http://www.chennailibrary.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். சிறந்த கருத்துக்களை அனுப்பும் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு.
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும்.




21. ஒரு சோதனை

     மரக்கலத்தில் தீப்பந்தங்கள் ஏற்றிப் பொருத்தப் பெற்றன. இருட்டிவிட்டதை உணர்வுக்குக் கொணர்வதுபோல் அந்தப் பந்தங்களின் ஒளி இருளின் செறிவைக் காட்டலாயிற்று. எங்கோ தொலைவில் அதே போன்ற ஒளியின் தூரத்துப் புள்ளிகள் தென்படத் தொடங்கின.

     "வேறு மரக்கலங்களும் தென்படுகின்றன. இனி பயமில்லாமல் போகலாம்" என்றான் முடிநாகன்.

     "அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?" என்று பதில் வந்தது இளையபாண்டியனிடமிருந்து.

     "கடற்பகுதியின் இந்த இடங்களில் முந்நீர்க் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்கள் மிகுதியாயிருப்பதாகச் சொல்வார்கள். தனிக் கப்பல்கள் சிக்கிக் கொண்டால் கடம்பர்கள் துணிவாகக் கொள்ளைக்கு வருவார்கள். கூட்டம் கூட்டமாக மரக்கலங்கள் செல்லும்போது அவர்கள் தொல்லை இராது" என்ற முடிநாகனின் பேச்சை இடைமறித்து,

     "உன் கண்ணில் இப்போது தென்படும் மரக்கலங்களின் ஒளித் தோற்றத்தைக் கொண்டு மட்டுமே அவை நமக்கு வேண்டியவர்களின் மரக்கலங்கள் என்றோ நம்மைப்போல் யாத்ரீகர்களின் மரக்கலங்கள் என்றோ எப்படிக் கொள்ள முடியும்?" என்று கேட்டான் சாரகுமாரன். அதை மறுத்துச் சொல்லவும் முடிநாகனால் இயலவில்லை. இளையபாண்டியனே மேலும் கூறத் தொடங்கினான். "நான் சொல்வதைக் கவனமாகக் கேள் முடிநாகா! தென்பழந்தீவுகள் பலவானாலும் - தீவுகளில் வாழ்பவர்களும், தீவுகளை ஆள்பவர்களும் கடற் கொலைஞர்களே. இனிவரப்போகும் எல்லாத் தீவுகளுக்கும் முன்வாயில் போன்ற இந்த எயினர் தீவிலேயே நாம் சந்தேகத்துக்கு ஆளாகிவிட்டோம். ஆயினும் தப்பி வந்தாயிற்று. நாம் அரச குடும்பத்துப் பிரதிநிதிகளா, அல்லது வெறும் யாத்திரிகர்களா? என்று சந்தேகத்துடனேதான் எயினர் தீவின் தலைவன் நமக்கு விடைகொடுத்திருக்கிறான். இதை நினைவில் வைத்துக் கொண்டு பயணம் செய்தால்தான் நாம் நம்முடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிப் போக முடியும். ஆகவே இனி நாம் ஒரு காரியம் செய்ய வேண்டும்..."

     "என்ன செய்ய வேண்டும் என்றுதான் கூறுங்களேன்..."

     "நம்மை யாத்திரிகர்களாவே நிரூபிக்க வேண்டும். எப்படி யார் நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும் நமக்குக் கோபம் வரக்கூடாது. கோபம் வந்தால் தன்மான உணர்வு பெருகும். தன்மான உணர்வு பெருகினால் நம்மை வீரமரபினராக நிரூபித்துக் கொள்ளத் தோன்றும். போரிடும் உணர்வு வெளிப்படுமானால் 'உயர்ந்த அரசகுடும்பத்தைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் இவர்கள்' என்று தெளிவாக நம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். நாம் அதற்கு இடங்கொடுக்கக் கூடாது. ஆனால் அப்படிக் கோபதாபங்களுக்கு இடங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் தான் இனி நிறைய வரும் என்று தோன்றுகிறது. வீரத்தையும் காட்டக்கூடாது. செல்வத்தையும் காட்டக்கூடாது. நம்மிடமிருக்கும் விலையுயர்ந்த கபாடத்து முத்துக்களை வலிய எயினனிடம் வழங்கியதுபோல் இனியும் தொடர்ந்து வழங்கிக் கொண்டே போகக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும்கூட ஒரு நிலைமைக்கு மேல் நம்மைச் சந்தேகத்துக்குரியவர்களாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும். யாத்திரிகர்களிடம் எவ்வளவு முத்துக்கள் தான் இருக்க முடியும்?"

     "இதைத்தான் நான் முன்பே கூறியிருக்கிறேனே? 'யாத்திரிகர்கள்' என்ற போர்வைதான் நமக்குப் பாதுகாப்பானது. அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற நம்முடைய கபாடத்து முத்துக்களை அளிப்பது பயன்படுமானால் நாம் அதற்குத் தயங்குவானேன்?"

     "தயங்க வேண்டிய அவசியம் எயினர் தீவில் இறங்கிய வேளையில் நமக்கு இல்லை முடிநாகா! ஆனால் இனி அப்படித் தயங்கி ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் சந்தேகத்திற்கு ஆளாக வேண்டியதாக நேர்ந்துவிட்ட பின் தயக்கத்துக்குக் காரணமிருக்கிறது. நம்மை வழியனுப்பிய சுவட்டோடு எயினர் தலைவனே நாத கம்பீர ஆற்றின் முகத்துவார வழியே வேறிரண்டு கப்பல்களை அனுப்பி நம்மைச் சோதிக்க நேரிடலாம். அந்தச் சோதனையின் போது நாம் ஏமாறிவிடக்கூடாது என்பதுதான் என் கருத்து."



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram21.html


இலவச தமிழ் நூல்கள்
அகநானூறு
அகல் விளக்கு
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏலாதி
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மணி மாலை
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மணிபல்லவம்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளையாபதி
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்

எமது வலைதளங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்
சென்னை நூலகம் தேடல்
Custom Search
இலக்கிய தகவல்கள்
கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சமையல்அறை.காம்
அரிசி பாயசம்
அரிசி மாவு புட்டு
அரிசி மாவு முறுக்கு
ஆட்டுக்கால் மிளகு குழம்பு
ஆட்டுக்கறி வெண்டைக்காய் குழம்பு
ஆம்பூர் மட்டன் பிரியாணி
இட்லி
இட்லி உப்புமா
இட்லி பொடி
இடியாப்ப கிச்சடி
இடியாப்பம்
இறால் கிரேவி
இறால் வறுவல்
இனிப்பு சோமாஸ்
உப்புமா
உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி மசால்
உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு மசாலா
உருளைக்கிழங்கு வறுவல்
கடலைப்பருப்பு குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா
கத்தரிக்காய் தேங்காய் கூட்டு
கருப்பு கொண்டை கடலை சுண்டல்
களி உருண்டை
கறிவேப்பிலை சட்னி
கறிவேப்பிலை சாதம்
காய்கறி சாதம்
காய்கறி வடை
காளான் குருமா
காளான் பிரியாணி
காளிஃபிளவர் பட்டாணி மசாலா
காளிஃபிளவர் பொரியல்
கிட்னி கூட்டு
கிட்னி ஃபிரை
கீரை பொரியல்
கீரை வடை
குஸ்கா
கேரட் அல்வா
கேரட் கீர்
கேரட் சூப்
கேரட் பச்சடி
கேரட் பொரியல்
கொத்தமல்லி சட்னி
கொத்தமல்லி சட்னி-2
கொத்தவரங்காய் பொரியல்
கொத்து பரோட்டா
கொள்ளு சட்னி
கொள்ளு ரசம்
கோதுமை மாவு பிஸ்கட்
கோழிக்கறி குழம்பு
சாம்பார் பொடி
சிக்கன் கிரேவி
சிக்கன் பிரியாணி
சுறா மீன் புட்டு
சேப்பங்கிழங்கு வறுவல்
சேமியா கிச்சடி
சேமியா பாயசம்
சேனைக்கிழங்கு பொரியல்
சேனைக்கிழங்கு வறுவல்
சோள மாவு அல்வா
தக்காளி கொத்சு
தக்காளி சட்னி
தக்காளி சாதம்
தக்காளி சூப்
தக்காளி ரசம்
தேங்காய் சட்னி
தேங்காய் சாதம்
தேங்காய் பர்பி
தேங்காய்ப்பால் முறுக்கு
நண்டு வறுவல்
நிலக்கடலை சட்னி
நிலக்கடலை பக்கோடா
நெத்திலி தொக்கு
நெய் சாதம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் சாதம்
நெல்லிக்காய் பச்சடி
பச்சைப்பயிறு குழம்பு
பட்டாணி சூப்
பணியாரம்
பரங்கிக்காய் (சர்க்கரைப் பூசணி) பொரியல்
பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாத பொடி
பருப்பு சாதம்
பருப்பு சாம்பார்
பருப்பு ரசப் பொடி
பருப்பு ரசம்
பரோட்டா
பழ சாலட்
பஜ்ஜி
பாசிப்பருப்பு குழம்பு
பாசிப்பருப்பு பாயசம்
பால் கீர்
பால் பாயசம்
பீட்ரூட் அல்வா
பீட்ரூட் சூப்
பீட்ரூட் பச்சடி
பீட்ரூட் பொரியல்
புடலங்காய் கூட்டு
புடலங்காய் பச்சடி
புடலங்காய் பொரியல்
புளி குழம்பு
புளி சாதம்
பூசணிக்காய் பச்சடி
பூர்ண கொழுக்கட்டை
பூரி
பொட்டுக்கடலை உருண்டை
பொட்டுக்கடலை சட்னி
பொரி உருண்டை
போண்டா
மசால் வடை
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
மாங்காய் இனிப்பு தொக்கு
மாங்காய் சாதம்
மாம்பழ ஐஸ்கிரீம்
மீன் குழம்பு
முட்டை குழம்பு
முட்டை பொரியல்
முந்திரி பக்கோடா
முந்திரி பர்பி
முருங்கை சூப்
மெது வடை
மைதா கேக்
மோர் குழம்பு
ரவா கேசரி
ரவா தோசை
ரவா புட்டு
ரவா லட்டு
ராகி அவல் புட்டு
லஸ்ஸி
லெமன் லாலி பாப் சிக்கன்
வாழைக்காய் வறுவல்
வாழைப்பூ பக்கோடா
வாழைப்பூ பொரியல்
வெங்காய சட்னி
வெங்காய பக்கோடா
வெண்டைக்காய் புளி குழம்பு
வெண் பொங்கல்
ஜவ்வரிசி பாயசம்
ஜவ்வரிசி முறுக்கு
ஜவ்வரிசி வடகம்
ஜவ்வரிசி வற்றல்
தமிழ்திரைஉலகம்.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்