21 சுதர்சனன் தன்னுடைய தனிப் பயிற்சிக் கல்லூரியிலேயே வேலை பார்க்க இசைந்தது ரகுவுக்கு ஒரளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். தனிப் பயிற்சிக் கல்லூரிக்கு முக்கியம் மாணவர்களைக் கவரும் சிகப்புத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களே. அப்படித் தனித்தன்மை சுதர்சனனுக்கு இருப்பதாக நினைத்தான் ரகு. ஏனோதானோ என்று வகுப்பு நடத்துவது சொற்களை முழுகிப் பூசி மெழுகுவது, இவையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் சுதர்சனனுக்கு வராது. செய்வதை முழு நம்பிக்கையோடும் பூர்ண திருப்தியோடும் செய்யும் திருந்திய தன்மை அவனுக்கு உண்டு என்பதை ரகு அறிவான். சுதர்சனன் தன்னுடைய நண்பனின் கல்லூரியில் முறையாக வேலைக்குச் சேர்ந்த மறுநாளே புலவர் பட்டத்துக்கும் தனிப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் போவதாகப் பத்திரிகைகளில் தடபுடலாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. “புகழுக்கும் கிண்டலுக்கும் நடுவிலுள்ள எல்லைக் கோடு மிக மிகச் சிறியது. புகழ் ஓர் இழை பிசகினாலும், அதுவே கேலிக் கூத்தாகி விடும். இந்த விளம்பரத்தில் அப்படிக் கேலிக் கூத்துத்தான் தெரிகிறது. மலிவான வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துவது போல் அறிவு பூர்வமானவற்றின் நயத்தைக் கொச்சையாக எடுத்துச் சொல்லி விளம்பரப் படுத்தக் கூடாது. அது எனக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை” - என்று அவன் இதைப் பற்றி ரகுவிடம்கூட வாதாடினான். “அப்படி எல்லாம் விளம்பரம் போட்டால்தான் நாலு ஆட்கள் சேரும்” என்றான் ரகு. காலை ஏழு மணி முதல் ஒன்பதரை வரையும் மாலை ஆறு மணி முதல் எட்டரை வரையும் அங்கே வகுப்பு நேரங்களாக இருந்தன. பத்து நாட்களில் தபால் மூலமும் நேரிலுமாகப் பதினைந்து பேர் புலவர் வகுப்புக்களில் படிப்பதற்கு மனுச் செய்திருந்தார்கள். அதில் பதினோரு பேர் ஆண்கள். நாலு பேர் பெண்கள். எல்லாரும் அநேகமாக ஆரம்பப் பள்ளி, நடுத்தரப் பள்ளிகளில் ஆசிரியப் பணி புரிபவர்களாக இருந்தார்கள். ஏழு பேர் ஏற்கெனவே வித்வான் முதல் நிலைத் தேர்வு தேறி இறுதி நிலைத் தேர்வுக்காகவும், எட்டுப் பேர் முதல் நிலைத் தேர்வுக்காகவும் சேர்ந்திருந்தார்கள். முதல் நிலைத் தேர்வுக்கு எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து ஆண்டு முழுவதற்குமாக ரூபாய் நானூறும், இறுதி நிலைக்கு ரூபாய் ஐநூறும் சேரும்போதே முன் பணமாகக் கட்டிவிட வேண்டும் என்று ரகு நிபந்தனை விதித்திருந்தான். புலவர் வகுப்புக்கு மட்டுமே வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன்பே ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் முன் பணமாகக் கையில் வந்து சேர்ந்துவிட்டது. வேறு பிரிவுகளான, எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.சி., பி.ஏ., எம்.ஏ.வகுப்புகளுக்குச் சேர்ந்த மாணவர்கள் வகையில் முப்பதிலிருந்து முப்பத்தையாயிரம் வரை கிடைக்கும் என்றும் தெரிந்தது.
பெரிய நகரங்களில் கல்வியும் ஒரு புதிய வியாபாரம் ஆகியிருப்பது புலப்பட்டது. படிப்பதற்கு ரேட், பாஸ் பண்ணுவதற்கு ரேட், கிளாஸ் வாங்குவதற்கு ரேட் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லாவற்றிற்கும் ரேட்டுகள் ஏற்பட்டிருந்தன.
“சும்மா வகுப்புக்கு வகுப்பு முடிஞ்சதை முடிஞ்சவறை நடத்தினால் போதும். கடைசியா எல்லாம் சிண்டிகேட் சிதம்பரநாதன் பார்த்தும்பாரு” என்று சக ஆசிரியரான ஒருவர் சுதர்சனனிடம் சிரித்துக்கொண்டே சொல்லியிருந்தார். “உங்க பிடிவாதம் உயர்ந்த லட்சியமா இருக்கலாம். ஆனால் இது மாதிரி டூடோரியல் காலேஜிலே அதுபோல இலட்சியங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. இங்கே வர்ரவங்களுக்கும் படிக்கிற ஆசை இல்லே. எப்படியாவது பாஸ் பண்ற ஆசை மட்டும்தான் உண்டு. சொல்லிக் கொடுக்கிறவங்களுக்கும் படிக்கிறவங்களைப் பாஸ் பண்ணி வைக்கிற ஆசை மட்டுமே இருந்தால் போதுமானது.” “இது ரொம்பப் பரிதாபகரமான விஷயம்” என்றான் சுதர்சனன். மேற்கூறிய விதத்தில் சக ஆசிரியர் தன்னிடம் பேசியது எவ்வளவு தூரம் சரியானது என்பது புலவர் முதனிலை வகுப்புக்குச் சேர்ந்திருப்பவர்களுக்கு முதல் நாள் பாடம் எடுத்தபோது சுதர்சனனுக்கே அநுபவ பூர்வமாகத் தெரிந்தது. சேர்ந்திருந்த எல்லாரும் எப்படியாவது பாஸ் பண்ணிப் பட்டத்தை வாங்கிக் கொள்ளும் அவசரத்தில்தான் சேர்ந்திருந்தார்கள். சில பேருக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்துப் பற்றிக்கூட ஒரு விவரமும் தெரிந்திருக்கவில்லை. ‘தமில் வால்க’ என்று எழுத மட்டும் தெரிந்த அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிப் பெருக்கான காலத்தில் இப்படிப்பட்ட தமிழ்ப் புலவர்கள்தான் உருவாக முடியுமோ என்று கூடச் சந்தேகமாக இருந்தது. அரசன் சண்முகனாரும், கதிரேசன் செட்டியாரும், தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரும், சோமசுந்தர பாரதியாரும் தமிழ்ப் பயிற்றிய காலத்தில் வெறும் உணர்ச்சிப் பெருக்கு அடங்கியும், தமிழ் அறிவு ஓங்கியும் இருந்தது. இன்றோ உணர்ச்சிப் பெருக்கே அறிவின்மையை மறைக்கும் போர்வையாக அமைந்து பல வெற்றுணர்ச்சியாளர்களைப் பாதுகாத்து விடுகிறது. இந்தப் பாதுகாப்புத்தான் இன்று பலரைக் காக்கும் கவசமாகவும் இருக்கிறது என்பதைச் சுதர்சனன் நன்கு உணர்ந்திருந்தான். “பாஸ் மார்க் எவ்வளவு சார்? முதல் வகுப்பில் தேற எவ்வளவு மார்க் வாங்கணும்? அநேகமா எங்களைப்போல் பிரைவேட்டா எழுதறவங்களுக்கு கிளாஸ் கிடைக்கிறது கஷ்டம்ங்கிறாங்களே? தமிழ்க் கல்லூரிகளிலே படிக்கிறவங்களுக்குத்தான் கிளாஸ் கிடைக்குமாமே?” என்றெல்லாம் மாணவர்கள் முதல் வகுப்பிலேயே சுதர்சனனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். கல்வி, படிப்பு, ஞானம், அறிவு எல்லாம் வெறும் மார்க், வேட்டை ஆகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை வேண்டா வெறுப்பாகவும், அருவருப்போடும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் சுதர்சனன். கற்பிப்பதற்கு ஞானவான்கள் தேவையில்லை; மார்க் தரகர்களே போதும் என்று நிரூபணமாகிவிட்ட காலத்தில் கற்பிப்பதற்கும் ஞானவான்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் புரிந்தது. இன்றைய கல்விக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லைதான். இன்றைய கல்வி என்பது ஓர் ஏற்பாடு மட்டுமே. குடிதண்ணீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் போல் கல்வி வசதியும் ஒரு திட்டமாக இருக்கிறது. அதில் போய் ஞானம், உள்ளுணர்வு, அறிவுக்கூர்மை இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருக்கும் அதற்கு