http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




32. நல்வினைகள் ஒன்று கூடுகின்றன

     காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? ஒரு மழைக்காலம், ஒரு கூதிர்காலம், ஒரு பின் பனிக்காலம், ஒரு முன் பனிக்காலம், ஒரு இளவேனிற் காலம், ஒரு முதுவேனிற் காலம் - ஆறு பெரும் பருவங்கள் ஓடும் சித்திரங்கள் போல் தோன்றி மறைந்துவிட்டன. அதற்கு மேலும் நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டன. இந்தச் சிறிய காலத்திற்குள் அழகியநம்பியின் வாழ்வில் தான் எத்தனை மாறுதல்கள்! பன்னீர்ச்செல்வத்தின் கடனை அடைத்துவிட்டு அவருக்கு முன்னால் நிமிர்ந்து நடக்கிறான் அவன். தென்காசியில் வாங்கியிருந்த கடனும் தீர்ந்துவிட்டது. அவனுடைய காய்கறிப் பண்ணையில் முழுமையாக இரண்டு சாகுபடிகள் முடிந்து விற்று முதலாகிவிட்டன. மூன்றாவது சாகுபடிப் பயிர்கள் பலனளிக்கும் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்தன. அவன் வீட்டில் திருமகள் விலாசம் பொங்கியது. பையனுக்கும் அவன் அதிர்ஷ்டத்திற்கும் ஊரில் திருஷ்டிபட்டு விடக் கூடாதே என்று அவன் தாய் பயந்தாள்.

     ஊரிலுள்ளவர்கள் அவனையும் ஒரு பெரிய மனிதனாக மதித்தார்கள். காந்திமதி ஆச்சி மனஸ்தாபத்தத மறந்து அவனைக் கூப்பிட்டனுப்பினாள். அவன் போனான். ஆச்சியோடு நாராயண பிள்ளையும் இருந்தார்.

     "என்ன தம்பீ? ஆச்சிக்கு முன்னாலேயே ஏதோ வாக்குக் கொடுத்திருந்தீர்களாமே? உங்களுக்கும் வயசாகிறது? ஆண்டவன் புண்ணியத்தில் உழைத்து முன்னுக்கு வந்து நன்றாயிருக்கிறீர்கள். கலியாணம் செய்து கொள்கிற வயசு தானே இது? உங்களுக்கு முடிந்துவிட்டால் பின்பு உங்கள் தங்கை கலியாணமும் நல்ல படியாக நடக்கும்."

     நாராயண பிள்ளை காந்திமதி ஆச்சியின் சார்பில் பேச்சை ஆரம்பித்தார்.

     சிறிது நேரம் அவருக்குப் பதில் சொல்லாமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான் அழகியநம்பி. அவன் மௌனத்தைக் கண்டு ஆச்சியும் வாய் திறந்தாள்: "உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம் தம்பி! - நான் வற்புறுத்தமாட்டேன். நீங்கள் முன்போலவா இருக்கிறீர்கள்; இப்போது? பலவகையிலும் முன்னேற்றமடைந்து வசதியான விதத்தில் இருக்கிறீர்கள். எத்தனையோ பெரிய இடங்களிலிருந்து உங்களுக்குப் பெண் கொடுக்கத் தயாராயிருப்பார்கள்."

     ஆச்சியின் சொற்கள் பொதுவாகக் கூறப்பட்டவை போலிருந்தாலும் அவனைக் குத்திக் காட்டுவதாகத் தோன்றின அவனுக்கு.

     மேலும் சிறிது நேரம் யோசித்துக் கொண்டே பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான் அவன்.

     "என்ன தம்பீ யோசனை? மனத்தில் படுவதைச் சொல்லுங்கள். தயங்க வேண்டாம்." - என்று துரிதப்படுத்தினார் நாராயண பிள்ளை.

     தனக்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவனைப் போல் தலைநிமிர்ந்தான் அழகியநம்பி. அப்போது உட்புறத்தில் கதவோரமாக அந்த இரண்டு கண்கள் ஏக்கத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான். பதினேழு மாதங்களாக அவனைக் காணாமல் ஏமாந்து ஏங்கிய கண்கள் அவை. 'இனியும் என்னால் பொறுக்க முடியாது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று அவனைக் கெஞ்சியது அந்தப் பார்வை. "மணியக்காரரே! இந்த மாத முடிவிற்குள் ஏதாவது நல்ல முகூர்த்தம் இருக்கிறதா? - பார்த்து ஏற்பாடு செய்து விடுங்கள். எனக்குப் பூரணமான சம்மதம் தான். நான் தயார்," - என்று கதவுப் பக்கம் சென்ற தன் பார்வையைத் திருப்பி அவரை நோக்கிக் கூறிவிட்டு எழுந்திருந்தான் அவன்.

     'சம்மதிக்க மாட்டான்' - என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அவன் சம்மதம் ஆச்சரியத்தை அளித்தது.

     "உட்காருங்கள் தம்பீ! கொஞ்சம் பொறுத்திருந்து போகலாம். கோமுவை அனுப்பி உங்கள் அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொல்லுகிறேன். நாலு பெரியவர்களையும் வைத்துக் கொண்டு இந்த நல்ல நேரத்திலேயே வெற்றிலைப் பாக்கு மாற்றி நிச்சயம் செய்து கொண்டு விடலாம்."

     "தேவையானால் செய்து கொள்ளுங்கள்! நான் நிலத்துப் பக்கம் போகவேண்டும். எனக்கு வேலை இருக்கிறது." - என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பதிலுக்குக் காத்துக் கொண்டிருக்காமல் கிளம்பி விட்டான் அவன்.



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann32.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs