http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




3

... தொடர்ச்சி ...

     நகரின் தெருக்கள் எல்லாம் கோஷங்களாலும், தோரணங்களாலும், கூட்டங்களாலும், பஸ்கள், லாரிகளாலும் நிரம்பி வழிந்தன. கடற்கரைச் சாலை முழுவதும், வெளியூர்களிலிருந்து வந்திருந்த பஸ்களும், லாரிகளும்தான் நிறைத்துக் கொண்டிருந்தன.

     நீச்சல் குளத்தையும், மீன் காட்சிக் கூடத்தையும் ஒட்டியிருந்த ஓரிடத்தில் உள்பக்கமாகச் சாலையில் இறங்கி மணற்பரப்பை ஒட்டி இருந்த கடற்கரைத் தார் ரோட்டில் லாரி நின்றது.

     ”எல்லாரும் இறங்குங்க! அண்ணா சமாதி வந்தாச்சு. லாரி இங்கேயே நிக்கும். மறுபடி நாளைப் பொழுது சாயுறப்ப இங்கேயிருந்து ஊர் திரும்பும். அதுக்குள்ளார வந்திரணும்” என்று கண்மணி அறிவித்தாள்.

     ”அண்ணன் எங்கே போவணும்? தங்க வேற எடமில்லையானா எங்கூடவே வந்தா லாட்ஜ்லே தங்கிக்கலாம்! கட்சி ஆளுங்க இங்கியே பக்கத்துலே திருவல்லிக்கேணியிலே எனக்கு நான் வழக்கமாத் தங்குற ஒரு லாட்ஜ்லே இடம் போட்டு வச்சிருப்பாங்க” என்று முத்துராமலிங்கத்தையும் தன்னோடு கூப்பிட்டாள் கண்மணி.

     ”இல்லே! நான் என் வேலை விஷயமா எங்கப்பாரு சொல்லியனுப்பிச்ச ஒருத்தரைப் பார்க்கணும். நான் இந்த ஊருக்குப் புதிசு... இந்த அட்ரஸைப் பார்த்து எப்பிடிப் போகணும்னு மட்டும் சொன்னால் போதும்” என்று தன்னிடமிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையின் முகவரியைக் கண்மணியிடம் காண்பித்துக் கேட்டான் அவன். ‘எட்வர்ட் எலியட்ஸ் ரோடு’ - என்று குறித்திருந்தது அந்த முகவரியில்.

     ”இன்னிக்கு இருக்கிற கும்பலிலே டாக்ஸி ஆட்டோ எதுவும் கிடைக்கிறது கஷ்டம். பஸ்ஸிலே கும்பலா இருக்கும். அப்படியே இடம் பிடிச்சுப் போனாலும் உங்க இறங்கற இடம் புரிஞ்சு இறங்க முடியாது. உங்க உயரத்துக்குப் பஸ்ஸிலே நின்னீங்கன்னாக் கீழே தெருவைப் பார்க்க முடியறது சாத்தியமில்லே...” என்றாள், கண்மணி.

     ”வழி சொன்னீங்கன்னா நான் நடந்தே போயிறலாமில்லே?”

     அவனுடைய துணிவையும் நம்பிக்கையையும் கண்டு கண்மணி புன்முறுவல் பூத்தாள்.

     ”ஏன் சிரிக்கிறீங்க...?”

     ”இல்லே! அண்ணனுக்கிருக்கிற நம்பிக்கையைப் பார்த்துச் சிரிப்பு வந்திச்சு...”

     புத்தம் புதிய கட்சிக்கொடி பறக்கும் சைக்கிள் ரிக்‌ஷா ஒன்று அப்போது அங்கே எதிர்ப்படவே, ரிக்‌ஷாவைக் கைதட்டிக் கூப்பிட்டாள் கண்மணி.

     ”ரிக்‌ஷாவிலேயே போயிடறீங்களா? விவரம் சொல்லி அனுப்பறேன்.”

     நகர நாகரிகத்தின் போலிச் சாயங்கள் புரியாத காரணத்தால் அத்தனை தொலைவுக்கு ரிக்‌ஷாவில் பயணம் செய்வது கொஞ்சம் தயங்க வேண்டிய காரியம் என்பதைக் கூட முத்துராமலிங்கம் உணரவில்லை.

     ஆனால் அதற்கு என்ன செலவாகுமோ என்று மட்டுமே அவன் தயங்கினான்.

     ”அண்ணன் நடந்தே போய்ச் சேர்ரத்துக்குள்ளாரப் பாக்க வேண்டிய ஆளு வெளியே போனாலும் போயிறலாம். இங்கே மெட்ராஸ்லே உத்தியோகம் பாக்கற பெரிய மனுஷங்களைப் பார்க்கணும்னாக் காலையிலே ஒம்பது ஒம்பதரைக்குள்ளாரப் போயிரணும். இல்லாட்டி, வீட்டிலே அவுங்களைப் பார்க்க முடியாது.”

     ”அப்பச் சரி? நமக்குத் தோதுபடற வாடகையைப் பேசுங்க... என் கையில் வசதி அதிகம் இல்லே.”

     ”அடடே! அதுவா சங்கதி? நம்ம ஆளுக்கு ஒரு கஷ்டம்னா நாங்க விட்டுடுவமா? செலவுக்குப் பத்தாட்டி நான் தாரேன் அண்ணே! எங்கிட்ட வாங்கிப்பீங்கள்ளே...”

     ”இப்ப வேணாம்! அவசியம்னாக் கேட்டு வாங்கிப்பேன்.”

     கண்மணி ரிக்‌ஷாக்காரனோடு பேரம் பேசி அவனை இரண்டு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தாள். கட்சி அனுதாபம் கொஞ்சம் துணை செய்திருந்தது.



நிசப்த சங்கீதம் : முன்னுரை  1  2  3


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns3a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs