http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




2

     பெண்களோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் சிறிதும் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது.

     பரிபூரணமாக இரண்டு கண்களிலும் ஒத்திக் கொண்டு வணங்குவதற்கும் அதிகமான மரியாதை எதையாவது செய்ய முடியுமானால் அதையும் செய்யலாம் போல அத்தனை அழகிய பாதங்கள் தாம் அவை. வெளேரென்று சுத்தமான நகங்களுக்குக் கீழே பவழ மொட்டுப் போல நுனிகளோடு வரிசையாய் முடியும் விரல்கள். அதன் அடிப்புறம் கீழ்ப்பாதத்தில் சிவப்பு நிறம் குன்றிப் பளீரென்று தெரியும் வெண் பளிங்கு நிறம் தொடங்குகிறது. எதிரே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே திரையை நன்றாக விலக்கிவிட்டு வெளியில் வந்த அந்தப் பெண் திரையில் எழுதியிருந்த ஏராளமான கிளிகளுக்கு நடுவேயிருந்து விடுபட்டுத் தனியே பறந்து வந்த ஒற்றைப் பச்சைப் பசுங்கிளியாய்த் தோன்றினாள்.

     இன்னும் நன்றாகச் சொல்ல வேண்டுமானால் வைகறையில் ஒலிக்கும் பூபாளத்தைப் போல அந்த நேரத்தின் ஒரே அழகு தானேயாய், அந்த இடத்தின் ஒரே அழகு தானேயாய் அங்கு வந்து நின்றாள் அந்தப் பெண்.

     "என் மகள் பாரதி..." என்று சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் பெண்ணின் பக்கமாய்த் திரும்பி, "இவர் நம்முடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராவதற்காக விண்ணப்பம் போட்டிருக்கிறார். பெயர் சத்தியமூர்த்தி" என்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார் பூபதி. முதற் பார்வையின் முதற்கணத்திலேயே தன்னியல்பாக நேர்ந்து முடிந்துவிடுகிற பல அறிமுகங்கள் பெயரும் ஊரும் சொல்லாமலே கவனிக்க வேண்டுமென்ற கவர்ச்சியிலோ, ஆர்வத்திலோ, தற்செயலாக நேர்ந்தாலும் நடுவில் ஒருவர் இருந்து பேசியோ, புனைந்துரைத்தோ, செய்து வைக்காது இயற்கையாக நேரும் அந்த அறிமுகமே முதன்மையானதாயிருக்கிறது. அவளுடைய கண்கள் தாமாகவே முன்சென்று தரையில் பூத்துக் கிடக்கும் செந்தாமரைகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களை முதன் முதலில் தனக்கு அறிமுகம் செய்து கொண்டன. அவனுடைய கண்களோ கிளிகள் பறக்கும் திரையின் நடுவே வண்டுகள் பறப்பது போல் துறுதுறுவென்ற கண்களோடு தெரிந்த அந்தக் கவர்ச்சிகரமான முகத்தை அறிமுகம் செய்து கொண்டன. அதற்குப் பிறகு இரண்டாவதாக யார் இன்னாரென்று நடுவில் வேறொருவர் சொல்லி விளக்கிச் செய்து வைத்த அறிமுகம் தான் செயற்கையாயிருந்தது.

     பெண்ணிடம் ஏதோ சொல்லி அவளை உள்ளே அனுப்பிய பின் மறுபடியும் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி இண்டர்வ்யூவைத் தொடர்ந்தார் பூபதி. கண்டிப்பாகப் பேசுவது போல் அவருடைய பேச்சு இருந்தாலும், அவர் அவனுடனே உரையாடும் நேரத்தை வளர்த்துக் கொண்டு போக விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

     "மிஸ்டர் சத்தியமூர்த்தி! எங்கோ ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த மலைநாட்டு நகரத்தில் ஒரு கல்லூரியை நான் எதற்காக நடத்திக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? கல்வியை வளர்ப்பதைவிட அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும்?"

     "மன்னிக்க வேண்டும்! என் முயற்சியையும் மீறி நடந்த தவறு இது. நான் வேண்டுமென்றே இப்படித் தாமதமாக வரவில்லை."

     பூபதி அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிச் சிரித்தார். பின்பு அவருடைய கேள்விகள் வேறு விதமாகத் திரும்பின. சத்தியமூர்த்தியின் கல்வித் திறனையும், தகுதிகளையும் அறிந்து கொள்ள முயலும் கேள்விகள் அவரிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிறந்தன. அவற்றில் சில கேள்விகள் அவனை ஆழம் பார்ப்பவையாகவும் இருந்தன.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs