ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்

அருளிய

தசகாரியம்

அளவிலா அண்ட மாயை ஆனகன் மமாண வத்தோ(டு)
அளவிலாச் சீவன் உற்ற அபக்குவம் அறிந்த சீவன்
அளவிலாப் பிறவி நீத்தே அளவிலா அருளைச் சார்ந்தே
அளவிலா அரனைப் பெற்றே அளவிலாச் சுகமா ரும்மே. 1

பூறுவ வினையே கன்மம் புகழான பஞ்ச சத்தி
பேறுகொள் நவபே தங்கள் பிறவிலா அக்கரங்கள்
மாறுகொள் ஆன்ம ஞானம் வகைவகை தத்து வங்கள்
ஈறிலாத் தனுக்க ளாதி இவை இன்பத் துன்ப மூலம். 2

பக்குவம் தன்ம மூலம் பரிபாகம் பாதம் ஒப்புச்
சற்குணக் குறவன் சாற்றும் சத்தியச் சத்த மெல்லாம்
இக்கிர மத்தினாலே இடரிலா(து) அறிந்த சீவன்
அக்கணம் பிரவி நீத்தே அளவிலாச் சுகமா ரும்மே. 3

அழிபொருளும் பொய்ப்பொருளும் அளவிலவே ஆதலினால்
கழிபொருளாஉக் கைவிடுவாய் ஒருக்காலும் கருத்தே
அழிபொருளில் அடங்காத ஐந்து பெரும் பொருள்களையே
கழிபொருளாய்க் கருதாமல் எப்பொழுதுங் கருதாயே. 4

மாயையால் அறிவதெல்லாம் மட்டிடாப் பாச ஞானம்
ஓய்விலா மலங்க ளெல்லாம் ஒழித்தறி வோடி ருத்த
லேயிருட் பசுஞானந்தான் இடர்ப்படும் உயிரி ருட்டே
போயிட இரக்கம் வைத்த பொருள்சிவ ஞான மாமே. 5

அபுத்தியால் புத்தி தன்னால் அகச்சரி யாதி நான்கால்
சுபுத்தியோ(டு) அந்த நான்கால் தோன்றுமே சிவதன் மங்கள்
உபத்திர மின்றிப் பத்தும் ஒன்றன்பின் ஒன்று தோன்றும்
சுபத்தினான் மலங்க ளெல்லாம் துடைத்துயிர் தோன்று மன்றே. 6

மெய்ப் பொருளிற் பொய்ப் பொருளின் மேவாத
அழிபொருளில் விருப்ப மற்றால்
அப்பொழுதே உயிருண்டாம் அதன்பின்னே
குருவுண்டாம் ஆன பின்னே
ஒப்பரிய நூலுண்டாம் உபதேசம்
பலவுண்டாம் உபதேசத்துள்
செப்பரிய தசகாரி யங்களென்னும்
அஞ்சவத்தை தெளிவுண் டாமே. 7

செயிரறு சீவன் உண்டேல் தெளிந்தமுப் பொருளுந் தேரும்
உயிர்மலங் கன்மங் கர்த்தா உபாதானம் ஐந்தும் மெய்யே
பெயருள முயற்கொம் பாதி பெயர்ப்பொருள் இல்லாப் பொய்யே
துயருறு சரீர மாதி தோன்றிநின் றழிந்து போமே. 8

ஒப்பிலா நிருவி காரம் ஒருவழி குணங்க லப்புச்
செப்பிய சுதந்தி ரஞ்சிற் சீர்முதல் சமானஞ் சேரா
தப்பிலா விபுவி நாசம் சமர்த்ததை அனாதி சத்தி
அப்பிர மேயம் மற்றும் ஐந்திற்குஞ் சமான மாமே. 9

ஆரிருள் ஆண வத்தோ(டு) அருங்கன்மம் ஆன மாயை
ஆரிருள் கேவ லாதி ஆரொளி ஞானம் மூன்றே
சாருயிர் சார்ப தார்த்தஞ் சார்ந்தமுத் தொழில்கள் எல்லாம்
சாருயிர் தனக்குக் கேடு சாரவே பண்ணுஞ் சார்பே. 10

அறிபவன் அறிப்பானே அவர்களின் அறிவுத் தாமே
அறிபொருட் பகுதி தாமே அறிதராப் பொருள் தாமே
அறிபொருட் கருவி தாமே அறிபய னாதி தம்மை
அறிவதே அறிவு செய்தி அதற்க்கும் இவ் வாற தாமே. 11

தெருளிரவி தெருளுடைய சிறிதேனும்
சிலகாணாச் சிறுமைக் கண்ணே
குருடிர வோ(டு) இருள்விளக்கீர் கொளலின்மை
கொடையின்மை கொடைமாற் றாமை
மருளிவைபோற் பலவுளவே மருண்டாலும்
இருண்டுருவை வலியக் காணும்
இருளிலதுக் காகுமிதே இருளுளதுக்(கு)
ஆகாதென் றியம்பும் நூலே. 12

குருடிரா இருட்டுத் தம்மால் கோலினால் தீர்த்த மூன்றால்
மருடரா விழ்ப்புத் தன்னால் மருடரும் இமைப்புத் தன்னால்
இருடரா இரவி தன்னால் எழுந்ததம் ஒளியால் வேறால்
தெருடராப் பருதி தன்னைத் தேடியுங் கண்கா ணாதே. 13

தத்துவத் தொழிலைக் காண்டல் சடமென்ற றன்னை நீக்கல்
அத்தினா னான்மே லென்ற லருளினா னான்மே லென்றல்
பத்தனா னருளாய்ச் செய்தி பண்ணவே யெண்ணி நீக்கிச்
சித்தரு ளதுவாய்ப் போதல் சிவத்தினைச் சேர்த றேரே. 14

அருளினா னான்மே லென்ற லதுவொழிற் தெண்ணி நீக்கல்
அருளினா லருளாய்ப் போதல் வகைமூன்று முன்பே வந்த
அருளிலை நான்மே லென்ற லருளினா னான்மே லென்றல்
மருளினா லெண்ணல் போதல் மகிழ்சிவஞ் சேர்தல் வந்த. 15

தன்னைத் தலைவ னெனக்கருத றலைமை யருளே யெனக்கருதல்
பின்னர்ப் புதிதா யருட்செயலைப் பெறவே யெண்ண லதைநீக்கி
மன்னித் திருவ ருளாய்ப்போதன் மகிழும் பரசிவ னைச்சேர்தல்
துன்னிக் கருது மவத்தையெனச் சொல்லுஞ் சுருதி சிவாகமமே. 16

அயர்வறுத் திட்ட ஞானி யகமறுத் திடலா லந்த
உயிருடற் றெழிலி னோடு முயிருட லூழை மற்றோர்
செயிரறுத் திடும்பொ ருட்டுச் சிவன்றன தாகக் கொள்வன்
மயர்வறு முத்தி ரண்டை மாற்றுவ னொன்றே யென்றும். 17

முதற்பதி யரனே யைந்து முன்னத்து விதமி ரண்டே
இதற்பின்னே யனுமா னத்து மெண்ணிலா வுயிர்கண் மூன்றே
அதற்பின்னே யவத்தை நான்கே யகமறுத் திடலே யைந்தே
செகற்பதி பிரித்த லாறே தெரிவித்த லுயிரை யேழே. 18

மறப்பினை நீக்கி ஞான வாரியை நினைத்த லெட்டே
சிறப்புடை யுபாயந் தம்மாற் றெளிவித்த லுயிரை யொன்பான்
அறுத்திடன் மலங்கள் பத்தே யழுந்தலே சிவத்து ளொன்றே
திறப்பணி கௌலி ரண்டே சிவஞான போதஞ் சித்தி. 19

பல்கலையு மொண்ணரிதும் பார்க்கிலருஞ் செறிந்திடுமே
மலநிலையால் வருமெண்ணே மருவியவுங் காட்டிடுமே
சொலவரிதாம் பன்னிறமுந் தன்னறிவுஞ் சொற்புகலும்
பிலமுளபோற றீங்கண்டம் பேர்முதலாப் பன்னிரண்டே. 20

இரண்டினி லைந்தி லாறி லேழினி லெட்டுத் தன்னில்
திரண்டிரண் டொன்ற தான திகழொன்பான் பத்துத் தன்னில்
இரண்டிலாப் பேறு தன்னி லிருத்திய பத்தோ டொன்றில்
திரண்டெழு முபதே சங்கன் சிவஞான போதஞ் சித்தி. 21

மூன்றுநான் கேழு மூன்றே முடிந்தபின் னிரண்டி ரண்டே
மூன்றுநான் மூன்றி னன்றாய் முடிந்தபின் னிரண்டி ரண்டே
யேன்றநான் கீறு தாமே யிவையீரா றிலக்கத் துள்ளே
யேன்றமுப் பானென் பானை யெனக்கர னிரங்கி னானே. 22

மண்ணொடு செவியே சத்தம் வாக்காதி யையைந் தாகும்
எண்ணிய மனமே யாதி யீரிரண் டிவைநா லாறே
கண்ணிய கால மாதி கருதிடி லேழுங் காணே
திண்ணிய சுத்த வித்தை யாதியா யைந்துந் தேரே. 23

இந்திரி யங்க டன்மாத் திரைகணா டிகள்வா யுக்கள்
ஒந்துபப் பத்துப் பூத மோரைந்து மவையை யைந்தே
ஐந்துசுத் தம்மேழ் வித்தை யாங்கார மூன்று மூன்றா
வந்திடுங் குணங்க ணான்காம் வாக்கந்தக் கரண நான்கே. 24

ஸ்ரீ சுவாமிநாத தேசிகர் தசகாரியம் முற்றிற்று