நேரமும் அவகாசமும் அவசியமும் இல்லை. கத்தை கத்தையாக நோட்ஸ், கேள்வி பதில் தயாரித்து ‘சைக்ளோஸ்டலை’ செய்து வாரா வாரம் மாணவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று ரகு வற்புறுத்தினான். அவன் சொல்லியபடி செய்வதாக இருந்தால் பாடங்ககளை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. நோட்ஸ் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். ‘டூட்டோரியல் காலேஜ்’ என்பதற்குக் கீழே ‘இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கல்வி விற்கப்படும்’ என்றும் சேர்த்து விளம்பரம் செய்து விடலாம் போல் இருந்தது. அந்த வகையில் தான் எல்லாக் காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் சுதர்சனன் தன்னளவில் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. மாணவர்களை அறிவுத் தாகமுள்ளவர்களாக மாற்ற முயன்றான். தொடக்கத்தில் அம்முயற்சி கசாப்புக் கடை முகப்பில் அமர்ந்து கொண்டு ஜீவகாருண்ய உபதேசம் செய்வதுபோல் டூட்டோரியலுக்குப் பொருந்தாததாக இருந்தது, என்றாலும் நாளடைவில் பயனளிக்கத் தொடங்கியது. மாணவர்கள் அவனுடைய திறமைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியவில்லை. அவனுடைய நேர்மையும் துணிவும் அவர்களுக்குப் பிடித்திருந்தன, பொய் சொல்லவோ பூசி மெழுகவோ அவன் ஒரு போதும் முயலவில்லை. ஒரு நாள் வகுப்பில் தன் பழைய பேராசிரியர் ஒருவர் பெயரைச் சொல்லி “சங்க காலத்தில் சாதிப் பாகுபாடே கிடையாது என்று அவர் எங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். நீங்க சாதிப் பாகுபாடு இருந்தது என்கிறீர்களே! எப்பிடி சார் அது பொருந்தும்!” என்று மாணவன் ஒரு கேள்வி கேட்டான். இன்றுள்ள எல்லாமே சங்க காலத்திலும் உண்டு என்பது போலவே பலர் புத்தகங்கள் எழுதியும் பேசியும் ஒரு போலியான சுகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதைக் கலைத்து அல்லது மறுத்து உண்மையைப் பேச முற்படுகிறவர்களை எல்லாம் தமிழ்த் துரோகி என்று கூசாமல் வசை பாடத் தொடங்கினார்கள். சுதர்சனன் இதற்கு அஞ்சியதில்லை. வர்ணாசிரம தருமத்தையும், சாதி முறைகளையும் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு அவை இந் நாட்டில் இருந்ததே இல்லை என்றும் சொல்லுகிற ஆராய்ச்சிக்கு இரட்டை முகங்கள் உண்டு. “நம்மிடமும் தவறுகள் இருந்திருக்கின்றன. இனியாவது அவற்றை அகற்றப் பாடுபடுவோம்” என்ற விதத்தில் அணுகுவதைச் கதர்சனன் ஒப்புக்கொள்ளத் தயங்குவதே இல்லை. “நம்மிடம் தவறுகளே இருந்ததில்லை. அவை அனைத்தும் இடைக்காலத்தில் பிறரால் புகுந்தவை” என்பது போல் விளக்கங்களைச் சுதர்சனன் ஏற்பதில்லை. ‘தவறும் செய் திருக்கிறோம்’ என்பதை எவன் மறுக்கிறானோ அவன் திருந்தவே முடியாதவன் என்பது சுதர்சனனின் அழுத்தமான கருத்தாக இருந்து வந்தது. தன் புண்ணைத் தானே சொரிந்து கொண்டு சுகம் காணுவது போன்ற ஆராய்ச்சிகளில் அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இப்படிச் சுகம் காணுகிறவர்களை வகுப்பு நாட்களிலும் மேடைகளிலும் அவன் நிறைய எதிர்த்திருக்கிறான். பொய்யான சுகங்கள் ஒரு போதும் அவனுக்கு விருப்பமாயிருந்ததுமில்லை. திருப்தியளித்ததும் இல்லை. பொய்ம் முகங்கள் : நூல் முகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |