translating works of Subramania Bharathiar -Jayalalithaa slams fancy announcements -TN: New department for disabled well received -Villupuram-Mayiladuthurai BG line cleared for passenger traffic -State will never give up its rights on Mullaperiyar dam: Karunanidhi -Sugarcane procurement price to go up to Rs.2,000 |
-Cabinet gives approval for ESI benefits to unorganised workers-BJP opposes serving of beef during C'wealth Games -Girija Prasad Koirala dead -Strong earthquake jolts Papua New Guinea coast -Pranab launches IndiaFirst Life Insurance -Dhoni likely to rejoin CSK for Mumbai match -New IPL teams likely to be named on today -Five special teams set up to probe bomb on Bangalore plane incident |
![]() |
| ||||||||||||||
அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் (இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களால் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது.) 1. நூற் சிறப்பு எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி? 1 மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ? ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன்? - பேணிப்பின் செவ்வேல் விநோதன் திருப்புகழ்சிந் தித்திருப்பார்க் கெவ்வேலை வேண்டும் இனி? 2 சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; - நேராக அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல் எந்தப் புகழோது வீர்? 3 அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக் கருணையினாற் பாடுங் கவிபோற் - பிரியமுற வேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில் ஏறுமோ? என்னே இனி? 4 ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி தேனனைய சொல்லான் திருப்புகழை - யானினைந்து போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ் சாத்திடவும் ஓதிடவும் தா. 5 2. திருப்புகழ்ச் சிரவணத்தால் வேதார்த்தாதி அனைத்து அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்றது வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், - ஆதி குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந் திருப்புகழைக் கேளீர் தினம். 6 3. நூற் பயன் ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக் கூறினார்க் காமேஇக் கூறு. 7 ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன் ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப் பாரில் வழுத்தினோர் பால். 8 4. அன்பர் வினவ ஆண்டவன் விடையருளியதாக மேலையதை வற்புறுத்தியது பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்; உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும் திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம். 9 5. அங்ஙனம் அருளக் கேட்ட அன்பர் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகத் திருப்புகழ் படிப்போர் தீரங் கூறியது திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே. 10
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |