http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




19. மகிழ்ச்சிப் பயணம்

     அழகியநம்பி ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து போனான். பூர்ணா திரும்ப வருவாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அவ்வளவு துணிவாக அவளுடைய நாற்காலியில் போய் உட்கார்ந்து பைல்களையும், கடிதங்களையும் புரட்டியிருக்க மாட்டான். ஆசிரியர் வராத சமயத்தில் அவர் உட்காரும் நாற்காலியில் ஒரு பையன் அவரைப் போலவே கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து அவர் மேசை மேல் வைத்துவிட்டுப் போயிருந்த மூக்குக் கண்ணாடியையும் தலைப்பாகையையும் எடுத்து அணிந்து கொண்டு அவருடைய பிரம்பைக் கையில் எடுத்து அவரைப் போலவே நடித்துக் கோணங்கி செய்யும் சமயத்தில் ஆசிரியர் திடீரென்று வகுப்புக்குள் நுழைந்து பார்த்து விட்டால் பையனுக்கு எப்படியிருக்கும்?

     எதிர்பாராத விதமாகப் பூர்ணா திடீரென்று அறைக்குள் நுழைந்த போது அழகியநம்பி இதே நிலையை அடைந்தான். அந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கவும் தோன்றாமல், உட்காரவும் தோன்றாமல் தத்தளித்தான் அவன்.

     'பூர்ணா தன்னை அருகில் வந்து தாறுமாறாகத் திட்டப் போகிறாள். கூப்பாடு போட்டு இரைந்து பிரமநாயகம் உட்படக் கடையிலுள்ள அத்தனை பேரையும் அந்த அறைக்குள் கூட்டித் தன் மானத்தை வாங்கி விடப் போகிறாள்' என்றெண்ணிக் கலங்கிவிட்டது அழகியநம்பியின் மனம்.

     ஆனால், பூர்ணா அவனருகே வரவும் இல்லை, அவனைத் திட்டவும் இல்லை, கூப்பாடு போடவுமில்லை. அவள் புதிராக நடந்து கொண்டாள்.

     உள்ளே நுழைந்தவள் கதவிற்குப் பக்கத்திலேயே ஓரிரு விநாடிகள் அசையாமல் நின்றாள். அவன் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்து தான் முடித்து வைத்திருந்த பைல் கட்டுகளையும் கடிதங்களையும் உடைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை இமையாமல் உறுத்துப் பார்த்தாள். மறுகணம் வந்தது போலவே வெளியேறிச் சென்று விட்டாள். அவள் வந்த விதமும் போன விதமும் அவன் என்ன செய்கிறானென்று பார்த்து விட்டுப் போவதற்காகவே வந்தது போல் இருந்தது.

     ஒருவேளை பிரமநாயகத்திடம் தன் செயலைப் பற்றி ஏதாவது சொல்லுவதற்குப் போயிருப்பாள் என்று அவனும் எழுந்திருந்து அறைக்கு வெளியே வந்து பார்த்தான். அவள் பிரமநாயகத்தைத் தேடிக் கொண்டு போகவில்லை என்பது வெளியில் வந்து பார்த்ததுமே அவனுக்குத் தெரிந்துவிட்டது.

     பூர்ணா கடை வாசலிலிருந்து இறங்கித் தெருவில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள். திரும்பவும் அறைக்குள் வந்த அழகியநம்பிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

     பைல்களையும், கடிதங்களையும் முன்பு எப்படி அடுக்கி அவள் வைத்திருந்தாளோ, அப்படியே வைத்தான். கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான். சமையற்காரச் சோமுவைக் கூப்பிட்டுச் சபாரத்தினத்தை அழைத்துவரச் சொல்லி அனுப்பினான். சோமு சென்றதும் தன் அறைக் கதவைத் திறந்து குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தான் அழகியநம்பி.

     கவலைகளாலும், குழப்பங்களாலும் பயம் நிறைந்த எண்ணங்களாலும் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருந்தது அவனுக்கு. காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது, அதன் பின் தபாலில் வந்த பயமுறுத்தல் கடிதம், பூர்ணா அறைக்குள் வந்து பார்த்துவிட்டுப் பேசாமல் வேகமாக வெளியேறிச் சென்றது - எல்லாவற்றையும் சேர்த்து நினைத்த போது, 'பிழைப்பும் வேண்டாம். காசு சேர்க்கவும் வேண்டாம். ஊரில் போய்த் தெருப் பெருக்கியாவது பிழைக்கலாம். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்படியே அடுத்த கப்பலில் ஏறி ஊர் திரும்பிவிட்டால் என்ன?' - என்று ஒருவகை வெறுப்பும் விரக்தியும் அவனுக்கு உண்டாயின.

     வேலைவெட்டி ஒன்றும் இல்லாமல் குறிஞ்சியூரில் தகப்பனார் காலமான பின் சில காலம் சும்மா இருந்து குந்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கூட அவன் மனத்தில் இவ்வளவு கவலைகளோ, வேதனைகளோ, பயமோ இருந்ததில்லை. வேலை கிடைத்த பிறகு, புதிய இடத்துக்குப் புதிய நம்பிக்கைகளோடு வந்த பிறகு கவலைகள் குறையும் என்பார்கள். ஆனால், அவனுக்குக் கவலைகள் பெருகியிருந்தன.

     "என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்களாமே? என்ன செய்தி?" - என்று சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தார் சபாரத்தினம்.



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann19.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs