http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




29. அவநம்பிக்கைப் பேச்சுக்கள்

     குறிஞ்சியருவியில் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வருகிறபோது அவர்கள் அதே திட்டத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தார்கள்.

     "தீர்வை செலுத்தி ஒழுங்காகச் சாகுபடி செய்வதாக மனு அனுப்பினால் புறம்போக்கு நிலத்தை ஜாரி செய்து கொடுப்பதில் அதிகம் தகராறு இருக்காது. உன் விண்ணப்பத்தைக் கிராம முன்சீப் சிபாரிசு செய்து ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி ஊரில் அவர் வந்து புறம்போக்குத் தரிசைப் பார்வையிடுவார். உன்னைக் கூப்பிட்டு விசாரிப்பார். பின்பு மேலதிகாரிக்குச் சிபாரிசு செய்து அனுப்புவார். ஒரு மாதத்திற்குள் நிலத்தை உன் பெயருக்கு ஜாரி செய்து உன்னிடமிருந்து மகசூல்படி தீர்வை வசூலிக்கச் சொல்லிக் கிராம முன்சீப்புக்கு உத்தரவு வந்துவிடும்."

     "இதெல்லாம் இவ்வளவு விவரமாக உனக்கு எப்படித் தெரியும் முருகேசா?

     "என் தந்தை ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் என்பதை முன்பே உனக்குச் சொல்லியிருக்கிறேனே. அதற்குள் மறந்துவிட்டாயா?" - என்று முருகேசன் கூறவும் அழகியநம்பிக்கு அவனுடைய வார்த்தைகளில் நம்பிக்கை உண்டாயிற்று.

     "நிலம் கைக்கு வந்துவிட்டால் மட்டும் போதுமா? அதைப் பயன்படுத்தி ஒழுங்கு செய்வதற்கு ஏராளமாகச் செலவு ஆகுமே? நான் எங்கிருந்து பணம் புரட்டுவேன்? ஏற்கெனவே அப்பா வைத்துவிட்டுப் போயிருக்கிற கடன் வேறு இருக்கிறது." -

     "பணச் செலவுக்கும், கடன் வாங்குவதற்கும் பயப்படுகிறவன் இந்த மாதிரி ஆசைகளையும், இலட்சியங்களையும் வைத்துக் கொண்டு தொல்லைப்படக் கூடாது. அதுதான் அப்போதே சொன்னேன். பட்டினத்துப் பக்கம் உத்தியோகம் பார்க்கப் போனால் தான் பிழைக்கலாம். நீயோ உறுதியாக ஏர் பிடிக்கத் தான் போகிறேன் என்கிறாய். இன்னொருவனுடைய நிலத்தைப் பிடித்து உழுது கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டுக்கே உனக்குத் தேறாது. துணிந்து இரண்டாயிரம், மூவாயிரம், செலவழித்து இந்த மாதிரிப் புது முயற்சியில் இறங்கினால் இரண்டே வருஷத்தில் உன் கடன் அடைபட்டுப் போகும். இந்தக் கிராமத்திலேயே பெரியதொரு விவசாயப் பண்ணையை உருவாக்கி ஆளும் பெருமையை நீ அடைவாய். ஆரம்பத்தில் உன் உழைப்பைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்தவர்கள் ஆச்சரியப் படும்படி செய்யலாம்!"

     "அது சரி! அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இன்னொருவர் நிலத்தைக் குத்தகை பிடித்தால் எனக்கு ஆரம்பத்தில் அதிகம் செலவு இல்லை. நானூறு, ஐநூறு, செலவழித்து ஒரு ஜோடி மாடு மட்டும் வாங்கிக் கொண்டால் போதும். உழவுக்கும், இறவைக்கும் பயன்படும். நிலத்துக்காரர் உரம், உழவுக்கு ஒத்துக் கொடுப்பார்."

     "பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். நீ முதலில் கிராம முன்சீப்பைச் சந்தித்து உன் மனுவைக் கொடுக்க ஏற்பாடு செய்."

     "நீயும் கூட வா. வீட்டில் போய்ச் சாப்பிட்டுவிட்டு இரண்டு பேருமாகப் போய் அவரைச் சந்திப்போம். முடிந்தால் அப்படியே மனுவையும் எழுதிக் கொடுத்துவிடலாம். உன்னுடைய நம்பிக்கையின் பேரில் தான் நான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்."

     "கூடாது! எந்தக் காரியத்துக்கும் இன்னொருவருடைய நம்பிக்கையை விடத் தன்னம்பிக்கை தான் அவசியம்" - என்று சொல்லிச் சிரித்தான் முருகேசன். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். காப்பி, பலகாரம், ஆயிற்று. முருகேசன் மாடிக்குப் போனான். அழகியநம்பி அம்மாவுக்கு கொழும்பில் நடந்த விவரங்களைச் சொன்னான். அம்மா எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டாள்.

     "பிரமநாயகம் இனிமேல் என்ன ஆவார்?"

     "ஆவதென்ன? இலட்சக் கணக்கில் சர்க்காருக்குச் சேர வேண்டிய பணத்தை மோசடி செய்திருக்கிறார். ஒரு கொலையும் செய்திருக்கிறார். ஆயுள் தண்டனை - அல்லது தூக்குத் தண்டனைக்குக் குறைவாக எதுவும் கிடைக்காதென்று பேசிக் கொள்கிறார்கள்."

     "சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை. கடல் கடந்து போனால் அங்கும் உன் அதிர்ஷ்டம் இப்படி முடிந்து விட்டது. இனிமேல் என்ன செய்யப் போகிறாய்?"



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann29.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs